search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரத்த தான முகாம்
    X

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்த போது எடுத்த படம்.

    ரத்த தான முகாம்

    • நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி அப்துல் கலாம் மாணவர் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.துணை தலைவர் சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.

    கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். தேன்மொழி தலைமையில் மருத்துவக்குழுவினர்கள் 55 யூனிட் வரை ரத்தம் சேகரித்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் உதயபிரகாஷ் மற்றும் தாரன்யா ஆகியார் செய்திருந்தனர். ரத்ததான முகாமில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் அப்துல் கலாம் மாணவர் சங்கத்தின் தலைவர் விக்னேஷ் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மாணவியர்களின் தலைவர் நித்யா ஆகியோர் நன்றி கூறினர்.

    Next Story
    ×