search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapped young girl"

    பெண்ணை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் கப்பலூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் சின்னசாமி (வயது 34) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சின்னசாமிக்கும், கட்டதேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திடீரென மாயமாகி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்து ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், சின்னச்சாமி கோவைக்கு அழைத்துச் சென்று மருதமலையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் உறவு வைத்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் திருமங்கலம் அழைத்து வந்து விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சின்ன சாமியை கைது செய்தார்.

    முதலியார்பேட்டையில் பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை பாரதிமில்திட்டு பகுதியை சேர்ந்த 17 வயதான இளம்பெண் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு நெல்லித்தோப்பில் உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலைபார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அந்த இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை.பியூட்டி பார்லருக்கு சென்று விசாரித்த போது அங்கு அந்த பெண் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் இல்லை.

    இதையடுத்து அந்த இளம்பெண்ணின் தந்தை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை தவளக்குப்பம் அருகே தானம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடத்தூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்துள்ள திண்டாலானூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் செவ்வந்தி (வயது19). இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு செவ்வந்தி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து கோபால் தனது மகள் செவ்வந்தியை அதே பகுதியை சேர்ந்த கோசாமணி மகன் தெய்வமணி (21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக  கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதலியார்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கத்தை அடுத்த ரங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் விநாயகமுர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் பத்மா (வயது18). இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த போது அவருக்கும் சொரப்பூரை சேர்ந்த ஜெனார்த்தனன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த பத்மாவின் பெற்றோர் பத்மாவை முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தில் உள்ள உறவினர் மைதிலி வீட்டில் தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மைதிலி வீட்டில் இருந்த பத்மாவை திடீரென காணவில்லை. பெற்றோர் வீட்டில் விசாரித்த போது அங்கும் பத்மா செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மைதிலி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் வீட்டில் இருந்த பத்மாவை ஜெனார்த்தனன் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறிஉள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் அகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் பவித்ரா(வயது 23). கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பவித்ராவை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடினர். எங்கும் அவர் காணவில்லை.

    இதுகுறித்து மரக்காணம் போலீசில் பவித்ராவின் தாயார் லோகநாயகி புகார் செய்தார். அதில் தனது மகள் பவித்ராவை ஆலத்தூர் பகுதியை சேர்ந்த பிரதாப்(23) என்பவர் ஆட்டோவில் கடத்தி சென்று விட்டார். அதற்கு உடந்தையாக அவரது நண்பர்கள் சுரேஷ்(27), பிரகாஷ்(28) ஆகியோர் இருந்தனர். கடத்தப்பட்ட என் மகளை மீட்டுக்கொடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கில்இருதயராஜ் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண் பவித்ராவையும், பிரதாப்பையும் தேடி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் பஸ்நிறுத்தத்தில் பிரதாப், பவித்ரா நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் இருவரையும் திண்டிவனம் நடுவர் நீதிமன்றதிதில் ஆஜர் படுத்தினர். நீதிபதி சாந்தி இளம்பெண்ணை கடத்திய வாலிபர் பிரதாப்பை காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் பவித்ராவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து பிரதாப் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மதுரை அருகே இளம்பெண்ணை கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், டி.ராமநாதபுரம் அருகே உள்ள திருமாணிக்கத்தைச் சேர்ந்தவர் நாகன் (வயது 44). இவரது மகள் சிவரஞ்சனி (18). இவர் அங்குள்ள தனியார் மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிவரஞ்சனியை மர்ம நபர் ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நாகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது50). இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் ஜெயா (35) என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நான் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாகவே என் மனைவியின் நடத்தையில் சற்று மாற்றம் தெரிந்தது. சம்பவத்தன்று வேலை விட்டு வீட்டிற்கு வந்தபோது ஜெயா மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

    இது குறித்து எனது குழந்தைகளுடன் அடிக்கடி சில செல்போன் எண்களில் பேசி வந்ததாக கூறி உள்ளனர். அந்த எண்களை வைத்து அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது. அவரையும் தற்போது காணவில்லை. எனவே அவர்தான் எனது மனைவியை கடத்தி சென்றிருக்க கூடும் என சந்தேகம் அடைகிறேன். எனது மனைவியை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    திருச்சியில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி வாழவந்தான் கோட்டை பெரியார்நகரை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் தனலட்சுமி (வயது 26).

    இவருக்கும் பாலசந்திரன் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    பின்னர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 16-ந் தேதி தனது தோழியுடன் தனலட்சுமி திருப்பூரில் இருந்து பஸ் மூலம் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

    இது குறித்து சிவகாமி கண்டொன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தனலட்சுமியை தேடி வருகிறார்கள். தனலட்சுமியை யாரும் கடத்தி சென்றார்களா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×