என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சியில் இளம்பெண் கடத்தல்?
திருச்சி:
திருச்சி வாழவந்தான் கோட்டை பெரியார்நகரை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் தனலட்சுமி (வயது 26).
இவருக்கும் பாலசந்திரன் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
பின்னர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 16-ந் தேதி தனது தோழியுடன் தனலட்சுமி திருப்பூரில் இருந்து பஸ் மூலம் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இது குறித்து சிவகாமி கண்டொன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தனலட்சுமியை தேடி வருகிறார்கள். தனலட்சுமியை யாரும் கடத்தி சென்றார்களா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்