என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புத்தகம் எழுதி சாதனை படைத்த மாணவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., வாழ்த்து
- ஆரிகமி மாடலில் 2 மணி நேரத்தில் 326 மாடல்களின் டிசைன் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
- தனக்கு கிடைக்கும் வருவாயை அரசு மருத்துவமனையில் அமைய உள்ள புற்றுநோய் மையத்திற்கு வழங்க உள்ளேன்.
திருப்பூர்:
திருப்பூர் கே. செட்டிபாளையம் சி.டி. சி. காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகள் ஹேம அக்ஷயா. இவர் திருப்பூர் கோவில் வழியில் உள்ள பிரண்ட்லைன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி படிக்கும்போதே தனது சொந்த முயற்சியின் மூலம் "லில் லியர்ன்ஸ்" என்ற புத்தகம் ஒன்று எழுதினார். அதனை கடந்த 29ந் தேதி சாகித்ய அகடாமி விருது பெற்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், அதிகாரி ராஜேந்திரன் வெளியிட்டார் . இந்த புத்தகத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் மற்றும் விழிப்புணர்வு கதைகள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் மாணவி ஹேம அக்ஷயா பல்வேறு சாதனைகளும் படைத்துள்ளார் .அதன்படி இளம் எழுத்தாளர் அக்ஷயா எலைட் விருது, ஏசியன் விருது, தமிழன் ரெக்கார்டர், இந்தியன் ரெக்கார்டர் மற்றும் ஆரிகமி மாடலில் 2 மணி நேரத்தில் 326 மாடல்களின் டிசைன் செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். இந்த உலக சாதனை விருதுகளை சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வழங்கினார்.
இந்த நிலையில் தான் பெற்ற சாதனை சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் , புத்தகம் ஆகியவற்றை திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ., சு.குணசேகரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மாணவிக்கு சால்வை அணிவித்து மேலும் பல்வேறு சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, தென்னம்பாளையம் தொகுதி கழகச் செயலாளர் கே.பி. ஜி.மகேஷ்ராம், நிர்வாகி ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து மாணவி ஹேம அக்ஷயா கூறுகையில், சிறு வயது முதல் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படி எனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அமைய உள்ள புற்றுநோய் மையத்திற்கு வழங்க உள்ளேன். தொடர்ந்து பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் பல்வேறு சாதனைகளை வரும் காலங்களில் நிகழ்த்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்