search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam"

    அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HoochTragedy #AssamHoochTragedy
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோலாஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு கோல்ஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பலர், அப்பகுதியில் உள்ள வியாபாரியிடம் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். 

    அந்த சாராயத்தை குடித்த சிறிது நேரத்திற்குள் சிலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். 200க்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தினந்தோறும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.



    சம்பவம் நடந்த நான்காவது நாளான இன்றைய நிலவரப்படி விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலால் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HoochTragedy #AssamHoochTragedy
    அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. #HoochTragedy #AssamHoochTragedy
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோலாஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு கோல்ஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பலர், அப்பகுதியில் உள்ள வியாபாரியிடம் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். 

    அந்த சாராயத்தை குடித்த சிறிது நேரத்திற்குள் சிலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் சாராயம் குடித்த அனைவரும் கோலாஹாட் மற்றும் ஜோர்ஹாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் சிறிது நேரத்திற்குள் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
     
    இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை மாநில கலால்துறை வெளியிட்ட தகவலின்படி, கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அசாம் மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலால் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 12 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ள சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #HoochTragedy #AssamHoochTragedy
    அசாம் மாநிலத்தில் சிலாகட் பகுதியை சென்னை தாம்பரத்துடன் இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று தொடங்கி வைத்தார். #SilaghatTambaram #weeklyexpresstrain
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் வசிக்கும் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை செல்வதற்காக ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் சிலாகட் பகுதியை சென்னை தாம்பரத்துடன் இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று தொடங்கி வைத்தார்.

    அசாம் மாநிலத்தின் நகாவ் ரெயில் நிலையத்தில் இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று சிலாகட்  - தாம்பரம் இடையிலான வாராந்திர புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

    இதேபோல், திங்கட்கிழமை இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில், வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு சிலாகட்டை அடையும்.

    இந்த வாராந்திர ரெயில் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என ராஜன் கோஹைன் தெரிவித்தார்.
    #SilaghatTambaram #weeklyexpresstrain
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அசாம் மாநிலத்தில் 26-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ParliamentElection
    கவுகாத்தி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களில் தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை வலுவான கூட்டணி அமையவில்லை. இதை பயன்படுத்தி வட கிழக்கு மாநிலங்களில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார்.

    வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 14 எம்.பி. தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்திருந்தது.

    இந்த தடவை 6 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று ராகுல் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதை கருத்தில் கொண்டு ராகுல் அடுத்த வாரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல உள்ளார்.

    அசாம் மாநிலத்தில் அவர் 26-ந்தேதி பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.



    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு வடமாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே குடியுரிமை சட்டத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்ய ராகுல் முடிவு செய்துள்ளார்.

    ஆனால் ராகுல் பிரசாரத்தை முறியடிக்க ஏற்கனவே பா.ஜனதா வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கி விட்டது. பிரதமர் மோடி ஏற்கனவே அசாமில் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமித்ஷாவும் வடகிழக்கு மாநிலங்களில் பல தடவை பிரசாரம் செய்து முடித்துள்ளார். #Congress #RahulGandhi #ParliamentElection
    பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளார். #CitizenshipBill #PMModi
    திஸ்பூர்:

    அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இடாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, உரையாற்றினார்.

    இதையடுத்து, அவர் அசாம் மாநிலத்துக்கு சென்றார். அசாம் மாநிலத்தின் சுகாதார துறை மந்திரி ஹிமாடா பிஸ்வா சர்மாவின் தொகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.



    அப்போது அவர் பேசுகையில், குடியுரிமை மசோதாவால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்றபிறகே, இந்த மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். #CitizenshipBill #PMModi
    அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள 251 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 1304 பஞ்சாயத்து அமைப்புகள், 1304 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும் 13 ஆயிரத்து 40 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 5 மற்றும் 9 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வுடன் சட்டசபையில் கூட்டணியாக செயல்படும் அசாம் கனபரிஷத் கட்சி இந்த தேர்தலை தனியாக சந்திக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

    இங்குள்ள 16 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 899 பதவிகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 81.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.



    இந்நிலையில், மீதமுள்ள 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 169 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 895 பஞ்சாயத்து அமைப்புகள்,  895 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும்  8950 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகளுக்கு இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இன்றிரவு எட்டுமணி நேர நிலவரப்படி, சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 900 வாக்குச்சாவடிகளில் கடைசி நேரத்துக்கு பின்னரும் வாக்குப்பதிவு நடைபெற்றதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ஹெச்.என்.போரா தெரிவித்தார். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக, இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. கச்சார், கரிம்கஞ்ச், நல்பாரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இங்கு வரும் 11-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருகட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும். #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    அசாமில் சென்ற இன்டர்சிட்டி ரெயிலில் திடீரென குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. #AssamExplosion #IntercityExpressExplosion
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள காமக்யா ரெயில் நிலையத்தில் இருந்து டெகர்கோன் ரெயில் நிலையத்திற்கு இன்டர்சிட்டி பயணிகள் ரெயில் சென்று வருகிறது.

    இந்நிலையில், காமக்யா - டெகர்கோன் இன்டர்சிட்டி ரெயில் இன்று வழக்கம்போல் புறப்பட்டது. இந்த ரெயில் உதால்குரி என்ற பகுதியை இரவு 7.05 மணிக்கு வந்தடைந்தது.

    அப்போது அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அந்த ரெயிலில் பயணம் செய்த 11 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #AssamExplosion #IntercityExpressExplosion
    மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. #CitizenshipBill #AssamProtest #AASU
    கவுகாத்தி:

    மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 46 அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் 23-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.



    இந்நிலையில் அசாம் மாணவர் அமைப்பான ஏஏஎஸ்யு மற்றும் 28 அமைப்புகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. கவுகாத்தியின் கணேஷ்குரியில் இருந்து திஸ்பூர் வரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். #CitizenshipBill #AssamProtest #AASU
    அசாம் மாநிலத்தில் உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ULFAAttack
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனி பகுதியில் தோலா - சாடியா பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகில் இன்று இரவு 8.15 மணிக்கு உல்பா பயங்கரவாதிகள் திடீரென திரண்டனர்.

    அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றினர்.

    உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதை அறிந்த முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #ULFAAttack
    அசாமில் உள்ள ஒரங் தேசிய பூங்காவில் காண்டாமிருகங்களை வேட்டையாடிய 2 பேரை அம்மாநில போலீசார் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளிய தகவல் வெளியாகியுள்ளது.
    திஷ்பூர் :

    இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் ஒராங் தேசிய பூங்காவில் வசித்து வருகின்றன.

    கெரட்டின் என்னும் பொருள் நிறைந்துள்ள காண்டாமிருக கொம்புகளுக்கு கள்ளச்சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி. இவை மருந்து தயாரிக்கவும், குத்துவாள், கத்தி உள்ளிட்டவைகளை அலங்காரப் பொருள்களாக உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் சமூக விரோதிகளால் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு அவற்றின் கொம்புகள் முறைகேடான வழியில் விற்கப்படுகின்றன.

    இந்நிலையில், வேட்டைக்காரர்களை துடைத்தெறியும் நோக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் அசாம் மாநில போலீசார் இணைத்து கூட்டாக ஒராங் தேசிய பூங்கா வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் போலீசார் கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதற்கு பதிலடியாக அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் சத்தம் வராமக் சுடுவதற்கு பயன்படும் துப்பாக்கி சைலன்சர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.



    இந்தியாவில் உள்ள காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் சுமார் 27% உயர்ந்திருந்தாலும், அவை இன்னமும் ஆபத்தான சூழலிலேயே இருக்கின்றன. தொடரும் மிருக வேட்டை, நகரமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றால், காண்டாமிருகங்கள் அழியும் விளிம்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. #Oscars91 #Oscars2019 #VillageRockstars
    கவுகாத்தி:

    உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



    இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அசாம் அமைச்சரவையில் தீர்மானம் போடப்பட்டு, வில்லேஜ் ராக்ஸ்டார் படத்துக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இயக்குனருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 

    ரீமா தாஸ் இயக்கிய இத்திரைப்படம் ஏற்கனவே இந்தாண்டுக்கான தேசிய விருதினை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Oscars91 #Oscars2019 #VillageRockstars
    அசாம் மாநிலத்தில் உள்ள குளம் ஒன்றில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற உள்ளூர்வாசிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் 11 ஆயிரம் வோல்ட் மின் அழுத்தம் பாயும் உயர் மின் அழுத்தக்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. மின்சாரம் பாய்வதால் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.

    இதையடுத்து, மின்சாரம் தடை செய்யப்பட்டது என நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 78 பேர் குளத்தில் மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென அந்த மின்கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து குளத்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

    அவர்களை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல் மந்திரி சர்பனந்தா சோனோவால், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். #Assam
    ×