search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat accident"

    • படகு கவிழ்ந்ததும் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர், சிலர் நீந்தி கரையேறினர்.
    • முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர்.

    பாண்டா:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று அதிக காற்று வீசியதால் கவிழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்ப்பட்டோர் பயணித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததும் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீந்தி கரையேறினர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புல்வா( 50), ராஜ்ராணி (45), கிஷான் (6 மாதம்) ஆகிய 3 பேர் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் 25 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த படகு பாண்டா மாவட்டம் மார்காவில் இருந்து பதேபூர் மாவட்டம் ஜராவ்லி காட் நோக்கி சென்ற நிலையில் கவிழ்ந்துள்ளது. படகு விபத்து தொடர்பாக மார்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் ராகேஷ் சச்சன், ராம்கேஷ் நிஷாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

    • பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிந்தது.
    • படகில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    ஹைதி நாட்டில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். நேற்று இரவு ஒரு படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் மியாமி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த படகு கவிந்தது.

    இதனால் அதில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    இது பற்றி அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலரை அவர்கள் மீட்டனர்.

    இந்த படகு விபத்தில் ஒரு கைக்குழந்தை, 12 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர் என ஹைதி நாட்டு பிரதமர் தெரிவித்து உள்ளார்.

    இலங்கையில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    கொழும்பு:

    இலங்கையின் கிழக்கு மாகாணமான திரிகோணமலையில் உள்ள குறிஞ்சங்கேணி என்ற கிராமத்தில் இருந்து, கின்னியா நகருக்கு நேற்று காலை படகு ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த படகில் பள்ளி மாணவர்கள் உள்பட 20-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.

    இந்த நிலையில் இந்த படகு கின்னியா நகரை நெருங்கி கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் நீரில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படையினர் மீட்பு படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் இந்த கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஆந்திரா அருகே காசிமேடு படகு மீது சரக்கு கப்பல் மோதியது. படகில் தத்தளித்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ராயபுரம்:

    சென்னை காசிமேட்டை சேர்ந்த சின்னதுரைக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்பு ஆந்திரா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சரக்கு கப்பல் ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் படகு கவிழ்ந்து சேதம் அடைந்தது. படகில் இருந்த 11 பேரும் கடலில் தத்தளித்தனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

    11 மீனவர்களும் உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் விசைப்படகு உரிமையாளர் புகார் அளித்தார். கடலில் மூழ்கிய படகினை மீட்டு தர வேண்டும். சேதம் அடைந்த படகிற்கு நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaBoatTragedy #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள ஹசினா மற்றும் கண்ட்கிபூர் கிராமங்களில் இருந்து சுமார் 19 குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாட ஹுகிடோலா தீவுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற படகில் 6 ஆன்கள், 27 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் பயணம் செய்தனர்.

    மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு நிலைதடுமாறியது. இதில்  படகு நிலை தடுமாறி ஆற்றில் கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும்  நீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் உள்ளூர் மீனவர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 45 பேரை உயிருடன் மீட்டனர். 



    இந்நிலையில், இன்று அதிகாலை ஆற்றில் இருந்து 9 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும், காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.
    #OdishaBoatTragedy #NaveenPatnaik
    தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. #LakeVictoriaFerryAccident
    உகாரா:

    ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கிய விபத்தில் பலர் பலியாகினர். விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 207 ஆனது என தகவல்கள் வெளியானது. மேலும், உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சிலரை உயிருடன் மீட்டு வந்தனர்.

    இந்நிலையில், தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 



    இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். படகு மூழ்கி விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். #LakeVictoria  #LakeVictoriaFerryAcciden
    லிபிய கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள். #Libya #BoatAccident
    கெய்ரோ:

    லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதிகள் பரிதாபமாக பலி ஆகினர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.  #Libya #BoatAccident
    உத்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #AtalBihariVaajpayee
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாள் 17-ந்தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி கடந்த 22-ந்தேதி அனைத்து மாநில பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது.

    வாஜ்பாய் அஸ்தியை கரைக்கும் பணியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க பா.ஜனதா நிர்வாகிகள் படகில் சென்றனர். முன்னாள் மாநில பா.ஜனதா தலைவர் ராம் திரிபாதி, எம்.பி. ஹரிஷ் திரிவேதி, எம்.எல்.ஏ. ராம் சவுத்ரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், போலீஸ் சூப்பிரண்டு திலீப்குமார் உள்பட பலர் படகில் இருந்தனர்.

    அதிகமான கூட்டத்தால் ஆற்றில் சென்ற சிறிய படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்ததால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் தடுமாறி ஆற்றில் குதித்தனர். உடனே போலீசார் ஆற்றுக்குள் குதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரை காப்பாற்றினர்.

    இந்த விபத்தில் அனைவரும் உயிர் தப்பினர். யாரும் ஆற்றில் மூழ்காமல் போலீசார் காப்பாற்றினார்கள்.  #AtalBihariVaajpayee
    கொச்சி துறைகம் பகுதியில் உள்ள ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று இவர்களின் விசைப்படகு மீது மோதியது. இதில் அந்த படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    இதைதொடர்ந்து கடலில் மாயமான குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 9 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிஜூ என்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    கடற்படையினர், விமானப் படையினர் மூலம் தொடர்ந்து மற்ற மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் தங்கள் படகுகளில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் விசைப்படகு உரிமையாளர் ஏசுபாலனின் பிணம் நேற்று இரவு மீட்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் அவரது உடல் சிக்கியது. உடனடியாக ஏசுபாலனின் உடல் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

    ஏசுபாலனுக்கு சுபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் ஏசுபாலன் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஏசுபாலனுக்கு ராஜேஷ் குமார், ஆரோக்கிய தினேஷ் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் கடலில் மூழ்கிய படகில் சிக்கி மாயமாகிவிட்டனர். அவர்களது கதி என்னவென்று இதுவரை தெரியாதது அவர்களது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த விபத்து நடந்து 6 நாட்கள் ஆகிவிட்டதால் மற்ற 7 மீனவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

    மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து விஜயகுமார் எம்.பி. கோரிக்கை விடுத்து இருந்தார். அவரும் அதை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கிடையில் மீனவர்களின் குடும்பத்தினர் விஜயகுமார் எம்.பி.யை சந்தித்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அவரும் தான் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர்களிடம் விளக்கி கூறினார்.

    ராமன்துறையில் மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய சரக்கு கப்பல் மீது அடையாளம் தெரியாத கப்பல் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், தாங்கள் அந்த கப்பல் பற்றிய அடையாளத்தை ஆதாரத்துடன் கொடுத்துள்ளதால் அடையாளத்தை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இன்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடிப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    தாய்லாந்து நாட்டின் பிரபல சுற்றுலா தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 21 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. #Thaiboatdisaster
    பாங்காக்:

    தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று மாலை 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மீட்கப்பட்டுவிட்டாலும் 20 பேர் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.



    மீட்புப்பணிகளில் தாய்லாந்து கடற்படை வீரர்களும்  பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Thaiboatdisaster
    ×