search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haiti"

    • நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஹைதியில் இருந்து வெளியேறும்படி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    புதுடெல்லி:

    கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த தவறியதால் அங்கு சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதனால் காவல் நிலையங்கள், போலீஸ் அகாடமி, சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமையால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டினரை அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நமக்கு தேவையான உதவிகளை செய்யும் டொமினிக்காவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்
    • அதிபர் மனைவியின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என கூறப்படுகிறது

    கரீபியன் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு, ஹைதி (Haiti). இதன் தலைநகரம் போர்ட்-ஆ-ப்ரின்ஸ் (Port-au-Prince).

    கடந்த 2021 ஜூலை 7 அன்று அந்நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸ் (Jovenel Moise), போர்ட்-ஆ-ப்ரின்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலில் அதிபர் ஜோவெனல் மாய்சின் மனைவி மார்டினெ மாய்ஸ் (Martine Moise) காயமடைந்தார்.

    அதிபர் படுகொலை விசாரணையில் இதில் 50க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த குற்றப்பத்திரிகையில், அதிபரின் மனைவி மார்டினெ மாய்ஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    சம்பவம் நடந்த பிறகு அதிபரின் மனைவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பல அம்சங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

    மேலும், அதிபர் மாளிகையில் இருந்த செயலர், இச்சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன் அங்கு வந்த மார்டினெ சுமார் 5 மணி நேரம் அங்கிருந்து, சில முக்கிய பொருட்களை அப்புறப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

    மார்டினெ, ஜோவெனல் உயிரிழந்ததும், தான் அதிபராக பதவியேற்க திட்டமிட்டு, முன்னாள் பிரதமர் க்ளாட் ஜோசப் (Claude Joseph) மற்றும் சிலருடன் இணைந்து சதி செய்து தனது கணவரை கொலை செய்துள்ளார்.

    இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    க்ளாட் ஜோசப் பெயரும் இதில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

    "அதிபர் படுகொலையினால் பலனடைந்திருப்பது தற்போதைய பிரதமர் ஏரியல் ஹென்றி (Ariel Henry) என்றும், அவர் நீதித்துறையை ஆயுதமாக்கி தனது அரசியல் எதிரிகளை பழி வாங்குவதாகவும்" என க்ளாட் ஜோசப் குற்றம் சாட்டினார்.

    மாய்ஸ் உயிரிழந்த 2 வாரங்களில் அதிபராக பதவியேற்ற ஹென்றி, இந்த குற்றச்சாட்டுகளை "பொய் செய்தி" என மறுத்துள்ளார்.

    ஹைதி நாட்டில் பெட்ரோல் விலையை எதிர்த்து சாலையில் டயர்களை கொளுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விலை உயர்வு வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்தது. #Haiti
    போர்ட்-அயு-பிரின்ஸ்:

    அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ஹைதி என்ற தீவு நாடு உள்ளது. நேற்று முன்தினம் அங்கு பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது.

    அந்த அறிவிப்பு வெளியானதும் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸ் நகர வீதியில் திரண்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோடுகளில் டயர்கள் மற்றும் மரக் கட்டைகளை போட்டனர். கார்கள் மற்றும் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அரசுக்கு எதிராக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    இதனால் ஹைதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கா போர்ட்-அயு- பிரின்ஸ் நகருக்கான தனது விமான சேவையை ரத்து செய்தது. அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது.

    ஹைதியில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    நிலைமை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்வை வாபஸ் பெற்றது.

    அதற்கான அறிவிப்பை அதிபர் ஜோவெனல் மோசி டி.வி.யில் அறிவித்தார். அதை தொடர்ந்து போராட்டம் கட்டுக்குள் அடங்கியது. #Haiti
    ×