என் மலர்

    ஹைதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடுகளுக்கு வெளியில் பிணமாக கிடக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டனர்.
    • சம்பவத்தை தொடர்ந்து உயிர் பயத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.

    கரீபியன் நாடான ஹைதியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் அவ்வப்போது அமைதியை குலைக்கும் வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்தநிலையில் அங்குள்ள சிறிய நகரமான கேபரெட் என்ற இடத்தில் ஒரு கும்பல் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதிக்கு வந்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    ஈவு, இரக்கம் இல்லாமல் அவர்கள் அங்குள்ள 20 வீடுகளுக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதால் அந்த வீடுகள் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 12 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வீடுகளுக்கு வெளியில் பிணமாக கிடக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிர் பயத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிந்தது.
    • படகில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    ஹைதி நாட்டில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். நேற்று இரவு ஒரு படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் மியாமி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த படகு கவிந்தது.

    இதனால் அதில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    இது பற்றி அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலரை அவர்கள் மீட்டனர்.

    இந்த படகு விபத்தில் ஒரு கைக்குழந்தை, 12 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர் என ஹைதி நாட்டு பிரதமர் தெரிவித்து உள்ளார்.

    ×