என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "blood donation"
- நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி அப்துல் கலாம் மாணவர் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.துணை தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.
கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். தேன்மொழி தலைமையில் மருத்துவக்குழுவினர்கள் 55 யூனிட் வரை ரத்தம் சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் உதயபிரகாஷ் மற்றும் தாரன்யா ஆகியார் செய்திருந்தனர். ரத்ததான முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் அப்துல் கலாம் மாணவர் சங்கத்தின் தலைவர் விக்னேஷ் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மாணவியர்களின் தலைவர் நித்யா ஆகியோர் நன்றி கூறினர்.
- மகாத்மா காந்தி ரத்ததானக் கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
- அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கோவில்பட்டி:
மகாத்மா காந்தி ரத்ததானக் கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு பள்ளிச் செயலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். நகர்மன்ற தலைவர் கருணாநிதி முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 10 பேரிடம் ரத்தம் சேகரித்தனர்.
இதில் ரத்ததானக் கழக துணைத் தலைவர் சார்லஸ், ஆசிரியை முருகசரஸ்வதி, உரத்த சிந்தனை வாசகர் வட்டத் தலைவர் சிவானந்தம், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை ரத்ததான கழக நிறுவன தலைவர் தாஸ் செய்திருந்தார்.
- காமராஜர் பிறந்தநாைளயொட்டி பனங்காட்டு மக்கள் கழகத்தினர் 101 போ் ரத்ததானம் செய்தனர்.
- தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டிலுள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
தூத்துக்குடி:
காமராஜர் பிறந்தநாைளயொட்டி பனங்காட்டு மக்கள் கழகத்தினர் 101 போ் ரத்ததானம் செய்தனர்.
மாநில வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி.சிலுவை நாடார் தலைமையில் தூத்துக்குடி பெரிய பள்ளி வாசல் பகுதியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது
முகாமில், தூத்துக்குடி மாவட்ட பனங்காட்டு மக்கள் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் சுமார் 101 போ் ரத்ததானம் செய்தனர். மேலும், ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவ, மாணவியர்களுக்கு எழுதுபொருட்களும், மதிய உணவும் வழங்கப்பட்டது.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர்கள் சிவனேசன், செல்வகுமார், தூத்துக்குடி ஒன்றிய இளைஞரணி செல்வக்குமார், நிர்வாகிகள் பிரபு, சுரேஷ்குமார், விஜய், திலக் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டிலுள்ள காமராஜர் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.
இதில், மாநில வர்த்தகஅணி துணை செயலாளர் ரவிசேகர், கலை இலக்கிய அணி அந்தோணிபிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், துணைச்செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், பிரதிநிதி பெரியசாமி, இளைஞரணி டேனியல்ராஜ், மாணவரணி அகஸ்டின், தொண்டரணி முத்துசெல்வம், வர்த்தக அணி முத்துக்குமார், விவசாய அணி சரவணன், தொழிலாளர் அணி ஜெகன், மீனவரணி விக்ரம், மாநகரச்செயலாளர் உதயசூரியன், அவைத்தலைவர் மதியழகன், பொருளாளர் சந்தனகுமார், ஒன்றிய செயலாளர் பாரத், ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ரத்த தானம் வழங்கிய மருத்துவர்களுக்கும் , மருத்துவ சங்கத்தினருக்கும் பாராட்டி பேசினார்.
- ஏற்பாடுகளை ரத்த வங்கி மருத்துவர் பாபு செய்திருந்தார்.
தென்காசி:
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட நிறுவனர் மருத்துவர் மதிமாறன் ரத்ததானம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் கதிரேசன் மற்றும் மருத்துவர்கள் காளிதாசன், ஹரிச்சந்திர ராஜா, நஸீருத்தீன், சுகன்யா, அல்போன்ஸ், செய்யது முகம்மது தமீம் ஆகியோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மூத்த பல் மருத்துவர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை ரத்த வங்கி மருத்துவர் பாபு செய்திருந்தார்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ரத்த தானம் வழங்கிய மருத்துவர்களுக்கும் , மருத்துவ சங்கத்தினருக்கும் பாராட்டி பேசினார். மேலும் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் நஸீருத்தீன் நன்றி கூறினார்.
- மருத்துவர் தினத்தை முன்னிட்டு நடந்தது
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மருத்துவர் தினம் முன்னிட்டு அரசு பொது சுகாதார துறை மற்றும் திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், தனியார் கல்லூரி இணைந்து ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி தலைவர் சுப்பிரமணியம் செயலாளர் ஏலகிரி வி. செல்வம் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ரத்ததான முகாமை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இம்முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆர். புகழேந்தி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் பாரதி நன்றி கூறினார்.
- அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு ரத்ததானம் கொடுத்து தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்தவர்.
- ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முனைவர் துரை ராயப்பனுக்கு நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
உலக ரத்த தான கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு 2022-ம் ஆண்டு ரத்ததானம் கொடுத்து, தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்ததற்காக, ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர்முனைவர் நா.துரை ராயப்பனுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினர். இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜோசப்ராஜ், மாவட்ட ரத்த வங்கி டாக்டர் பிரதிக்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ராய் டிரஸ்ட் பரிந்துரையின் பேரில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த உடற்பயிற்சி பயிற்றுநர்பாலாஜி, சேவை சித்தர் ஜெயபிரகாஷ், ஆர்.வி. சி. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சிவசைலம், கரூடா செல் ஷோரூம் உரிமையாளர் கார்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
- கயத்தாறு சுங்கசாவடி, கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
- முகாமில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி பணியில் இருக்கும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு சுங்கச்சாவடியில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்த வங்கியும், கயத்தாறு சுங்கசாவடி, கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
கோவில்பட்டி அரசு ரத்த வங்கியின் குழு தலைவர் டாக்டர் லட்சுமிசித்ரா தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி பணியில் இருக்கும் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
கயத்தாறு வட்டார மருத்துவர் ராஜ்குமார், நலக்கல்வியாளர் முத்துசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பெரியசாமி, சுங்கச்சாவடி மதுரை மேலாளர் அம்படிஸ்ரீனிவாசகிரன்குமார்,
கயத்தாறு சுங்கச்சாவடி பல்வேறு துறை மேலாளர்கள் விஜய், ஆனந்தராஜ், சிவகுமார், ஜெபராஜ், வம்சி, ரமாசங்கர், பிரசாத் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கும் அனுமோனிஷா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மணமகன் ஹரிஹரனும், மணமகள் அனுமோனி ஷாவும் மேடைக்கு அருகிலேயே ரத்ததானம் செய்தனர்.
இதனை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.
இது குறித்து ஹரிஹரன் கூறுகையில், அனுமோனி ஷாவின் தந்தை பாஸ்கரன் 110 முறை ரத்ததானம் செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார். அவரது தாயாரும் செவிலியருமான ரமாதேவி 70 முறை ரத்ததானம் செய்துள்ளார்.
வாழ்க்கை முழுவதும் ரத்ததானம் செய்வதையே தங்கள் லட்சியமாக வைத்துள்ள குடும்பத்தில் பெண் எடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
நானும் பலமுறை ரத்ததானம் செய்துள்ளேன். பல திருமண விழாக்களில் இயற்கையை போற்றவும், மழைநீரை சேமிக்கவும் வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்குவதை பார்த்துள்ளோம்.
அதுபோல ரத்த தானமும் சமூகத்திற்கு தேவையான மிகச்சிறந்த சேவையாகும். ரத்தத்தில் ஜாதி இல்லை, மதம் இல்லை, வகைகள்தான் உள்ளது. எனவே என்னைப் போல மற்ற திருமண விழாக்களிலும் மணமக்கள் ரத்ததானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மணமக்களின் இந்த செயலை பார்த்து திருமண விழாவிற்கு வந்த 35-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். விழாவில் காஷ்மீர் மாநிலத்தில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மணமக்கள் உள்பட அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்ததானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வினோதமான முறையில் நடந்த இந்த திருமண விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உற்பத்தியாகும். அப்படி ரத்த சிவப்பணுக்கள் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறும். உடலில்இருந்து கார்பன் டை ஆக்ஸைடை நீக்கவும் உதவும். ஒருமுறை ரத்த தானம் செய்யும்போது உடலில் இருந்து 650 கலோரி செலவாகும். அதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.
அதே வேளையில் ரத்ததானம் செய்வதற்கு ஏதுவான உடல் அமைப்பை பெற்றிருந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும். ரத்ததானம் செய்வதற்கு முன்பு நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ஹுமோகுளோபின் அளவு போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி. பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம்.
மனித நேயத்தின் உச்சக் கட்ட வெளிப்பாடாக விளங்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் ‘ரத்த தானம் செய்வது மகிழ்ச்சிக்குரியது’ என்பதாகும்.
ரத்த தானம் செய்வது மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி மரிமாற்றக் குழுமம் இணைந்து, எண்ணற்ற ரத்த தான முகாம்களை நடத்தி வருவதுடன், ரத்த தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், ஓர் ஆண்டில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண்கள் மற்றும் 3 முறை ரத்த தானம் செய்த பெண்கள், சிறந்த முறையில் பணியாற்றிய ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், அரசு ரத்த ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9 லட்சத்து 5 ஆயிரத்து 489 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99 சதவீதம் ரத்தம் தன்னார்வ கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
தானங்களில் சிறந்தது ரத்த தானம் என்பதால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, ரத்த தானம் குறித்து மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் விளைவாக, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழநாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு நூறு சதவீதம் இலக்கை எட்ட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
அக்டோபர் முதல் தேதியில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுவதால் அனைவரும் ரத்த தானம் செய்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மனித நேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாக விளங்கும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்ததான நாளின் கருப்பொருள் ‘‘இரத்த தானம் செய்வது மகிழ்ச்சிக்குரியது’’ என்பதாகும்.
இரத்த தானம் செய்வது மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் ஆகும். இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, எண்ணற்ற இரத்ததான முகாம்களை நடத்திவருவதுடன், இரத்த தானம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களையும் நடத்தி வருகிறது.
மேலும், தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், ஓர் ஆண்டில் நான்கு முறை இரத்ததானம் செய்த ஆண்கள் மற்றும் மூன்று முறை இரத்த தானம் செய்த பெண்கள், சிறந்த முறையில் பணியாற்றிய இரத்ததான முகாம் அமைப்பாளர்கள், அரசு இரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கெளரவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகள் மூலம் 9,05,489 அலகுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 99 விழுக்காடு இரத்தம் தன்னார்வ கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் இரத்தம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
தானங்களில் சிறந்தது இரத்த தானம் என்பதால், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இரத்த தானம் குறித்து மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் விளைவாக, தன்னார்வ இரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ இரத்ததானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட பொது மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றுஅன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்போம்!!
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Blooddonation #EdappadiPalaniswami
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்