என் மலர்
நீங்கள் தேடியது "Drunken driving"
- நெல்லை மாநகரில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
- குடிபோதையிலும், அஜாக்கிரதையாகவும், வாகனம் ஓட்டுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 308-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகரில் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக குடிபோதையிலும், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வாகனம் ஓட்டியும், தான் செய்யும் செயல் மரணத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிந்தும் அவ்வாறு வாகனம் ஓட்டுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 308-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில் இவ்வாறு வாகனம் ஓட்டிய நெல்லை டவுன் நயினார் மகன் தினேஷ்குமார், நயினார் மகன் முத்து ஜெகன், கணபதி என்பவர் மகன் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 308-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்கள் பள்ளிகளுக்கோ, பொது இடங்களிலோ இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்களுக்கு இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை கள் மேற்கொள்ள நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாகனங்களை ஓட்ட அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி வந்துகொண்டிருந்தது.
பஸ்சில் 70-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ்சை விஜய் என்பவர் ஓட்டினார். பஸ் காங்கயத்தில் கிளம்பியது முதலே டிரைவர் தாறுமாறாக இயக்கியுள்ளார். பல இடங்களில் எதிரே சென்ற வாகனங்கள், முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டினார்.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் ஓட்டுனரை எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இயக்கியுள்ளார்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே வந்த பஸ் ராஜேஸ்வரி திடல் பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்ற அங்கலக்குறிச்சியை சேர்ந்த தனபாக்கியம்(50) என்ற பெண் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்த பஸ் டிரைவர் விஜய்க்கு தர்ம அடி கொடுத்து மகாலிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews






