search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்த தான முகாம்
    X

    ரத்த தான முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    ரத்த தான முகாம்

    • மருத்துவர் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மருத்துவர் தினம் முன்னிட்டு அரசு பொது சுகாதார துறை மற்றும் திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், தனியார் கல்லூரி இணைந்து ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

    கல்லூரி தலைவர் சுப்பிரமணியம் செயலாளர் ஏலகிரி வி. செல்வம் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    ரத்ததான முகாமை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இம்முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆர். புகழேந்தி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் பாரதி நன்றி கூறினார்.

    Next Story
    ×