search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus driver"

    • ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.

    மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பஸ்சில் வாடிக்கையாக வரும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் ஈஸ்வரன் (வயது 26). இவர் தனியார் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் அந்த பஸ்சில் வாடிக்கையாக வரும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    திருமணமான அந்தப் பெண்ணிடம் பழகுவதை நிறுத்தக் கோரி அவரது தம்பி மற்றும் உறவினர்கள் ஈஸ்வரனை எச்சரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் நண்பரை சந்திக்க ஈஸ்வரன் வந்துள்ளார். அப்போது அவரைத் தேடி வந்த சிலர் அவரிடம் பேச வேண்டும் என கூறி அவர்கள் வந்திருந்த காரில் ஏறச் சொன்னபோது ஈஸ்வரன் மறுத்துள்ளார். இதனால் அவரை தாக்கி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து உஷாரான போலீசார், பல்லடம் நால் ரோட்டில் வைத்து அந்த காரை மடக்கி பிடித்தனர் .பின்பு அதிலிருந்த ஈஸ்வரனை மீட்டனர். அவரை கடத்திய செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), தமிழ் (23), சபரிநாதன்(22), வினோத்குமார்(25), சுந்தர் (24),அருண்குமார்(24),நித்திஷ்(25) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

    • கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.
    • அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளநால்லி அடுத்துள்ள கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் (59). தனது தாயார் சரஸ்வதி (82) என்பவருடன் குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை சம்பூர்ணம் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.

    பின்னர் சிறிது நேரத்தில் தீ மலமலவென்ன குடிசையில் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வீட்டுக்குள் புகை மண்டலமாக காட்சியளித்தது. சரஸ்வதியால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

    அப்போது ஈரோட்டில் இருந்து கொடுமுடி நோக்கி 43-ம் நம்பர் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை மனோகரன் என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் மூதாட்டி வீட்டில் தீ எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகரன் உடனடியாக பஸ்சை நிறுத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரஸ்வதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். இதனால் மூதாட்டி சரஸ்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் எரிந்து சேதமானது.

    உரிய நேரத்தில் சமயோதிகமாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51).
    • நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51). இவர் புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், திருமணமான மகளும், மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடையப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேலப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் என்பவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப் பட்டு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் மகன் முருகன் (45). அரசு பஸ் டிரைவர். இவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி முருகனை தேடி னார்கள். ஆனால் அவரை காணவில்லை. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முருகனின் நிலை என்ன? அவா் என்ன ஆனார்? என்று தெரியா மல் வாணாபுரம் மற்றும் மணலூர்பேட்டை போலீ சாரும், தீயணைப்புதுறை யினரும் முருகனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மூங்கில் துறைபட்டை அடுத்த சுத்த–மலை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார்.
    • கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அரசு பஸ் டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுண் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் போது ஊஞ்சலூர் அருகில் மணிமுத்தூர் பஸ் நிறுத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி செல்வதற்கு பஸ்சை நிறுத்தி உள்ளனர்.

    பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் ஊஞ்சலூர் வரை நடந்தே சென்று பஸ் திரும்பி வரும் வரை காத்து இருந்தனர்.

    கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததால் பஸ்சை பெண்கள் விட்டு விட்டனர்.

    இது போன்ற ஊழியர்கள் மீது உடனடியாக நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து கொடுமுடி கிளை மேலாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

    • கடலூர் அருகே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    • டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து பாகூருக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென்று நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி வீண் தகராறு செய்து அதில் இருந்த டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் பெரிய காட்டு பாளையம் சேர்ந்தவர்கள் பசுபதி, ராகுல் தமிழரசன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் அருகே பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் கோபாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (31). இவர் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி வழியாக ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ்சில் டிரைவாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் போது இருமன்குளத்தை சேர்ந்த மூக்கையா மகன் சந்திரன் என்பவர் முன்வாசல் வழியாக ஏறியுள்ளார்.

    அதற்கு டிரைவர் அழகர்சாமி முன்வாசல் வழியாக பெண்கள் ஏறுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பின்வாசல் வழியாக ஏறுங்கள் என சத்தம் போட்டாராம். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வேகேட் அருகில் இறங்கிய சந்திரன் நடந்த சம்பவம் பற்றி ஊரில் கூறியுள்ளார்.

    இதை தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த சுரேஷ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் இருமன்குளம் பஸ்நிறுத்தத்தில் நின்றனர். பஸ் சங்கரன்கோவிலுக்கு திரும்ப வரும் போது அவர்கள் டிரைவர் அழகர்சாமியிடம் இதுபற்றி கேட்டு தகராறு செய்தனர்.

    தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அழகர்சாமியை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இது பற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அரசு பஸ்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் பழனி-அந்தியூர் அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
    அரச்சலூர்:

    சேலத்தில் இருந்து கொடைக்கானல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    பஸ்சை பழனிச்சாமி (வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ஆறுமுகம் (47) இருந்தார்.

    இதேபோல பழனியில் இருந்த அந்தியூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை சிவகாசி (36) என்பவர் ஓட்டி வந்தார். முருகேஷ் (45) கண்டக்டராக இருந்தார்.

    இன்று காலை 7.45 மணி அளவில் 2 பஸ்களும் அரச்சலூரை அடுத்த தலவுமலை அருகே உள்ள வெள்ளக்கவுண்டன்வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட பழனி- அந்தியூர் பஸ் டிரைவர் சிவகாசி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

    இருந்தபோதிலும் அந்த பஸ்சின் பின் பகுதியில் வலது புறத்தில் சேலம்- கொடைக்கானல் அரசு பஸ் மோதியது. இதனால் ரோட்டோரத்தில் இருந்த வேப்பமரத்தை நோக்கி பழனி-அந்தியூர் பஸ் சென்றது.

    அப்போதும் சுதாரித்துக் கொண்ட டிரைவர் வேப்ப மரத்தின் மீது பஸ் நேருக்கு நேர் பலமாக மோதாமல் இருக்க திருப்பினார். இருந்த போதிலும் பஸ்சின் பின் பகுதி வேப்ப மரத்தின் மீது மோதியது.

    இந்த விபத்தில் பழனி- அந்தியூர் பஸ்சின் பின் பகுதியும், சேலம்-கொடைக்கானல் பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. சேலம்-கொடைக்கானல் பஸ்சில் இருந்த பயணிகள் தப்பினர்.

    ஆனால் பழனி-அந்தியூர் பஸ்சின் பின் பகுதியில் அமர்ந்து பயணித்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.

    பலியானவர் பெயர் கவுசிக் (34). திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர். கார் டிரைவராக இருந்தார். அவருக்கு ஜேஸ்மின் (26) என்ற மனைவியும், அப்ரின் (8) என்ற மகளும், ஆஷிக் (6) என்ற மகனும் உள்ளனர்.

    தகவல் கிடைத்ததும் அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியான கவுசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த தீபக் (27), பிரேம்குமார் (17), செந்தில் (43), குமாரசாமி (43), யுவராஜ் (24) உள்பட 6 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அரச்சலூர் பகுதியில் இன்று பரபரப்பு நிலவியது. #tamilnews
    சேலத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற பஸ்சில் டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு இறக்கையிலேயே இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏ.கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசுந்தரரானாந்த (வயது 38). இவர் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு பஸ் புறப்பட்டது. சேலம் பொன்னம்மாபேட்டை அருகில் சென்றபோது திடீரென்று டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தவாறே இறந்துவிட்டார்.

    இதுகுறித்து கண்டக்டர் அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே அங்கு சென்று டிரைவர் கிருஷ்ணா உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இவருக்கு மதுகாம்பாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    சீருடை அணிவதிலும் விதிமுறையை அரசு பஸ் டிரைவர் ஒருவர் கடைபிடித்து வருகிறார்.
    மானாமதுரை:

    அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு காக்கி நிற சீருடையும், 15வருட அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீல நிற சீருடையும் வழங்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2செட் சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகிறது. சீருடைக்கு தேவையான துணிகள் வழங்கப்படும் ஊழியர்கள் அதனை வேண்டிய அளவிற்கு தையல்கலைஞர்களிடம் கொடுத்து அவர்களின் அளவிற்கு ஏற்ப தைத்து கொள்வார்கள்.

    போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை இயக்கும் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பேட்ஜ், சட்டை பையில் பெயர் பேட்ஜ், சட்டை பட்டன்கள் போக்குவரத்து கழக அடையாளம் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் பல ஊழியர்கள் அதனை பின்பற்றுவது கிடையாது, காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்தே அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர்.

    மேலும் தனியார் பஸ் டிரைவர்களும் இதையே அணிந்து பஸ்களை இயக்கி வருவதால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தனியார் பஸ் எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் ராமேசுவரம் கிளை பணிமனையில் பணிபுரியும் மீனாட்சிசுந்தரம்(வயது42) என்பவர் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பஸ்சை இயக்கி வருகிறார்.

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அணியும் சீருடையை பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை முறையாக அணிந்து வாகனங்களை இயக்குகிறார். சக ஊழியர்கள் கேலி செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களையும் இதே போல சீருடை அணிவதற்கு மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி வருகிறார். 
    விழுப்புரம் அருகே 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சென்னை-கும்பகோணம் சாலையில் ஆனகவுண்டன் குச்சி பாளையம் உள்ளது. இந்த ஊர் வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்றது.

    அப்போது அங்கு சாலையோரம் இருட்டில் மறைந்து நின்ற மர்ம மனிதர்கள் சிலர் கற்களை எடுத்து அந்த பஸ் மீது சரமாரியாக வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து அந்த பஸ் சென்று விட்டது.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று அதே ஆனகவுண்டன்குச்சி பாளையம் வந்தது. அப்போதும் மர்ம மனிதர்கள் அதன் மீதும் கற்களை வீசினர்.

    இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    பின்னர் டிரைவரும், கண்டக்டரும் கீழே இறங்கி பஸ் மீது கல்வீசியவர்களை விரட்டினர். அதற்குள் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வளவனூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

    நள்ளிரவு ஒரே இடத்தில் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×