search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle burned"

    கரூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் திடீரென தீப்பிடித்ததில், 28 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
    வெள்ளியணை:

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து பேட்டரியால் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உத்தரபிரதேச மாநிலம் பகேட்டியாபூர் பகுதியை சேர்ந்த விஜய்நாராயணன் (வயது 41) ஓட்டினார்.

    அந்த லாரி நேற்று காலை சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அருகே உள்ள ஆட்டயாம்பரப்பு பகுதியில் சென்றபோது, கன்டெய்னர் லாரியில் இருந்து புகை வருவதை டிரைவர் பார்த்து, லாரியை சாலையோரம் நிறுத்தினார்.

    இதில் கன்டெய்னரில் உள்ளே இருந்த மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருப்பதால் தான் புகை வருவது தெரிய வந்தது. இதையடுத்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், தாந்தோணிமலை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படைவீரர்கள், கன்டெய்னர் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற 28 புதிய மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆதம்பாக்கத்தில் அதிக பணம் வசூலித்ததால் மதுபார் மேலாளரின் மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூர் 30-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் ஆதம்பாக்கம் நியூ காலனி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார். அதிகாலை 3 மணியளவில் இவருக்கும் மதுபார் மேலாளர் கார்த்திக் (29). என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட மோதலில் அங்கு நிறுத்திருந்த மேலாளர் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளை ஸ்ரீராம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிக பணம் வசூலித்ததால் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிளை எரித்ததாக அவர் கூறினார்.

    இப்பகுதியில் இந்த பார் இரவு முழுவதும் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    குன்னூரில் 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் போலீசார் தேடி வருகிறார்கள்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் வீதியில் அரவிந்தன், ஜெகதீஸ், சசிகுமார், அபுதாகிர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நேற்று இரவு வீட்டு முன்பு தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

    தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 4 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. இது குறித்து 4 பேரும் குன்னூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    ×