search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
    X

    பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு

    • மாவட்ட மைய நூலகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர்.
    • அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கையில் நூலக நண்பர்கள் திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு பொது நூலக துறையின் நூலக நண்பர்கள் திட்டத்தில் நூலக தன்னார்வலரான எழுத்தாளர் ஈஸ்வரனின் சார்பாக மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக இணைத்து புத்தகங்களை அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன.

    மாவட்ட நூலக அலுவலர் சான் சாமுவேல் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் உறுப்பினர் அடையாள அட்டைகளையும் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். புத்தகங்கள் நமது வரலாற்று நூல்களும் தேசிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களும்சுய முன்னேற்றம் தன்னம்பிக்கை நூல்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நூல் சரி பார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் நூலகர்கள் முத்துக்குமார் கனகராஜன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் நூலக தன்னார்வலர் ரமேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×