search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested wife"

    ஆண்டிப்பட்டி அருகே கணவரை கொன்று நாடகமாடிய மனைவியை 2 மாதத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு வீரமணி (வயது36) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக ராஜதானி அருகில் உள்ள கொட்டபட்டியில் அய்யனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 12.3.19-ந் தேதியன்று அய்யனார் தலையில் காயங்களுடன் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

    உறவினர்கள் அனைவரும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அய்யனார் உடலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தடுத்து நிறுத்தினர். மேலும் அய்யனார் எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தப்பட்டது.

    தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வீரமணியே போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    பல்வேறு கோணங்களில் பலரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் மனைவி மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார்.

    போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் சம்பவத்தன்று அதேபோல் தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அரிவாளால் தலையில் தாக்கியதாக கூறினார். இதனையடுத்து போலீசார் வீரமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அந்தியூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே புன்னத்தை சேர்ந்த கைலாசம் (வயது40). என்ற லேத் பட்டறை அதிபர் கடந்த 2 நாட்களுக்கு முன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

    மனைவி ஹேமலதாவுடன் சென்ற அவரை மர்ம ஆசாமி வழிமறித்து கொலை செய்தான்.

    கள்ளக்காதலில் இந்த சம்பவம் நடந்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்தனர்.

    மனைவி ஹேமலதாவின் உறவினரான வாலிபர் ஆனந்துக்கும் (23) ஹேமலதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர்.

    இதை கணவர் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் சம்பவத்தன்று கைலாசத்தை வழிமறித்து கொலை செய்தார்.

    போலீசார் தீவிர விசாரணை நடத்தி மனைவி ஹேமலதா, கள்ளக்காதலன் ஆனந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    தக்கலை அருகே கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் பார்த்ததால் அவரை கொலை செய்தோம் என்று கைதான மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    நாகர்கோவில்:

    தக்கலை அருகே பள்ளியாடி பேராணி விளையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா.

    இவர்கள் இருவரும் 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 11 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். பின்னர் தடயவியல் சோதனைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    சோதனையில் அந்த எலும்புக்கூடு ராஜசேகருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் மனைவி சுதாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம். கடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரை களை கலந்து கொடுத்தோம்.

    பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம். ராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன்.

    எனது சகோதரருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டது. இது தொடர்பாக எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவரை தாக்கியது தொடர்பாக தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் என்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட சுதாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    ×