search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood donation camp"

    • ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் முகாமிற்கு தலைமை தாங்கினர்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் உள்ள டி.டி.என். கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலைச் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துக்கொண்டு முகாமினை நடத்தினர். முன்னதாக ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முகாமிற்கு கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி கலந்து கொண்டார்கள். முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ரத்ததான நன்மைகளை மாணவரிடம் எடுத்துக் கூறினார். ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி முகமது இபாம், இளைஞர் செஞ்சிலுவை சங்க அதிகாரி ராம்கி மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ரராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார்.

    பரமத்தி வேலூர்:

    6-வது தேசிய சித்த மருத்துவ நாளை கொண்டா டும் வகையில், பரமத்தி வேலூர் நண்பர்கள் குழு, அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை, நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன் வரவேற்றார். வேலூர் நகர வர்த்தக தலைவர் சுந்தரம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பள்ளியின் செயலாளர் செல்வராசு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

    கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார். முகாமில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை சித்த மருத்துவர் பர்வேஸ் பாபு தலைமையில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிவகாமி (பரமத்தி ), சித்ரா(கபிலர்மலை), கோகிலா (நல்லூர்), நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா, நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் ஆகியோர்

    கொண்டகுழுவினர், முகாமில் கலந்து கொண்ட

    வர்களுக்கு பரிசோதனை களும், சிகிச்சைகளும் அளித்தனர்.

    அதேபோல் நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா தலைமை யிலான குழுவினர் ரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தம் எடுத்தனர். இதில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தனர். முடிவில் நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் நன்றி கூறினார். முகாமில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • முகாமினை கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் கிராம உதயம் பொது மேலாளர், அறங்காவலர் தமிழரசியின் 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபால சமுத்திரம் கிராம உதயம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக ரத்த தானம் வழங்கும் முகாம் இன்று கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார்.

    அம்பாசமுத்திரம் ரத்த வங்கி அலுவலர் ராஜேஷ்வரி, பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷைலா ஆகியோர் ரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் சுகாதார மேற்பார்வை யாளர் பூங்கொடி சுகாதார ஆய்வாளர் அக்பர் அலி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். முகாமில் 86 பேர் ரத்ததானம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் ஐ.டயானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மெடிக்கல் கேம்ப் தலைவர் அருள்செல்வம், ரோட்டரி ஐ.எம்.ஏ. ரத்த வங்கி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ரத்த தானம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் ஐ.டயானா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இண்டராக்ட் கிளப் மற்றும் சாரண-சாரணியர்கள், இயக்க மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

    • கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவகங்கையில் நடந்தது.
    • இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    சிவகங்கை

    கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா சிவ கங்கை மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    14-ந்தேதி பையூர் பிள்ளைவயல் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரு கூத்து நிகழ்ச்சியும், மரம் நடும் விழாவும் நடந்தது. 15-ந்தேதி சிவகங்கை கூட்டுறவு பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடந்தன.

    16-ந்தேதி பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி யில் நடந்தது. இதில் ஏராள மானோர் ரத்ததானம் செய்தனர்.

    முன்னதாக முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இணை பதிவாளர் ஜீனு, மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலச்சந்திரன், இணைப்பதிவாளர் நாகராஜன், துணைப்பதிவாளர் குழந்தை வேலு, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சர்மிளா திலகவதி, மருத்துவ கண்கா ணிப்பாளர் ராமநாதன், உதவி நிலைய மருத்துவர் முகமது ரபி, அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இன்று (வியாழக்கிழமை) மன்னர் மேல்நிலைப்பள்ளி யில் ஓவிய ேபாட்டியும், இடைய மேலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவ முகாமும் நடக்கிறது. நாளை (18-ந்தேதி) காரைக்குடியில் மருத்துவ முகாமும், 19-ந்தேதி இளையான்குடி, காரைக்குடி கூட்டுறவு நகர வங்கிகளின் உறுப்பினர்கள் சந்திப்பு முகாம் நடக்கிறது. 20-ந்தேதி திருப்பத்தூர் கூட்டுறவு நிறைவு விழா நடக்கிறது.

    • வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் , அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் விக்டர் லாசரஸ் தலைமை தாங்கினார். முகாமை தாராபுரம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தர்மபிரபு , குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அரசு வக்கீல் உதயச்சந்திரன், தாராபுரம் அரசு கூடுதல் வக்கீல் இந்துமதி, வக்கீல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும் கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு 48 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். முகாமில் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜேஸ், ஏஞ்சலின் பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
    • திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயங்கி வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் 1, 2 மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 231 (சுயநிதி பிரிவு) இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை குழுவின் மூலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது மேற்பார்வையில் சுமார் 10 மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் 62 பேர் ரத்ததானம் வழங்கினா். சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. மேலும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். நிகழ்ச்சி முடிவில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்திட்ட அலுவலர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கணிப்பொறி தலைவர் வேலாயுதம் மற்றும் சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க சுயநிதிப்பிரிவு திட்ட அதிகாரி பேராசிரியர் பார்வதி தேவி மற்றும் மாணவ செயலர்கள் சொரிமுத்து, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
    • பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் அமைப்பு மற்றும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து கல்லூரி நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை நடத்தியது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நாகநாதன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் செய்திருந்தனர். அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி அவரது 10 கட்டளைகளை கடைபிடிப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது
    • முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், சமூக சேவகருமான 60 வயது மூத்த குடிமகன் சீனிவாச பிரசாத் ரத்த தானம் செய்தார்

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த ரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி பிரபா,

    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளைத் தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வளர்மதி, பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் குமரவேல்,

    சத்யநாராயணன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நல சங்க தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பொதுமக்கள் பல்வேறு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் உறுப்பினர்கள் ரத்ததானம் செய்தனர்.

    இந்த ரத்ததான முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், சமூக சேவகருமான 60 வயது மூத்த குடிமகன் சீனிவாச பிரசாத் ரத்த தானம் செய்தார்.

    • பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி புதுவை நகர மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
    • மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த முகாமுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி புதுவை நகர மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

    மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நடந்த இந்த முகாமுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    மாநில செயலாளர் ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், நகர மாவட்ட செயலாளர் விஜய ராஜேஷ், தொகுதி தலைவர்கள் ஹரிதாஸ், நாகராஜ், இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் பொதுச் செயலாளர்கள் செந்தில், சத்யா, அரவிந்த் செயலாளர் வாசகி, இளைஞர் அணி தொகுதி தலைவர்கள் விக்னேஷ், வேல்முருகன், முத்தியால்பேட்டை இளைஞரணி செயலாளர் அரவிந்த் மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர்.

    • தாடிக்கொம்புவில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி சார்பாக ரத்ததான முகாம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் அன்பு ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தனபாலன், ஒன்றிய தலைவர் வீரகுமார் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்ட துணைத் தலைவர் கணேஷ் பாலாஜி, மாவட்ட செயலாளர் தன்ராஜ், கண்ணன், சின்னமணி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ரத்ததான முகாமில் 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    • 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
    • முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தொண்டு அறக்கட்டளை சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.

    முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் என்ஜினீயர் பிரபாகரன், தி.மு.க நிர்வாகிகள் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், சண்முகம், பால்பாண்டியன், ரமணன், ரபீக், சுப்பிரமணியன், மிலிட்டரி முருகன், மனோகர், மோகன், முருகேசன், ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×