search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Book"

    • ஆரிகமி மாடலில் 2 மணி நேரத்தில் 326 மாடல்களின் டிசைன் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
    • தனக்கு கிடைக்கும் வருவாயை அரசு மருத்துவமனையில் அமைய உள்ள புற்றுநோய் மையத்திற்கு வழங்க உள்ளேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே. செட்டிபாளையம் சி.டி. சி. காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகள் ஹேம அக்ஷயா. இவர் திருப்பூர் கோவில் வழியில் உள்ள பிரண்ட்லைன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவி படிக்கும்போதே தனது சொந்த முயற்சியின் மூலம் "லில் லியர்ன்ஸ்" என்ற புத்தகம் ஒன்று எழுதினார். அதனை கடந்த 29ந் தேதி சாகித்ய அகடாமி விருது பெற்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், அதிகாரி ராஜேந்திரன் வெளியிட்டார் . இந்த புத்தகத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் மற்றும் விழிப்புணர்வு கதைகள் இடம் பெற்றுள்ளன.

    அதேபோல் மாணவி ஹேம அக்ஷயா பல்வேறு சாதனைகளும் படைத்துள்ளார் .அதன்படி இளம் எழுத்தாளர் அக்ஷயா எலைட் விருது, ஏசியன் விருது, தமிழன் ரெக்கார்டர், இந்தியன் ரெக்கார்டர் மற்றும் ஆரிகமி மாடலில் 2 மணி நேரத்தில் 326 மாடல்களின் டிசைன் செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். இந்த உலக சாதனை விருதுகளை சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வழங்கினார்.

    இந்த நிலையில் தான் பெற்ற சாதனை சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் , புத்தகம் ஆகியவற்றை திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ., சு.குணசேகரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மாணவிக்கு சால்வை அணிவித்து மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியின் போது மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, தென்னம்பாளையம் தொகுதி கழகச் செயலாளர் கே.பி. ஜி.மகேஷ்ராம், நிர்வாகி ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து மாணவி ஹேம அக்ஷயா கூறுகையில், சிறு வயது முதல் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படி எனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைய உள்ள புற்றுநோய் மையத்திற்கு வழங்க உள்ளேன். தொடர்ந்து பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் பல்வேறு சாதனைகளை வரும் காலங்களில் நிகழ்த்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    • புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
    • 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புத்தக திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், புத்தக கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த நிலையில் புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவிற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசுகையில், "புத்தக திருவிழாவில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். புத்தகங்கள் ரூ.2 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. சிறைத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட அரங்குகளில் 3 ஆயிரம் புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவில் பெற்ற கல்வி செல்வம் நம்மிடம் இருந்து குறையாது. இதேபோல அடுத்த ஆண்டு புத்தக திருவிழா இதனை விட பெரிதாக நடத்துவோம்'' என்றார்.விழாவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அலுவலர் கவிதா ராமு, திருநாவுக்கரசர் எம்.பி. நடிகர் தாமு , மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
    • ஓய்வு பெற்ற மில் மேலாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் ஜி.அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சக்திவேல், வேட்டையார், வள்ளி யப்பன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொரு ளாளர் அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற மில் மேலாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து பேசினார். பாண்டியன் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர், டாக்டர் வ.சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார்.

    இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திரா காந்தி, விஜயா, தென் மண்டல ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பி னர் சிவசுந்தரம், மன்னர் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ரெங்கராஜ், ஹார்விபட்டி அரவிந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் மன்ற செயற்குழு உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார்.

    • புத்தக கண்காட்சி நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும்.
    • பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா இன்று அரண்மனை வளாகத்தில் தொடங்கியது.

    வருகிற 24 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது.

    இன்று புத்தக திருவிழாவை கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

    புத்தக திருவிழாவில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்ப ட்டுள்ளது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    முதல் முறையாக மாவட்ட காவல்துறை சார்பில் புத்தக தானம் செய்யும் பெட்டி அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.

    இதில் ஏராளமான சிறை கைதிகளுக்காக புத்தகங்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    மாணவர்களை ஊக்குவி ப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

    முன்னதாக அமைச்சர் அன்பில்ம கேஸ்பொய்யாமொழி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புத்தக கண்காட்சி, இலக்கிய விழாக்கள் நடத்துவது அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும்.

    மக்களின் பொழுதுபோக்கு இல்லாமல் உலக அளவில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்கள் தான் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புவது தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு , டெட் உள்ளிட்ட போட்டி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளும் வைத்துள்ளனர்.

    விரைவில் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சகம், அரசு துறைசார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம். பரிசீலித்து எதை உடனடியாக செய்ய வேண்டுமோ அதை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர அஞ்சுகம பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டன்.

    • 1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.
    • ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது.

    உலகம் முழுவதும் பலகோடி சிறுவர்-சிறுமிகளின் ஆதர்ஷ நாயகனான ஹாரிபாட்டரை பற்றிய புத்தகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஜோன் ரவ்லிங் என்ற ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் எழுத தொடங்கிய மந்திர, தந்திர கதைகள் ஹாரிபாட்டர் என்ற டீன் ஏஜ் சிறுவனை நாயகனாக வடிவமைத்து எழுதப்பட்டவை ஆகும்.1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.

    லேமினேட் செய்யப்பட்ட அட்டையுடன் கூடிய இந்த புத்தகம் சமீபத்தில் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இந்த புத்தகம் முதல் பதிப்பு 500 புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட 300 புத்தகங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி உள்ளது.

    • 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக திறப்பு விழா மதுரையில் நாளை மறுநாள் கோலாகலமாக நடக்கிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.

    மதுரை

    தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக 'கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம்' கட்டப்பட் டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்த–கங்களுடன் உள்ள கலைஞர் நூற் றாண்டு நூலகம் மதுரையின் மற்று–மொரு அடையாளமாக திகழப்போ–கிறது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரை–யில் அமைக்கப்படும் என்று அறி–விக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்த–வுடன் இதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக மதுரை புது நத்தம் சாலை–யில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூல–கம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

    சென்னை கோட்டூர்புரத்தில் 2010 ஆம் ஆண்டு பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூல–கம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அதைப் போலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேசத் தரத்தில் நூலகம் மதுரையின் மற் றொரு அடையாளமாக கலைஞர் நூற் றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

    இதற்காக ஆரம்பத்தில் 70 கோடிக்குத் திட்டமிடப்பட்டு பின்பு 99 கோடியாக உயர்த்தப்பட்டு இறுதி–யாக தற்போது 134 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பி–னருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.

    குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இந்த நூல–கத்தின் மூலம் பயன்பெறலாம். நூல–கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியு–டன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள் ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கரு–ணாநிதி எழுதிய நூல்கள், குழந்தை–கள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது. இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன்கூடிய ஆங்கில நூல் பிரிவும், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப் பட்டுள்ளன.

    ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்ப–டச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவ–லகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

    தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரு–மான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கும் விழாவில் கலை–ஞர் நூற்றாண்டு நினைவு நூல–கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா–லின் திறந்து வைக்கிறார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விழா தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கே.என்.நேரு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 மாலையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற் கிறார்கள்.

    அறிவுத் திருவிழாவாக இந்தத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தி வளர்ப்ப–தற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டு–மின்றி, பல்வேறு தொழில்நுட்பங்க–ளின் வாயிலாகக் கற்று உலகத்தரத் திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை–யும், இளைய தலை–முறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யவும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • புத்தக திருவிழா விழிப்புணர்வுக்காக புதுக்கோட்டையில் ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் புத்தகம் வாசித்தனர்
    • புத்தக திருவிழா 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து வரும் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள 6-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, 3 லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்வினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுமார் 3 லட்சம் பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொது இடங்களில் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற மாபெரும் நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேர நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது.

    இந்த புத்தகத் திருவிழாவில் அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவாற்றவும் உள்ளனர்.புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பு என்பது கற்பனை உலகத்தை நிஜமாக்குவதற்கு நம்மிடையே ஆர்வத்தை தூண்டுவதாகும்.

    எனவே மாணவர்கள் அனைவரும் படிக்கும் பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதற்கான வழிவகையினை ஏற்படுத்தும். புத்தகம் படிப்பின் மூலம் நம்மிடையே வளரும் அறிவு செல்வத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய மக்களாக வளர வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கருணாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி, நூலக அலுவலர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேல்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் .சாலை செந்தில், கவிஞர் தஙகம் மூர்த்தி, டாக்டர் சலீம், அறிவியல் இயக்கம் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, விவசாய சங்கம் தனபதி, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





    • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது.
    • புத்தகங்கள் வழங்கியது மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 1,500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது.

    கல்லூரிக்கு வந்த மாணவர்களை கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி, பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, ராஜ்குமார் மாதவன், மாரிமுத்து உள்ளிட்ட துறை தலைவர்கள் வாசலில் நின்று வரவேற்றனர்.

    தொடர்ந்து, கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    புத்தகங்கள் வழங்கி மாணவர்களை வரவேற்றது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • மாவட்ட மைய நூலகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர்.
    • அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கையில் நூலக நண்பர்கள் திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பொது நூலக துறையின் நூலக நண்பர்கள் திட்டத்தில் நூலக தன்னார்வலரான எழுத்தாளர் ஈஸ்வரனின் சார்பாக மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக இணைத்து புத்தகங்களை அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.

    மாவட்ட நூலக அலுவலர் சான் சாமுவேல் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் உறுப்பினர் அடையாள அட்டைகளையும் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். புத்தகங்கள் நமது வரலாற்று நூல்களும் தேசிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களும்சுய முன்னேற்றம் தன்னம்பிக்கை நூல்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நூல் சரி பார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் நூலகர்கள் முத்துக்குமார் கனகராஜன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் நூலக தன்னார்வலர் ரமேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • மணக்கோலத்தில் நூலகம் வந்தனர்
    • 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கினர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழன்குறிச்சி கிராமத்தில் நேற்று திருமணம் செய்துகொண்ட மணமக்கள் திருநாவுக்கரசு-பவளக்கொடி தம்பதியினர் மணக் கோலத்தில் நூலகத்திற்கு சென்றனர். அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை த.சோழன்குறிச்சி நூலகத்திற்கு வழங்கினர்.

    • சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    • உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலகின் பலவேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

    எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் -நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளர்ச்சியும், கணினித் தமிழ் வளரச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறு வதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி, கரு .பழனியப்பன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரி முதல்வர் யுஜின் அமலா, முனைவர் ஹேமலதா, முத்துக்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.
    • மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டு கடந்துள்ளன.

    இதை முன்னிட்டு நடை பெற்ற நூற்றாண்டு விழாவில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள கடமை, பிள்ளைகளின் கல்வியை மெருகேற்ற செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவது மிக, மிக முக்கியமானது, எனவே மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார்.

    பின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×