என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "baby"
- அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்தது.
- கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது.
அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேவேளை, கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளது.
மேலும், கருமுட்டை பிரிதலின்போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாகவும், கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறினர்.
- மேலூர் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
- இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி போதும் பொண்ணு. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான போது (35). இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் . சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சில் கர்ப்பிணியை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் வழியிலேயே பிரசவ வலி அதிகமானமானதால் வேன் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர்கள் போதுவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் அதே ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.ஆம்புலன்ஸ், குழந்தை, Ambulance, baby
- மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர்.
- டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள குடும்பம் சமத்துவம் பகுதியை சேர்ந்தவர் மாவீரன். இவரது மனைவி சரண்யா (வயது 26).கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சரண்யாவை ஏற்றி சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சரண்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. டெக்னீசியன் மாலதி, டிரைவர் மாரிமுத்து ஆகியோர் தாயையும் குழந்தையையும் நெய்க்காரப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
- பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி, அக்.13-
திருத்துறைப்பூண்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம், குழுவின் தலைவரும் நகர்மன்ற தலைவருமான கவிதாபாண்டியன் தலைமையிலும், ஆணையர் அப்துல்ஹரிஸ் முன்னிலையிலும் நடை்பெற்றது.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையிலிருந்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி கலந்துக்கொண்டு பேசும்போது, பிறந்தது முதல் 18 வயதுடைய அனைவரும் குழந்தைகள் தான். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாத பெற்றோர்களிடம் விழிப்புணர்வு செய்யப்படும். குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது.
பிறந்தது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சத்தான உணவுகள், மருத்துவ கண்காணிப்பு அவசியம், குழந்தைகளை தத்து எடுக்க சட்டப்பூர்வ வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளிலும், பள்ளிகள், குழந்தை பாதுகாப்பு இல்லங்களிலும் தவறுகள் நடப்பதை நாம் அனைவரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டணம் இல்லா 1098 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும், பெற்றோர்கள் தினமும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி அவர்கள் தேவையை கண்டறிய வேண்டும், பேரிடர் காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
படிக்கும் பள்ளிகளில் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
குழந்தை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன்.
கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், கவுன்சிலர்கள் எழிலரசன், ரவி, முருகவேல், சமூக பணியாளர் பாரதி, விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
- சாதனை புத்தகத்தில் இடம் பெற்று, பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
- இன்னும் பல சாதனைகள் புரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
உடுமலை:
உடுமலை அடுத்த கொங்கலக்குறிச்சி பகுதியைச்சேர்ந்த தம்பதியர் கார்த்தி, ஹர்சா. இவர்களின் 3வயது மகள் தனு, மழலைப் பருவத்திலேயே பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் செய்து வருகிறார்.அவ்வகையில் புதிர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டும் தனு, குறித்த நேரத்தில் காண்பிக்கும் பொருட்களை பார்த்து அந்த பெயர்களை சரியாக சொல்கிறார்.மேலும் தேசிய சின்னங்கள், தலைவர்கள், உணவுப்பொருட்கள், வண்ணங்கள், ஆடைகள், உடலின் பாகங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற, 60 பொருட்களை கலைத்து வைத்தாலும் நாம் சொல்லும் பொருட்களை சரியான முறையில் எடுத்து, 17.15 நிமிடத்தில் அதனை புதிர் விளையாட்டு அட்டையில் அடுக்கி வைக்கிறார்.இவர் வெளிப்படுத்திய இந்த திறமை, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று, பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.அவரது பெற்றோர் கூறுகையில், குழந்தையின் திறமையை ஊக்கப்படுத்தி வருகிறோம். தவிர, ஸ்லோகம் சொல்வதிலும் பயிற்சி பெறுகிறார். புதிர் விளையாட்டின் திறமை, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இன்னும் பல சாதனைகள் புரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
முதல் ஆறு மாதம் வரை குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள். முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள்.
கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம். சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பெரிய ரிங், ராட்டில்ஸ், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம்.
ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம். சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.
1 வயது வரை குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள். உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள்.
தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம்.
முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.
1. முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள்.
2. ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும்.
3. வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும்.
4. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும்.
5. கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.
இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள்.
கேரளாவின் வட எல்லையில் உள்ள நகரம் காசர்கோடு.
காசர்கோட்டை சேர்ந்த தம்பதி சானியா-மித்தா. இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காசர்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு இதய கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.
நேற்று குழந்தையின் உடல்நிலை மோசமானது. மேல் சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபற்றி டாக்டர்கள், குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தையை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர்.
மேலும் இந்த தகவல் கேரள அரசின் குழந்தைகள் நல அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர்கள் இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜா கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மின்னல் வேகத்தில் வந்தாலும் கூட 10 முதல் 12 மணி நேரம் ஆகும். அதுவரை குழந்தையின் உயிரை பாதுகாப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கொச்சியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளிக்க மந்திரி சைலஜா ஏற்பாடு செய்தார். குழந்தைக்கு கேரள அரசின் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
காசர்கோட்டில் இருந்து கொச்சி 400 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்த சாலை. இதில் ஆம்புலன்சில் வந்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
குழந்தையை காப்பாற்றவும், குழந்தையை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சிற்கு வழி விடவும் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் நல அதிகாரிகளும், மந்திரி சைலஜாவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த செய்தி சமூக ஊடகங்கள் வழியாக வைரலாக பரவியது. காசர்கோட்டில் குழந்தையுடன் புறப்பட்ட ஆம்புலன்சிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கூட மக்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசார் மற்றும் மந்திரியின் ஏற்பாட்டால் காசர்கோட்டில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்சு 400 கி.மீ. தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து கொச்சி அமிர்தா ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.
அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, குழந்தையின் உடல்நிலை குறித்து 24 மணி முதல் 48 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும். நாங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம் என்றனர்.
கேரள மந்திரியின் ஏற்பாட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் திரும்ப வேண்டும் என்பதே கேரள மக்களின் விருப்பம். கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற கேரள மக்கள் எடுத்த மனித நேய முயற்சி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. #KeralaHealthMinister
குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.
என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?
குழந்தையை குளிப்பாட்டுவது
தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
நாப்கின் மாற்றுவது.
குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
குழந்தையுடன் நேரம் செலவழிப்பது
இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும். குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும்.
குழந்தை சாப்பிடவில்லை என்றால் அப்பாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அடிப்பாரு அல்லது வீட்டில் மாமா, சித்தப்பா எவரேனும் இருந்தால் அவர்களை காண்பித்து குழந்தையை பயமுறுத்தி உணவு ஊட்டுவது, தூங்க செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. இதெல்லாம் தவறான வளர்ப்பு முறை.
தந்தை செய்ய வேண்டியவை
குழந்தையுடன் விளையாடுதல்
நல்லது சொல்லிக் கொடுத்தல்
குழந்தைக்கு வரைய கற்றுக் கொடுப்பது
குழந்தையின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவது
மரியாதை சொல்லி தருவது
குழந்தைகளை டிவி பார்க்காமல் தவிர்ப்பது
மொபைலில் விளையாட விடாமல் தவிர்ப்பது
குழந்தைகள் முன் செல்போன் அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
குத்துச்சண்டை, நாடகங்கள் போன்ற டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பது.
குழந்தையை ஓடியாடி விளையாட செய்வது.
நல்ல தரமான கதைகளை சொல்வது
தந்தை இப்படி பல நல்ல பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் குழந்தை இச்சமூகத்தில் நல்ல குழந்தையாக வளரும்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே பிராதிகாரன்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது33). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 9 மாத குழந்தை தர்ஷன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளான். இதில் வாயில் காயம் ஏற்பட்டதால் குழந்தையை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி வார்டில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை அளிக்கவில்லை. இதுகுறித்து உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் எடுத்து கூறி உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உதயகுமார் குடும்பத்தினரை வெளியேற்றி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நீண்ட நேரமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து புகார் அளித்தபோது டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்காமல் கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றி விட்டனர் என்றனர்.
இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
காரைக்குடியை சேர்ந்த சந்தானலட்சுமி-சிவக்குமார் தம்பதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
பேறு காலத்தில் சந்தான லட்சுமிக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 7 மாதத்தில் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் 625 கிராம் எடை மட்டுமே இருந்தது.
மேலும் குழந்தையின் உள் உறுப்புகளும் சரிவர வளர்ச்சி அடையவில்லை. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த குழந்தையை பெற்றோர் சேர்த்தனர். குழந்தைக்கு சுவாசக்கோளாறு பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் உயர் சிகிச்சை காரணமாக தற்போது அந்த குழந்தையின் எடை 2 கிலோவாக உயர்ந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருந்து வருவதாக பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் கமலரத்தினம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பொதுவாக பிறந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எடை குறைந்த இந்த குழந்தைக்கும் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பக்க விளைவுகள், நோய் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நுரையீரல், கருவிழி உள்பட பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும்.
மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தையை பல்வேறு சிக்கல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் போராடி மருத்துவர் குழு காப்பாற்றியுள்ளது. இதனால் குழந்தையின் எடை 2 கிலோ எடை அதிகரித்துள்ளது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரலாற்றிலேயே இவ்வளவு குறைவான எடை கொண்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்தது இதுவே முதன்முறையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது குழந்தையை தாய் சந்தானலட்சுமி கவனமாக பார்த்து கொள்கிறார். குழந்தையின் எடை படிப்படியாக உயரும் வரை குழந்தையின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்