search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested youth"

    ஆதம்பாக்கத்தில் அதிக பணம் வசூலித்ததால் மதுபார் மேலாளரின் மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூர் 30-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் ஆதம்பாக்கம் நியூ காலனி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார். அதிகாலை 3 மணியளவில் இவருக்கும் மதுபார் மேலாளர் கார்த்திக் (29). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட மோதலில் அங்கு நிறுத்திருந்த மேலாளர் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளை ஸ்ரீராம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிக பணம் வசூலித்ததால் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிளை எரித்ததாக அவர் கூறினார்.

    இப்பகுதியில் இந்த பார் இரவு முழுவதும் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சுமலதா (வயது 31). இவருடைய பெற்றோர் வீடு அதே பகுதியில் உள்ளது. இதனால் நேற்று சுமலதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சுமலதாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.1000 மதிப்புடைய செல்போன், ரூ.150 ஆகியவற்றையும் பறித்தனர்.

    இந்த வழிப்பறி சம்பவத்தால் சுமலதா அதிர்ச்சி அடைந்தார். அவர், ‘‘திருடர்கள்... திருடர்கள்.. யாராவது வந்து அவர்களை பிடியுங்கள்’’ என சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். உடனே அந்த வாலிபர்கள் கத்தியை எடுத்துக்காட்டி யாராவது பக்கத்தில் வந்தால் குத்திக்கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சுமலதா கண்ணீர் மல்க அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சுமலதாவிடம் நகை மற்றும் பணத்தை பறித்தவர்கள் சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த கார்த்திக் (21) மற்றும் தாதகாப்பட்டி, சண்முகாநகரை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இரவு போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து செல்போனையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வழிப்பறி செய்த நகை ஆகியவற்றை என்ன செய்தார்கள்? என்பது பற்றி 2 பேரும் சொல்லவில்லை. இவர்கள் மீது 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருக்கின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருக்கோவிலூர் அருகே இளம்பெண்ணை ஏரிக்கரைக்கு கொண்டு சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள வடமாமாந்தூரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சிவசங்கர் (வயது 25). சம்பவத்தன்று இவர் இளையனார்குப்பத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அரும்பராம்பட்டு அருகில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.

    ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 28). இவருக்கு திருமணமாகி விட்டது. டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மாமியார் வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தில் உள்ளது. அங்கு பரசுராமன் வேலை வி‌ஷயமாக அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கனிமொழி (26) என்ற இளம் பெண்ணுக்கும், பரசுராமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது பரசுராமன் ஆசைவார்த்தை கூறி கனிமொழியிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கனிமொழி கர்ப்பமானார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் கனிமொழியை சந்தித்து பேசுவதை பரசுராமன் தவிர்த்து வந்தார். இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து பரசு ராமனை கைது செய்தார்.

    8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது தந்தை நடத்தும் கடைக்கு சென்றிருந்தார். கடையில் சிறுமி தனியாக இருந்தாள்.

    அப்போது அங்கு வந்த அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லாணை பகுதியை சேர்ந்த ராம்குமார் (32) என்பவர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி, தாயிடம் கூறியுள்ளார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ராம்குமாரை கைது செய்தனர்.

    திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    சின்னமனூர் அருகே உள்ள கீழப்பூலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல் (வயது 23). இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் தேனி அரண்மனைப் புதூரைச் சேர்ந்த மாணவியும் படித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

    மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி கிருஷ்ணவேல் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி கிருஷ்ணவேலிடம் வற்புறுத்தியுள்ளார். இருவரும் வெவ்வேறு பிரிவு என்பதால் கிருஷ்ணவேல் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேலை கைது செய்தனர்.

    செய்யாறு அருகே மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த ராந்தம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை

    இது குறித்து மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் என்பவர் மாணவியை கடத்தி சென்று பாலியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டு சுரேசை பேக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரியில் வங்கி மற்றும் வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குகளை திருடிய கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கிருஷ்ணகிரி அருகே உள்ள பீமான்டப்பள்ளி புளியஞ்சேரி பகுதியை சேர்ந்தவ டிரைவர் சரவணன் (வயது 34). இவர் கடந்த 12-ந் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள வங்கி எதிரே உள்ள பகுதியில் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள தனது பைக்க நிறுத்தி விட்டு அந்த பகுதியில் தனது வேலை முடித்து கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து சரவணன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் இதேபோல் கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள பழக்கடை நடத்திவரும் சுகுமார் (63) என்பவரது ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தையும் கடந்த 9ம் தேதி மர்மநபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து சுகுமாரும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து பைக் திருடனை தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பைக்கில் வந்த நபரை விசாரித்தபோது கர்நாடகா மாநிலம், பங்காரூபேட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ் மகன் பிரவின்(23) என்பதும், மற்றும் சரவணன், சுகுமார் ஆகியோரின் பைக்கை திருடியது தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து பிரவினை கைது செய்தனர்.
    பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் சிறுத்தையை வேட்டையாடிய வழக்கில் தேடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறுபந்தக்கல் அம்மன் பதியை சேர்ந்தவர் சரவணக்குமார்(35), வழிபறி கொள்ளையன். இவர் மீது ஆழியாறு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. ஆழியாறு அணைக்கு வரும் காதலர்களை மிரட்டி துன்புறுத்துவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சரவணக்குமார் மீது உள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் பொள்ளாச்சி வனச் சரகத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கு வைத்து பிடிக்கப்பட்டு அதன், நகங்கள், பற்கள் திருடப்பட்டிருந்தது. சுருக்கு வைத்து பிடிக்கப்பட்டதற்கான தடையத்தை அழிப்பதற்காக கொள்ளையர்கள் சிறுத்தையின் தலையை கழுத்துடன் அறுத்து இருந்தனர்.

    அதற்கு சில மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை ஒன்றும் இதேபோல் வேட்டையாடப்பட்டு காண்டூர் கால்வாயில் வீசப்பட்டு திருமூர்த்தி அணையில் உடல் கிடைத்தது. இப்படி தொடர்ச்சியாக சிறுத்தையை வேட்டையாடிய வழக்கில் பொள்ளாச்சி வனத்துறையினர் சரவணக்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சம்பந்தபட்ட சிலரை ஆழியாறு சோதனைச் சாவடிக்கு அழைத்து சென்று விசாரணையும் நடத்தினர். அப்போது, சோதனை சாவடிக்கு சென்ற சரவணக்குமாரின் ஆதரவாளர்கள் வனத்துறையினர் மிரட்டி விசாரணை வளையத்தில் இருந்தவர்களை மீட்டுச்சென்றனர். போலீஸ், சப்-கலெக்டர் விசாரணை என தொடர்ந்ததால் வனத்துறையினர் சிறுத்தையை வேட்டையாடியவர்களை நெருங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் சிறுத்தையை வேட்டையாடியதாக வனத்துறையினரால் முக்கிய நபராக கருதப்பட்ட சரவணக்குமார் கேரளாவில் 2நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து நகையை பறித்த வழக்கில் கொல்லங்கோடு போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை பொள்ளாச்சி வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    புதுவையில் 15 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கோவிந்த சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருவக்கரையில் வைத்து திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரது வயது 15 என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து டாக்டர்கள் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழுவினர் அந்த இளம்பெண் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த பெண்ணுக்கு 15 வயது தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் அளித்தனர்.

    அதை விசாரித்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அந்த புகாரை பெரியகடை போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் மற்றும் போலீசார் விசாணை நடத்தி இளம்பெண்ணை திருமணம் செய்த மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி மாநாடு வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் புதுவையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்து வருகிறார்கள். அதுபோல் பிச்சைவீரன்பேட் வடக்கு வாய்க்கால் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகட்சியின் ஓவியர்அணி செயலாளர் அங்காளன் (வயது34). என்பவர் சம்பவத்தன்று பத்துகண்ணு- ஊசுட்டேரி சாலையில் சுவர் விளம்பரம் எழுதி கொண்டு இருந்தார்.

    அப்போது கணுவாய்ப்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்ட 3 பேர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அங்காளனுடன் தகராறு செய்து சுவர் விளம்பரம் செய்ய வைத்திருந்த பெயிண்டை கீழே கொட்டி சேதப்படுத்தினர். மேலும் இதனை தட்டிக்கேட்ட அங்காளனை அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து அங்காளன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    குடிபோதையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை சேர்ந்தவர் சந்திரன். 108 ஆம்புலன் டிரைவர். இவர் நேற்று திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ்சில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் கும்பல் சந்திரனிடம் வீண்தகராறு செய்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த சந்திரன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவரது தரப்பில் மருத்துவ அலுவலர் செல்வகுமார் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பத்தூர் சிவராஜ்நகரை சேர்ந்த கணேசன் (வயது 25). என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தன்ராஜ் மற்றும் ஜெயகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    ×