search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus driver"

    48 மாணவர்கள் பஸ்சில் இருக்க சாலையில் ஆர்டிஓ அதிகாரிகள் நிற்பதை கண்ட டிரைவர், பஸ்ஸை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டமெடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நாதபுரம் என்ற பகுதியில் கடந்த வாரம் 48 பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்சின் டிரைவர் சாலை ஓரம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிற்பதை கண்டுள்ளார். உடனே, பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களை அப்படியே தவிக்க விட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளார்.

    இதனை அடுத்து, பேருந்தில் இருந்த மாணவர்களை ஆர்டிஓ அதிகாரிகள் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டு பஸ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நிர்வாகிகள் வந்து பேசிப்பார்த்தும், டிரைவர் வந்தால்தான் பஸ்சை திருப்பி ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    17 பேர் செல்லக்கூடிய சிறிய பஸ்சில் 48 மாணவர்கள் இருந்துள்ளனர். இதனால், அதிகாரிகளை கண்டு பயந்த அந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஓடியதாக தெரியவந்துள்ளது. 
    திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது50). இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் ஜெயா (35) என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நான் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாகவே என் மனைவியின் நடத்தையில் சற்று மாற்றம் தெரிந்தது. சம்பவத்தன்று வேலை விட்டு வீட்டிற்கு வந்தபோது ஜெயா மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

    இது குறித்து எனது குழந்தைகளுடன் அடிக்கடி சில செல்போன் எண்களில் பேசி வந்ததாக கூறி உள்ளனர். அந்த எண்களை வைத்து அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது. அவரையும் தற்போது காணவில்லை. எனவே அவர்தான் எனது மனைவியை கடத்தி சென்றிருக்க கூடும் என சந்தேகம் அடைகிறேன். எனது மனைவியை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் மரணம் அடைந்தார். பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பயணிகள் உயிர் தப்பினர்.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 45). இவர் ஆந்திர மாநில போக்குவரத்து துறையில் 15 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராணி (வயது 35) என்ற மனைவியும் விஷால் (வயது 9), நிவாஸ் (வயது 7) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அருணாசலம் திருமலையில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். இரவு மீண்டும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமலைக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 50 பயனிகள் இருந்தனர். பஸ் செங்குன்றத்தை அடைந்தபோது அருணாசலத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

    உடனே அவர் சென்குன்றம் பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தி அங்குள்ள மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். பின்னர் பஸ் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு பஸ் ஊத்துக்கோட்டையில் சிறுது நேரம் நின்று விட்டு திருமலைக்கு புறப்பட்டது.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிச்சாட்டூரில் அருணாசலத்துக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு சாலையோரமாக பஸ்சை நிறுத்திய அருணாசலம் அங்குள்ள மருந்து கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். அதன் பின்னர் சுமார் 100 மீட்டர் சென்றதும் பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்தார். அங்கேயே அவர் இறந்து விட்டதும் தெரியவந்தது. இறக்கும் நேரத்தில் தங்களை காப்பாற்றிய டிரைவரை பார்த்து பயணிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

    இது குறித்து பிச்சாட்டூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். பின்னர் மாற்று டிரைவர் மூலம் பயணிகள் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
    பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பொள்ளாச்சி:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி வந்துகொண்டிருந்தது.

    பஸ்சில் 70-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ்சை விஜய் என்பவர் ஓட்டினார். பஸ் காங்கயத்தில் கிளம்பியது முதலே டிரைவர் தாறுமாறாக இயக்கியுள்ளார். பல இடங்களில் எதிரே சென்ற வாகனங்கள், முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டினார்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் ஓட்டுனரை எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், பொள்ளாச்சி அருகே வந்த பஸ் ராஜேஸ்வரி திடல் பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்ற அங்கலக்குறிச்சியை சேர்ந்த தனபாக்கியம்(50) என்ற பெண் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்த பஸ் டிரைவர் விஜய்க்கு தர்ம அடி கொடுத்து மகாலிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செல்போன் பேசியவாறு, பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது. #Cellphone #BusDriver
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை இயங்கும் முள்ளுப்பாடியை சேர்ந்த முருகானந்தம் (வயது 28) என்பவர் பஸ் ஓட்டும்போது அடிக்கடி செல்போன் பேசுவதாக பயணிகள் புகார் கூறினர்.

    இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு இந்த பஸ் சென்றபோதும் அவர் செல்போன் பேசியவாறு பஸ்சை ஓட்டினார். இதை வீடியோவாக பதிவு செய்த சில பயணிகள் ஆதாரத்துடன் பொள்ளாச்சி டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    புகாரையடுத்து, நூதன தண்டனை வழங்க முடிவு செய்த டி.எஸ்.பி. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரை அழைத்து, பஸ் டிரைவர் முருகானந்தத்தை நேற்று (வியாழக்கிழமை) ஒருநாள் முழுவதும் பொள்ளாச்சி காந்திசிலை சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.

    இதையடுத்து, நேற்று காலையில் இருந்து மாலை வரை முருகானந்தம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த நூதன தண்டனையால், போக்குவரத்து விதிகளை டிரைவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். #Cellphone #BusDriver
    ×