search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Android"

    அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.

    அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.



    அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது. 
    ஆண்ட்ராய்டு தளத்தின் கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்படுகிறது. இது பயனர் இருக்குமிடத்தை சுற்றி போக்குவரத்து நிலவரங்களை பார்க்க வழி செய்கிறது. #GoogleMaps



    கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய வசதி சேர்க்கப்படுகிறது. முன்னதாக கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சத்தை தொடர்ந்து புதிய வசதி சேர்க்கப்படுகிறது.

    பயனர்கள் இனி கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பதிப்பின் விபத்து தெரிவிக்கும் ஆப்ஷனில் ஸ்லோடவுன் (Slowdown) வசதி மூலம் நெரிசல் இருக்கும் பகுதிகளை தெரிவிக்கலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் இந்த வசதி சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கடந்த மாதம் கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்கும் வசதி சேர்க்கப்பட்டது. இதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிபோர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டது. இதனை க்ளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்கலாம். 



    இதேபோன்று மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துக்களையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கிறது. இதனால் அதே வழியில் வருவோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் ஸ்லோடவுன் ஆப்ஷன்களின் மூலம் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் குறைவான போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா அல்லது கூட்ட நெரிசல் மட்டும் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு (வெர்ஷன் 10.12.1) பதிப்பில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சத்தை பயன்படுத்த ஒருவர் நேவிகேஷன் மோட் சென்று ஏரோ அப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி திரையில் திறக்கும் மெனுவில் ஆட் எ ரிப்போர்ட் ஆப்ஷனிலேயே ஸ்லோடவுன் பட்டன் இடம்பெற்றிருக்கும். எனினும், இந்த வசதி சாதனத்தின் செட்டிங்கிற்கு ஏற்ப மொழி அடிப்படையில் வித்தியாசமாக தோன்றலாம்.

    புகைப்படம் நன்றி: xda-developers
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பரீட்டா செயலியில் பல்வேறு புதிய அம்சங்Kள் சோதனை செய்யப்படுகின்றன. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட், மேம்பட்ட சர்ச் மற்றும் கைரேகை வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட இருக்கின்றன. சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ மற்றும் ஃபிரீக்வென்ட் ஃபார்வேர்டிங் என இரு அம்சங்களை சோதனை செய்வதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.86 பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்ய முடியும். 

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உருவாக்கப்படும் இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.100 பதிப்பில் காணப்பட்டது. கூடுதலாக புதிய பீட்டா அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி. மோட்) மேம்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பி.ஐ.பி. மோட் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டு பின் டிசம்பர் மாதம் ஆண்ட்ராய்டில் வழங்கப்பட்டது.



    இதுவரை ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பி.ஐ.பி. மோட் சாட்களிடையே நேவிகேட் செய்து கொண்டே வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கிய நிலையில், ஆண்ட்ராய்டு தளத்தில் ஒரு சாட் ஸ்கிரீனில் இருந்தபடி வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஐ.ஓ.எஸ். தளத்தில் இருப்பது போன்று ஆண்ட்ராய்டிலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 

    மேம்பட்ட பி.ஐ.பி. மோட் கொண்டு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் சிறிய வீடியோவினை சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறினாலும் தொடர்ந்து பார்க்க முடியும். எனினும் சமீபத்திய பீட்டா பதிப்பில் இந்த வசதி செயலிழக்க செய்யப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படலாம். #WhatsApp



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் 2.19.82 வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கிறது. செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் ஒருவழியாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய பீட்டா பதிப்புகளில் வெளியான விவரங்களில் மேலும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட இருப்பதை வெளிப்படுத்தின. 

    வாட்ஸ்அப் செயலியில் அனைவருக்கும் டார்க் மோட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.82 பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதியின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 



    ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய மோட் நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ், டேட்டா, ஸ்டோரேஜ் செட்டிங்ஸ், சாட் செட்டிங்ஸ் மற்றும் அக்கவுண்ட் செட்டிங் உள்ளிட்டவற்றில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டார்க் மோட் வசதி OLED பேனல்களுக்கு ஏற்றதாக இருக்காது என்றும் இது டார்க் கிரே நிறம் சார்ந்து உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அம்சம் தற்சமயம் தானாக எனேபிள் செய்யப்படவில்லை. இதனால் செயலியை புதிய 2.19.82 வெர்ஷனுக்கு அப்டேட் செய்திருந்தாலும் இந்த அம்சத்தினை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்படுகிறது.

    சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.80 பதிப்பில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என இரு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    புகைப்படம் நன்றி: WABetaInfo
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் எமோஜி சேர்க்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் போட்டோக்களை டூடுள் செய்யும் போது எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை தேட வழி செய்யும் அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.

    இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற பாலினத்தவரை குறிக்கும் எமோஜிகளும் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் திருநங்கைகளை குறிக்கும் எமோஜி வழங்கப்பட இருப்பது பற்றி ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும் இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் எமோஜிபீடியா வலைதளத்தின் உதவியுடன் திருநங்கை எமோஜியை சாட்களில் மறைக்கும் வசதியை சேர்த்திருக்கிறது.



    இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருநங்கை எமோஜி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.73 வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை கொண்டு தேட வழி செய்யும் சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சமும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சர்ச் பை இமேஜ் அம்சம் கொண்டு பயனர்கள் அனுப்பிய அல்லது அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானது தானா என கண்டறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இவைதவிர, வாட்ஸ்அப் செயலியில் ஆடியோக்களை அனுப்பும் முன் அவற்றை கேட்கச் செய்யும் வசதியும் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒரேசமயத்தில் அதிகபட்சம் 30 ஆடியோ ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. 
    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஸ்டேடியா எனும் கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. #Google



    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது கேமிங் சேவையை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஜி.டி.சி. 2019 நிகழ்வில் கூகுள் தனது கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. கூகுள் ஸ்டேடியா என அழைக்கப்படும் புதிய சேவையை கொண்டு தொலைகாட்சியில் கேம்களை விளையாடலாம்.

    இதுமட்டுமின்றி கூகுள் ஸ்டேடியா பயன்படுத்தி கூகுள் க்ரோம்காஸ்ட் அல்ட்ரா கொண்டு லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட், அல்லது மொபைல் போன் உள்ளிட்டவற்றில் 4K தரம் நொடிக்கு 60 ஃபிரேம் வேகம் ஹெச்.டி.ஆர். தரத்தில் சரவுண்ட் சவுண்ட் நுட்பத்தில் கேம் விளையாடலாம். 



    ஸ்டேடியா கேமிங் சேவை முழுமையாக ஆன்லைனில் விளையாட வேண்டும் என்பதால், இண்டர்நெட் இணைப்புக்கு ஏற்ப கேம்பிளே அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். கேம்களை உருவாக்க கூகுள் தனது டெவலப்பர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ஸ்டேடியாவின் கிரவுட் பிளே அம்சம் கொண்டு பார்வையாளர்கள் நேரலையில் ஸ்டிரீம் செய்யப்படும் கேமில் கலந்துகொள்ளலாம்.

    கூகுளின் டேட்டா சென்டருடன் நேரடியாக இணைக்கப்படும் ஸ்டேடியா கண்ட்ரோலரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேமிங் அனுபவத்தை வைபை இணைப்பின் மூலம் சிறப்பாக மேம்படுத்த முடியும். இதில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்டன்ட் கேப்ச்சர் அம்சம் கொண்டு கேம்பிளேக்களை 4K தரத்தில் யூடியூபில் பகிர்ந்து கொள்ள முடியும்.



    இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கூகுள் ஸ்டேடியா ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்வது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கூகுள் ஸ்டேடியா அறிமுக வீடியோவை கீழே காணலாம்

    ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மால்வேர் மற்றும் வைரஸ் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக கூறும் செயலிகள் பெரும்பாலும் இப்படித் தான் இயங்குகின்றன. #Android



    மொபைல் போன்கள் மற்றும் டெஸ்க்டாப்களில் மிகவும் அவசியமான செயலிகளாக பலரும் பார்க்கும் ஆண்டிவைரஸ் செயலிகள் பற்றிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

    சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் பெரும்பாலான ஆண்டிவைரஸ் மற்றும் ஆண்டி-மால்வேர் செயலிகள் பயனற்றதாகவோ அல்லது நம்ப முடியாதவொன்றாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்த்ரியாவை சேர்ந்த ஆண்டிவைரஸ் சோதனை நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

    இந்நிறுவனம் 250 செயலிகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2000 மால்வேர் செயலிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெறும் 30 சதவிகித செயலிகளே மால்வேர்களை ஓரளவு சரியாக கண்டறிந்தன. இதிலும் பெரும்பான்மை முடிவுகள் தவறாகவே இருந்தன.



    ஆய்வாளர்கள் தேர்வு செய்த 250 செயலிகளை ஒவ்வொன்றாக ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆண்ட்ராய்டு சாதனங்களில் இவற்றை இன்ஸ்டால் செய்து, சாதனம் தானாக பிரவுசர் மூலம் மால்வேர் நிறைந்த செயலிகளை டவுன்லோடு செய்ய வைக்கப்பட்டன. இந்த வழிமுறை 2000 முறை பின்பற்றப்பட்டன, இதில் செயலிகளால் வைரஸ் அல்லது மால்வேர்களை கண்டறியமுடியவில்லை. 

    ஆண்டிவைரஸ் செயலிகளில் 2018 ஆம் ஆண்டின் பரவலான ஆண்ட்ராய்டு மால்வேர் அச்சுறுத்தல்களே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பதால், இந்த செயலிகள் கிட்டத்தட்ட 90 முதல் 100 சதவிகிதம் வரை மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்திருக்க வேண்டும். எனினும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட செயலிகளில் 170 செயலிகள் அடிப்படை சோதனைகளிலும் தேர்ச்சி பெறவில்லை.

    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் பிளே ப்ரோடெக்ட் சேவையை வழங்கியிருக்கிறது. எனினும், பெரும்பான்மையான ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பு வலைதளங்களில் இருந்து APK வடிவில் இன்ஸ்டால் செய்கின்றனர். இவை அவர்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
    கூகுள் ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. #AndroidQ



    கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த இயங்குதளம் கூகுள் I/O 2019 இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக கூகுள் I/O நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்வதை கூகுள் வழக்கமாக கொண்டிருக்கிறது. 

    இதே வழக்கத்தை கூகுள் இம்முறையும் பின்பற்றலாம் என தெரிகிறது. புதிய இயங்குதளத்தில் கூடுதலாக தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்க இருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. இத்துடன் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கென மேம்படுத்துப்பட்டு இருக்கும் என தெரிகிறது.



    மேலும் புகைப்படங்களில் டைனமிக் டெப்த் வசதி, கனெக்டிவிட்டிக்கென புதிய ஏ.பி.ஐ.க்கள், புதிய மீடியா கோடெக்கள் மற்றும் கேமரா வசதிகள், வல்கன் 1.1 சப்போர்ட், வேகமான ஆப் ஸ்டார்ட்அப் போன்ற அம்சங்கள் புதிய இயங்குதளத்தில் சேர்க்கப்படுகின்றன. முதல் பீட்டாவில் சிஸ்டம்-வைடு டார்க் மோட் வழங்கப்படவில்லை.

    எனினும், டார்க் மோட் வசதியை ஏ.டி.பி. மூலம் செயல்படுத்திக் கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படுத்தப்பட்டு இருந்தால், சிலருக்கு மட்டும் தானாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் பேட்டரி சேவர் மோட் சில சிஸ்டம் ஆப்களை டார்க் மோடில் வைக்கிறது.



    தற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் பிக்சல், பிக்சல் XL, பிக்சல் 2, பிக்சல் 2 XL, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL உள்ளிட்ட சாதனங்களில் வழங்கப்படுகிறது. புதிய இயங்குதள வெர்ஷனை ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைதளம் சென்று OTA முறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

    புதிய ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் அடுத்தடுத்த பீட்டா வெர்ஷன் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்படுகிறது. ஆண்ட்ராய்டு கியூ பொது பயனர்களுக்கான இறுதி வெர்ஷன் 2019 ஆண்டின் மூன்றாவது காலாண்டு இறுதியில் வெளியிடப்படும் என தெரிகிறது.
    கூகுள் க்ரோம் சேவையில் டார்க் மோட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதற்கான வசதி க்ரோம் கனாரி செயலியின் மூலம் வழங்கப்படுகிறது. #GoogleChrome



    கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் வலைதளங்களில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. 

    இந்நிலையில் டார்க் மோட் வசதியை செயல்படுத்த பயனர்கள் க்ரோம் கனாரியை பயன்படுத்தலாம். சில வலைப்பக்கங்களில் டார்க் மோட் வித்தியாசமாக பிரதிபலிக்கிறது. இந்த வசதி மொபைல் மட்டுமின்றி வலைதளத்திற்கும் கிடைக்கிறது. டார்க் மோட் வசதியினை ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்திலும் எதிர்பார்க்கலாம்.



    சாம்சங் பிரவுசர் பயன்படுத்தியதை போன்றே வழிமுறையை க்ரோம் சேவையின் டார்க் மோட் வசதியை செயல்படுத்த கூகுள் பின்பற்றலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் டார்க் மோட் வசதியை வழங்குவதில் கூகுள் ஆர்வம் செலுத்தி வருகிறது. 

    டார்க் மோட் வசதியின் மூலம் இரவு நேர பயன்பாடுகளை சிறப்பானதாக மாற்ற முடியும். முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் சீராக வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் வலைதளங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

    எனினும், டார்க் மோட் அனைத்து வலைதளங்களுக்கும் சீராக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இவை பயன்பாட்டு காரணங்களுக்காக வழங்கப்பட்டிருப்பதால், இதனால் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. புதிய டார்க் மோட் க்ரோம் கனாரி புதிய வெர்ஷனில் பயன்படுத்த முடியும்.
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் விரைவில் அட்வான்ஸ் சர்ச் வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க சுமார் 130 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. 

    வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு கைரேகை சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. 

    இவை தவிர, வாட்ஸ்அப் விரைவில் அட்வான்ஸ்டு சர்ச் மோட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனை தினந்தோரும் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அட்வான்ஸ் சர்ச் அம்சம் மூலம் ஒருவர் அதிகப்படியான குறுந்தகவல்களை தேட முடியும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    புதிய ஆப்ஷனிற்கென வாட்ஸ்அப் செயலியில் மீடியா எனும் புதிய வசதி சேர்க்கப்படும் என்றும் இதனை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், ஜிஃப்கள், வீடியோக்கள், டாக்குமென்ட், லிண்க் மற்றும் ஆடியோ உள்ளிட்டவற்றை தேட முடியும். உதாரணத்திறஅகு வாட்ஸ்அப் மீடியா ஆப்ஷனில் புகைப்படங்களை தேர்வு செய்யும் போது, புகைப்படங்கள் மட்டும் வரிசைப்படுத்தப்படும்.

    இதுதவிர மீடியா அபனஷன் வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் எத்தனை மீடியா ஃபைல்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன் சர்ச் ஹிஸ்ட்ரியை பார்க்கும் வசதியும், தேவைப்படாத சமயங்களில் இதனை நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனில் தேடும் போது பிரீவியூ வழங்கப்படும் என்பதால், பயனர் தேடும் தரவுகளை மிகச்சரியாக தேர்வு செய்து பெற முடியும். புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் தொடர்ந்து உருவாக்கும் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய டேப்லெட் எக்சைனோஸ் 7885 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. #Samsung



    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய கேலக்ஸி டேப்லெட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. புதிய டேப்லெட் SM-P205 என்ற மாடல் நம்பரில் உருவாகி வருகிறது. 

    சமீப காலங்களில் புதிய டேப்லெட் பற்றி விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் புதிய கேலக்ஸி டேப்லெட் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. கீக்பென்ச் மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய டேப்லெட் எக்சைனோஸ் 7885 சிப்செட், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.

    இத்துடன் புதிய டேப்லெட் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இது பிளாக் மற்றும் கிரே என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. கீக்பென்ச் தளத்தின் சிங்கிள் கோரில் 1329 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 4150 புள்ளிகளை பெற்றிருந்தது.



    தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி டேப்லெட்களுக்கு SM-P205 என்ற மாடல் நம்பர் பொருந்தவில்லை என்பதால், புதிய சாதனத்தின் அறிமுகம் பற்றி எவ்வித தகவலும் இல்லை. கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருப்பதாக சாம்சங் புதிய டேப்லெட் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய கேலக்ஸி டேப்லெட் பற்றி இதுவரை அதிகப்படியான விவரங்கள் வெளியாகவில்லை என்பதால், கேலக்ஸி அன்பேக்டு விழாவில் இந்த டேப்லெட் அறிமுகமாகாது என்றே கூறப்படுகிறது. சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
    அமேசான் நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் செய்யும் அமேசான் பே யு.பி.ஐ. ஆப் ஆண்ட்ராய்டு வலைதளங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. #AmazonPay



    ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அமேசான் நிறுவனம் அமேசான் பே யு.பி.ஐ. அறிமுகம் செய்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு யு.பி.ஐ. ஐ.டி.க்களை வழங்க அமேசான் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்திருக்கிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை அமேசான் மொபைல் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு செய்த பின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து அதிவேக பணபரிமாற்றங்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அமேசான் பே யு.பி.ஐ. ஐ.டி. கொண்டு அமேசான் வலைதளத்தில் பொருட்களை வாங்கவோ, அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் போதோ, ரீசார்ஜ் அல்லது கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து செலுத்த முடியும்.



    அமேசான் பே யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் மொபைல் வெரிஃபிகேஷன் மற்றும் யு.பி.ஐ. பின் பதிவிட்ட பின்னரே உறுதிசெய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை ஒருமுறை இணஐத்துக் கொண்டு யு.பி.ஐ. பின் செட்டப் செய்துவிட்டால், பின் இதை கொண்டு பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். 

    பிம் யு.பி.ஐ. வழிமுறையை டிஜிட்டல் பேமென்ட் முறையாக பயன்படுத்த அமேசான் வாடிக்கையாளர்களுக்கு இது பயன்தரும் சேவையாக இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் பே யு.பி.ஐ. தளம் மூலம் பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    அமேசான் பே யு.பி.ஐ. பணபரிமாற்றங்களை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இருந்து அமேசான் சேவையில் லாக் இன் செய்து கொண்டு யு.பி.ஐ. சேவையை பேமெண்ட் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் அமேசானில் பொருட்களை வாங்கி, புதிய யு.பி.ஐ. மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.
    ×