search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது
    X

    திருக்கோவிலூர் அருகே இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது

    திருக்கோவிலூர் அருகே இளம்பெண்ணை ஏரிக்கரைக்கு கொண்டு சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள வடமாமாந்தூரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சிவசங்கர் (வயது 25). சம்பவத்தன்று இவர் இளையனார்குப்பத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அரும்பராம்பட்டு அருகில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.

    Next Story
    ×