என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்
- மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ரத்த தானம் வழங்கிய மருத்துவர்களுக்கும் , மருத்துவ சங்கத்தினருக்கும் பாராட்டி பேசினார்.
- ஏற்பாடுகளை ரத்த வங்கி மருத்துவர் பாபு செய்திருந்தார்.
தென்காசி:
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட நிறுவனர் மருத்துவர் மதிமாறன் ரத்ததானம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் விளக்கினார். இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் கதிரேசன் மற்றும் மருத்துவர்கள் காளிதாசன், ஹரிச்சந்திர ராஜா, நஸீருத்தீன், சுகன்யா, அல்போன்ஸ், செய்யது முகம்மது தமீம் ஆகியோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், மூத்த பல் மருத்துவர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை ரத்த வங்கி மருத்துவர் பாபு செய்திருந்தார்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் ரத்த தானம் வழங்கிய மருத்துவர்களுக்கும் , மருத்துவ சங்கத்தினருக்கும் பாராட்டி பேசினார். மேலும் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் நஸீருத்தீன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்