search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy friend"

    சேலத்தில் இன்று முன்விரோத தகராறில் வெள்ளி பட்டறை தொழிலாளியை வெட்டி சாய்த்த மனைவியின் கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் குகை, பாபுநகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 38). இவர் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர், தனது உறவினரான சேலம் பட்டைக்கோவில், குமரன் தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் சாந்தாராமனிடம் (30) இருந்து ரூ. 40 ஆயிரம் கடனாக கந்து வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

    சாந்தாராமன் குகை லைன்ரோடு கறிக்கடை வீதியில் உள்ள ஒரு கறிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த கறிக்கடை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே உள்ளது.

    வழக்கம்போல் இவரும், கோபிநாத்தும் கறிக்கடை வீதி அருகே உள்ள அம்பலவானர் தெருவில் இருக்கும் ஒரு டீக் கடையில் டீ குடிப்பது பழக்கம். அப்போது வட்டி பணம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாந்தாராமுக்கும், கோபிநாத்தின் மனைவி கமலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    கோபிநாத்தை தீர்த்துக்கட்ட சாந்தாராமன் முடிவு செய்தார். அதன்படி இன்று காலை அவர் கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு வழக்கமாக சந்திக்கும் டீக்கடை முன்பு காத்திருந்தார்.

    அப்போது அவர் செல்போனில் தொடர்பு கொண்டு, தான் அம்பலவானர் தெருவில் உள்ள டீக்கடையில் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கோபிநாத்திடம் கூறினார்.

    இதையடுத்து கோபிநாத் அந்த டீக்கடைக்கு சென்றார். அங்கிருந்து சாந்தாராமன் தான் கொடுத்த ரூ.40 ஆயிரம் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடு என்று கேட்டார்.

    அதற்கு கோபிநாத் தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறவே, டீக்கடை பக்கத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் இருந்து வெட்டுவதற்கு கத்தியை எடுத்தார்.

    இதை பார்த்ததும் கோபிநாத் அங்கிருந்து ஓடினார். ஆனால் சாந்தா ராமன் அவரை விடாமல் விரட்டிச் சென்று ஓட ஓட வெட்டினார். முதலில் முகத்தில் ஓங்கி வெட்டினார்.

    முகத்தில் இருந்து மளமளவென ரத்தம் வழிந்த நிலையில் கோபிநாத் வலியால் அலறினார். பின்னர் காது, முகம், வாய், கை உள்ளிட்ட இடங்களில் ஓங்கி வெட்டினார். மேலும் சாந்தா ராமன் ஆத்திரம் அடங்காமல் கோபிநாத்தின் இடது கையை வெட்டினார். இதில் கோபிநாத்தின் இடது கை தொங்கியது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கொலை வெறி தாக்குதல் நடத்திய கறிக்கடை தொழிலாளி சாந்தாராமன் கத்தியுடன் நேராக சென்று செவ்வாய்ப் பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கமலாவுடனான கள்ளத் தொடர்பு தகராறு காரணமாக ஏற்கனவே கோபிநாத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாந்தாராமை ஆள் வைத்து தாக்கியதும், இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் தற்போது கோபிநாத்தை, அவர் வெட்டி சாய்த்ததும் தெரிய வந்தது.

    கமலாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி மஞ்சு பாஷினி (18), தர்ஷினி(14), என்ற 2 மகள்கள் உள்ள நிலையில் கோபிநாத் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா (11) என்ற மகளும் உள்ளார்.

    கமலாவுடன் போலீசார் விசாரித்த போது, பிறந்த குழந்தைகளை கழுவும் வேலைக்கு சென்று வந்த எனக்கு எனது மாமா மகனான சாந்தாராமுடன் முன்பு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அழைத்து செல்வார் என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கல்லூரி மாணவி காதலனுடன் சென்று விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை திருநகர் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் அபிதா (வயது18).

    இவர் மன்னர் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது சக மாணவர் வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் அபிதாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த அபிதா திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து திருநகர் போலீசில் மாதவன் புகார் செய்தார். அதில், அபிதா காதலனுடன் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேச மறுத்த கள்ளகாதலியை அரிவாளால் வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். பாத்திர தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா தேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மஞ்சுளா தேவிக்கும் அனுப்பர் பாளையம் கஸ்தூரிபா நகரை சேர்ந்த பாத்திர தொழிலாளி சுரேஷ் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்த விவரம் மஞ்சுளா தேவியின் கணவர் கணேசனுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். சுரேசிடம் உள்ள தொடர்பை துண்டித்து விடு என தெரிவித்துள்ளார். மேலும் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மஞ்சுளா தேவி மனம் திருந்தினார். கடந்த 2 மாதமாக அவர் சுரேசிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். சுரேஷ் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் மஞ்சுளா தேவி அவரிடம் பேசவில்லை.

    இதனால் சுரேஷ் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மஞ்சுளா தேவி தனது கணவர் கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். 15 வேலம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் அவர்களை வழி மறித்தார். அவர் மஞ்சுளா தேவியிடம் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த அரிவாளால் மஞ்சுளா தேவியை வெட்டினார்.

    இதனை கணேசன் தடுக்க முயன்றார். அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்த கணவன்-மனைவியை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து 15 வேலம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலன் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை வடக்குமாசி வீதியைச்சேர்ந்த 16 வயது சிறுமி, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இதே கல்லூரியில் மதுரை தெப்பக்குளம் மீனாட்சி நகரைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் மருதநாயகம் (19) என்பவரும் படித்து வந்தார்.

    அவருக்கும் வடக்குமாசி வீதி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    இந்த நிலையில் தன்னை மருதநாயகம் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மாணவி குற்றம் சாட்டினார். மேலும் வீட்டிற்கு வந்த அவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் காப்பாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திலகர்திடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதநாயகத்தை கைது செய்தனர்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திருச்சி மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முக வள்ளி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி, வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதே மில்லில் வேலை பார்த்த தென்னம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் விபரம் சண்முகவள்ளி குடும்பத்துக்கு தெரியவரவே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்தனர். பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் சண்முகவள்ளி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனிடம் நடந்த விபரங்களை கூறினார்.

    இதனையடுத்து இன்று வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரமேஷ் தனது காதல் மனைவியுடன் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சாரங்கா (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் ஜீவராஜாத்தி (18) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர் தற்போது திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் காதல் விபரம் வீட்டுக்கு தெரிய வரவே 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் இளம்பெண்ணின் கருவை கலைக்க அ.தி.மு.க. பிரமுகர் பேரம் பேசியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் கார்த்திகா (வயது 21). கார்த்திகாவும், சாத்தங்குடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கோகுல் (26) என்ற வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதலர்கள் நெருங்கி பழகியதால் கார்த்திகா கர்ப்பம் அடைந்தார். தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த கார்த்திகா, காதலன் கோகுலை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மணிகண்டன், கோகுலுக்கு ஆதரவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திகா வீட்டுக்கு மணிகண்டன் சென்று, கோகுல் திருமணம் செய்ய மறுப்பதால் கருவை கலைக்க கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு, கருவை கலைத்த பின்னர் மீதி ரூ.1 லட்சம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகா , மணிகண்டன் கொடுத்த ரூ.10 ஆயிரம் பணத்துடன் வந்து திருவாரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க மணிகண்டன் பேரம் பேசியதாக தெரிவித்தார். மேலும் தனது காதலன் கோகுலனுடன் சேர்த்து வைக்கும்படியும் கூறினார்.

    இதனால் கார்த்திகாவின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கார்த்திகாவின் காதலன் கோகுல், மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் ஆகியோரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. கார்த்திகா, கோகுல் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தால் தான் உண்மை தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தக்கலை அருகே கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் பார்த்ததால் அவரை கொலை செய்தோம் என்று கைதான மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நாகர்கோவில்:

    தக்கலை அருகே பள்ளியாடி பேராணி விளையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா.

    இவர்கள் இருவரும் 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 11 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். பின்னர் தடயவியல் சோதனைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    சோதனையில் அந்த எலும்புக்கூடு ராஜசேகருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் மனைவி சுதாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். கடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரை களை கலந்து கொடுத்தோம்.

    பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம். ராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன்.

    எனது சகோதரருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இது தொடர்பாக எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவரை தாக்கியது தொடர்பாக தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் என்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட சுதாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளை அருகேயுள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் கோட்டையப்பன்(வயது23). இவர் கேரளாவில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நெல்லையை அடுத்த தாழையூத்து சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா(22). பட்டதாரியான இவர் தென்காசியில் ஒரு ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வருகிறார்.

    சுஷ்மிதா இந்த ஆண்டு தான் கல்லூரி படிப்பை முடித்தார். பாளையில் ஒரு தனியார் கல்லூரியில் இவர் படித்தபோது அப்பகுதியில் உள்ள மற்றொரு கல்லூரியில் கோட்டையப்பன் படித்தார். இருவரும் வேறு வேறு பஸ்சில் வந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    பஸ் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்ட போது அவர்களுக்கிடையே காதல் உண்டானது. இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். கல்லூரி படிப்பை முடித்து அவர்கள் வேலைக்கு சென்றபின்னரும் அவர்களது காதல் தொடர்ந்தது. இந்த காதல் விவகாரம் சுஷ்மிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சுஷ்மிதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சுஷ்மிதாவுக்கு அவரது வீட்டினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் சுஷ்மிதாவுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதை அறிந்த சுஷ்மிதா தனது காதலரிடம் இதுபற்றி கூறினார்.

    இதையடுத்து கடந்த 14-ந்தேதி சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் காதல்ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனிடையே மகளை காணவில்லை என சுஷ்மிதாவின் தந்தை மாரியப்பன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி சுஷ்மிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் தேடுவதை அறிந்த காதல் ஜோடி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கழுத்தில் மாலை அணிந்தபடி வந்தனர். தங்களை பிரிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி சுஷ்மிதா தனது காதலனுடன் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    அலுவலகத்தில் இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை இறுதியில் சுஷ்மிதாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் வசித்து வந்த சுஷ்மிதா திருமணம் செய்த 2-வது நாளான நேற்று திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார். மயங்கி கிடந்த சுஷ்மிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு சுஷ்மிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள இருளாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரிக்கொழுந்து (வயது 27).சென்னையில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.

    ஏலகிரியை சேர்ந்தவர் விஜய் ஏ.சி, மெக்கானிக் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிரிப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதி அருகில் ராணியின் முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ராணி கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மேல ஆசாரப்பள்ளியை சேர்ந்த விவசாயி தேவராஜ் (60) என்பவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கைது செய்யப்பட்ட தேவராஜிக்கும், ராணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ராஜா பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால் தேவராஜ் அடிக்கடி ராணி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தேவராஜ் 3 செண்ட் நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு ராணி கேட்டுள்ளார். மேலும் ராணிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தேவராஜ் கண்டித்தும் ராணி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், சம்பவத்தன்று இரவு நிலத்தை எழுதி தருகிறேன். அதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு போனில் கூறி உள்ளார். இதனால் ராணி ஆதார் அட்டையுடன் நவதி பகுதிக்கு சென்ற போது வேறு நபருடனான கள்ளத்தொடர்பு குறித்து 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான தேவராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை திருமணம் செய்த காதலன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.வெள்ளோடு நொச்சிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 25). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நதியா (23). எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோருக்கு பயந்து நண்பர் வீட்டில் தங்கி இருந்த காதல் ஜோடி இன்று வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்ச மடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் கல்லூரி மாணவி தஞ்சம் அடைந்தார்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபின் பிராங்க் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரும், பொன்மனை பெருவள்ளிக்கடவு பகுதியைச் சேர்ந்த அனிஷா (19) என்பவரும் காதலித்து வந்தனர். அனிஷா கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது சுபின் பிராங்குடன் அனிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்தனர். 

    இந்த விவகாரம் அனிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன் தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்ற அனிஷா, தனது காதலன் சுபின் பிராங்குடன் மாயமானார். 

    இதுகுறித்து அனிஷாவின் பெற்றோர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் கல்லூரிக்கு சென்ற தங்கள் மகள் அனிஷா மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தனர். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிஷாவை தேடி வந்தனர். 

    போலீசார் தேடுவதை அறிந்து அனிஷாவும், அவரது காதலன் சுபின் பிராங்கும் நேற்று இரவு குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரவழைத்து சமரசப்பேச்சு நடத்தினர். அப்போது சுபின் பிராங்கை, அனிஷாவின் உறவினர்கள் தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து போலீசார் சுபின் பிராங்கை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனிஷாவிடம் அவரது தாயார் பேசினார். தங்களுடன் வந்து விடும்படி கூறி அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அனிஷா தாயின் கண்ணீரை பெரிதுபடுத்தவில்லை. காதலனுடன் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனிஷாவை காதலன் சுபின் பிராங்குடன் அனுப்பி வைத்தனர்.
    ×