search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Festival"

    • துளசி மாலை சார்த்துங்கள்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

    அம்பாள் மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் தன் பக்தர்களின் தேவைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார், இந்த ஆடி மாதத்தில்!

    ஆமாம்... அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் விரதம் இருந்து(துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.

    துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

    ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும். உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி.

    ஏகாதசி திதியில், மகாவிஷ்ணுவை வழிபட்ட பின்னர், ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தனம் - தானியம் பெருகும். அசையாப் பொருட்கள் வீடு மனை என வாங்கும் யோகம் கிட்டும்.

    வீட்டில் சிக்கல், பிரச்சினை என்றிருந்த கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். நல்ல உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல், மாதந்தோறும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும் ஏகாதசி திதி நாளில், ஐந்து பேருக்கோ உங்களால் முடிந்த அளவுக்கோ ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்கி வருவதும் பாவங்களையெல்லாம் போக்கும். புண்ணிய பலன்கள் பெருகும்.

    வேங்கடவனை ஏகாதசியிலும் துவாதசியிலும் வேண்டுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீமந் நாராயணர்.

    • தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.
    • ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடக்கிறது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • வேம்புக்கு சக்தி விருட்சம் என்று பெயர் உண்டு.
    • அம்மன் வழிபாட்டில் அவ்வளவு முக்கியத்துவமானது எலுமிச்சை பழம்.

    அரிசி மாவும் வெல்லமும் அல்லது நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து பிசைந்து, நெய் விட்டு விளக்கை ஏற்றுகிற வழிபாடு மாவிளக்கு. ரேணுகா பரமேஸ்வரியை காப்பாற்றிய சேரிமக்கள், வறுமை காரணமாக, ரேணுகா தேவிக்கு தினைமாவும் தேனும் தான் உணவாகக் கொடுத்தனர். சிலசமயம் ''கூழ்'' கொடுத்தும் காத்தனர். அதை நினைவுபடுத்துகிற மாதிரியான வழிபாடுதான் மாவிளக்குப் போடுவது. கூழ் ஊற்றுவது, ஆடி மாதத்தில் வசதி படைத்தவர்களும் எளிமையான கூழை அம்மனுக்கு படைப்பதும் பிரசாதமாக பிறருக்கு தந்து தானும் குடிப்பதும் அதை நினைவுபடுதுகிற மாதிரியான வழிபாடுதான்.

    பண்டைக்காலம் முதல் ஆடி மாதம் மருந்துக்கஞ்சி தயாரித்து குடிக்கும் வழக்கம் இருந்தது. அதிமதுரம், ஜீரகம், சின்ன வெங்காயம் திருகடுகு, திப்பிலி குன்னிவேர், உழிஞ்சைவேர், சிற்றாமுட்டி இதை கேப்பையில் (கேழ்வரகு) இட்டு கஞ்சி வைத்து துணிப்பையை பிழிந்து பின் அருந்துவதே மருந்துக்கஞ்சி.

    வேம்பு

    பச்சை வண்ணமானவள், பராசக்தி எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கக் கூடியது வேம்பு. அதனால் வேம்புக்கு சக்தி விருட்சம் என்று பெயர் உண்டு. அக்னி வடிவான ரேணுகாதேவி தீயினால் காயம் அடைந்த போது அவளுக்கு மருந்தாகவும், ஆடையில்லாமல் அவள் தவித்த போது அவளது உடையாகவும் இருந்து உதவியது வேம்பு.

    மஞ்சளைப் போலவே வேப்பிலையும் கிருமிகளை ஓட்டி நோய் நீக்கும் தன்மை உடையது. ரேணுகாம்பாளுக்கு உதவிய சேரி பெண், மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்து அரைத்து தீக்காயத்தை ஆற்ற பயன்படுத்தினாளாம். அதனால்தான் அம்மன் விழாவில் வேம்பும், மஞ்சளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    எலுமிச்சை

    எலுமிச்சை மாலை சாத்தப்படாத மாரியம்மன் கோவில்களோ, எலுமிச்சை தீபம் ஏற்றப்படாத காளி, துர்க்கை, மாரியம்மன் சன்னதிகளோ இருக்காது எனக்கூறலாம். அம்மன் வழிபாட்டில் அவ்வளவு முக்கியத்துவமானது எலுமிச்சை பழம். துர்சக்திகளை தூரவிரட்டுகிற சக்தி எலுமிச்சைக்கு உண்டு. அது மட்டுமல்ல அம்பிகையோட அம்சம் எலுமிச்சை பழத்திலும் கலந்துள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு. பொதுவாகவே குளிர்ச்சியான பார்வையும், வெப்பமான திருமேனியும் உடையவள், கனிவான அருளை நமக்கு வழங்குகிற அம்பிகையோட மேனி வெப்பத்தைக் குறைத்து அவளைக் குளிர்விக்க சாற்றப்படுவதுதான் எலுமிச்சைக்கனி மாலை.

    • அம்மனை ஆடி மாதம் விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
    • ஆடி மாதம் இந்த போற்றியை சொன்னால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அன்னை மாரியே போற்றி

    ஓம் அக்கினி சட்டி வளர்ந்தாய் போற்றி

    ஓம் அகிலம் ஆண்ட ஈஸ்வரியே போற்றி

    ஓம் அம்மை முத்தின் மூலமே போற்றி

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

    ஓம் அஷ்டலட்சுமியும் நீயே போற்றி

    ஓம் ஆயிரம் கண்ணுடை போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

    ஓம் இமயத்தரசியே போற்றி

    ஓம் இளநீர்ப் பிரியை போற்றி

    ஓம் ஈஸ்வரன் துணைவி போற்றி

    ஓம் ஊஞ்சல் விழா உமையே போற்றி

    ஓம் ஊத்துக்காடு அன்னையே போற்றி

    ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஐயப்பன் மாதா போற்றி

    ஓம் ஓங்காரப்பெருமாளே போற்றி

    ஓம் கனக துர்க்கா போற்றி

    ஓம் கன்னி வல்லித்தாயே போற்றி

    ஓம் கன்னிகா பரமேஸ்வரி போற்றி

    ஓம் கருமாரித்தாயே போற்றி

    ஓம் கங்கா தேவி தாயே போற்றி

    ஓம் கன்னியாகுமரியே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கண்ணின் மணியே போற்றி

    ஓம் கன்னபுரத்தாளே போற்றி

    ஓம் கலைமகளும் நீயே போற்றி

    ஓம் கரகத்தழகியே போற்றி

    ஓம் காத்யாயன்யளே போற்றி

    ஓம் காயத்திரி தேவி நீ போற்றி

    ஓம் காசி விசாலாட்சி போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் குங்கும அர்ச்சனை பிரியை போற்றி

    ஓம் கூஷ்மாண்டினி தேவியே போற்றி

    ஓம் காஞ்சி காமாட்சி போற்றி

    ஓம் கோட்டை மாரி போற்றி

    ஓம் கோபிநாதன் தங்காய் போற்றி

    ஓம் கவுமாரி கவுரி போற்றி

    ஓம் சமயபுர சக்தி போற்றி

    ஓம் சங்கரன் துணைவி போற்றி

    ஓம் சர்வேஸ்வரி போற்றி

    ஓம் சந்திரகண்டினி போற்றி

    ஓம் சாம்பிராணி வாசகி போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரி போற்றி

    ஓம் சிவகாம சுந்தரி போற்றி

    ஓம் சவுபாக்கியம் அருள்வாய் போற்றி

    ஓம் கொடியேற்றம் விழைவாய் போற்றி

    ஓம் ஞானப் பிரசன்னாம்பிகை போற்றி

    ஓம் தட்சிணி தேவி போற்றி

    ஓம் தண்டினி தேவி போற்றி

    ஓம் தாழங்குறைக்கூடை தழைப்பாய் போற்றி

    ஓம் திண்டி நகருறை தேவி போற்றி

    ஓம் திருவிளக்கின் ஒளியே போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருமகள் உருவே போற்றி

    ஓம் திருமாலழகன் தங்காய் போற்றி

    ஓம் துர்க்கையும் நீயே போற்றி

    ஓம் துலக்கணத்தீஸ்வரி போற்றி

    ஓம் தெப்போற்சவம் விழைந்தனை போற்றி

    ஓம் நல்லமுத்துமாரி போற்றி

    ஓம் நவகாளி அம்மா போற்றி

    ஓம் நவதுர்க்கா தேவியே போற்றி

    ஓம் நாரணார் தங்காய் போற்றி

    ஓம் நாககுடைக்கொள் நாயகியே போற்றி

    ஓம் நான்முகி போற்றி

    ஓம் நாராயிணி போற்றி

    ஓம் நீலிகபாலி போற்றி

    ஓம் பர்வதபுத்திரி போற்றி

    ஓம் நீலாம்பிகை போற்றி

    ஓம் பவானி தேவி போற்றி

    ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

    ஓம் பவளவாய் கிளியே போற்றி

    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மராம்பிகை போற்றி

    ஓம் புவனேஸ்வரி போற்றி

    ஓம் பூச்சொறிதல் பெற்றனை போற்றி

    ஓம் பெரியபாளையத்தம்மை போற்றி

    ஓம் மணிமந்தர சேகரி போற்றி

    ஓம் மஹேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள ரூபணி போற்றி

    ஓம் மஞ்சள் நீராடல் மகிழ்ந்தனை போற்றி

    ஓம் மகிஷா சூரமர்த்தினி போற்றி

    ஓம் மஞ்சள் மாதா போற்றி

    ஓம் மாளி மகமாயி போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் மாங்காடு போற்றி

    ஓம் மாசி விழா மாதா போற்றி

    ஓம் மாவிளக்குப் பிரியை போற்றி

    ஓம் மீனாட்சித் தாயே போற்றி

    ஓம் முண்டினி தேவி போற்றி

    ஓம் முனையொளி சூலி போற்றி

    ஓம் முக்கண்ணி போற்றி

    ஓம் முக்கோண சக்கர மூலமே போற்றி

    ஓம் மூகாம்பிகையே போற்றி

    ஓம் ராஜராஜேஸ்வரி போற்றி

    ஓம் லலிதாம்பிகை போற்றி

    ஓம் வஜ்ரமணித்தேராள் போற்றி

    ஓம் வளம் சேர்க்கும் தாயே போற்றி

    ஓம் விராட் புரவி மலி போற்றி

    ஓம் விஷ்ணு துர்க்கா போற்றி

    ஓம் வேப்பம்பால் உண்டவளே போற்றி

    ஓம் வேப்பிலைக்காரியே போற்றி

    ஓம் வேலவனுக்கு வேல் தந்த வித்தகி போற்றி.

    • ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம்.
    • மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.

    ஆடி மாத வெள்ளி கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனை கருதுவர். ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்குமாடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.

    உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாக தரும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகள் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி செவ்வாய் என்பது, கோவில்களுக்கு சென்று அம்மனை முறைப்படி வழிபட வேண்டிய தினம். ஆடி வெள்ளி என்பது, நம் முன்னோர்களோடு சேர்த்து அம்மனை வழிபடவேண்டிய தினம். ஆடி ஞாயிறு என்பது, அன்னதானத்திற்கு உகந்த தினம்.

    ஆடி மாதம் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுவார் என்பது ஐதீகம். முதன்மையான சிறப்பு ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. ஆடி மாதம்முழுவதும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட உகந்தது. மாரியம்மன் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தான்.

    பக்தர்கள் கூட்டத்திற்கு எப்போதும் குறைவில்லை என்றாலும், ஆடி வெள்ளிகிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காது. பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றும் கோட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். அன்றையதினம் மாரியம்மனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து பக்தி பரவசம் அடைவர்.

    இந்நாளில் அம்மனிடம் என்ன வேண்டினாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி, அங்கு ஊழியம் செய்து, நேற்றிக்கடனை நிறைவேற்றலாம். உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள் , கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர். வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    • தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
    • ஆடி மாதம் மிக சிறப்பானது.

    பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது

    அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன

    வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிக சிறப்பானது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்

    பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலி பெண்களும் இதில் பங்கேற்றனர். "முளைப்பாலிகை" என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாக சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சை பயிறு போன்ற விதைகளை தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து அங்கு வைத்து வளர்ப்பார்கள்

    ஒவ்வொரு நாள் இரவும் அதனை தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பார்கள்

    முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும் என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை

    மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது

    முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே, தங்கள் வம்சமும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் கொண்டாடப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
    • அம்மன் வழிபாடு நம் துன்பங்களை போக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

    * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    * அம்மனை வழிபடும் போது மறக்காமல் 'லலிதாசகஸ்ர நாமம்' சொல்ல வேண்டும்.

    * ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    * ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    * ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    * பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    * பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

    * ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    • குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன.
    • தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்.

    குண்டலினி சக்தியை எழுப்ப பல சாதனங்கள் உள்ளன. பிராணாயாமம் ஒரு வழி. இறைவனிடம் தூய்மையான பக்தி செலுத்துபவர்களுக்கும் குண்டலினி சக்தி எழும்பும். பரிபூரண நிலை அடைந்த முனிவர்கள், ஞானிகள் குருமார்க்கள் தயவினால் எழுப்பப்படும். தத்துவ ஆராய்ச்சியின் வலிமையாலும் குண்டலினி சக்தி எழும்பும்,.

    குண்டலம் என்றால் வளையம், நம்மிடம் உள்ள ஓஜஸ் என்ற சக்தி பாம்பு போல சுருண்டு வளையம் போலத் தேங்கிக் கிடப்பதால் அதற்கு குண்டலினி சக்தி என்று பெயர்.

    அந்த சக்தி நம் உடம்பில் மூலாதாரம் என்ற மையத்தில் சுருண்டு கிடக்கிறது. மூலாதாரம் என்பது நம் உடம்பில் எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் உள்ள பகுதியாகும்.

    ஆதிசங்கரர் இயற்றிய பவானி புஜங்கம் என்ற நூலின் நான்கு வரிகளிலேயே இந்த குண்டலினி சக்தியைப் பற்றி விளக்குகிறார்.

    விடாதார பங்கேரு ஹாந்தர் விராஜத்

    ஸீஷீம் நாந்தராலேதி

    தேஜோல் ல ஸந்தீம்

    பிரபந்தம் ஸீரதா மண்டலம் தீராவயந்திம்

    ஸீதா மூர்த்தி மீட்ட மஹாநந்த ரூபம்

    `ஆறு ஆதாரங்களென்னும் தாமரை மலரின் நடுவே நன்கு ஒலியுடன் இலங்கும் ஸ¨ஷ¨ம்நா நாடியினுடைய நடுவில், மிகுந்த காந்தியுடன் மிளிருகின்றதும், சந்த்ர மண்டலத்தைப் பெருகச் செய்கிறதும், பெருகி வருகின்ற அமுதத்தை பருகுகின்றதும் பரமானந்த வடிவாயுள்ள அமுதவடிவாம் குண்டலினி சக்தியை, பவானியை, அன்னையை துதிக்கிறேன்.

    அதாவது மலர்ந்த தாமரை மலரின் வடிவம் கொண்ட மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களுக்கு நடுவில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறதும், ஒளியுடன் விளங்குவதுமான ஸ¨ஷ¨ம்நா நாடியின் நடுவில், அளவு கடந்த ஒளியுடன் இலங்குவதும், சிரசிலுள்ள சந்திரமண்டலத்தை பெருகச் செய்கின்றதும் அவ்விடமிருந்து இழிந்து வருகின்ற அமுதத்தை சுவைத்த வண்ணமிருப்பதும், பரமாநந்த வடிவாயமைந்துள்ளதும் அமுதமயமான வடிவம் கொண் டுள்ளதுமான குண்டலினி சக்தியாம் ஸ்ரீ பவானியை நான் துதிக்கிறேன் என்பது இதன் விளக்கமாகும்.

    ஒரு சிறிய சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், இவ்வளவு பெரிய குண்டலினி சக்தியை பற்றிக் கூறியிருப்பது குறித்து ஆராய்ந்து பார்த்தால் விந்தையிலும் விந்தையாக இருப்பதுடன், நமது மனதைக் கவரக் கூடிய வல்லமை பெற்றுள்ளது என்பதும் புலனாகும்.

    • பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.
    • அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக காட்சி அளிக்கிறாள்.

    பக்தர்களின் குறைகளை களைந்து, வேண்டும் வரம்களை உடனுக்குடன் வழங்கும் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் ரேணுகா தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். இது தொடர்பான புராண கதை வருமாறு:-

    முன்னொரு காலத்தில் இப்பிரதேசத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் தவம் இருந்து வந்தார். அவரது மனைவியே ரேணுகாம்மாள். அவர்கள் ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாசு, பரசுராமர் என்ற நான்கு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுள் இளையவர் பரசுராமர்.

    ஒருநாள் பூஜைக்கு வேண்டிய மலர்களையும், நீரையும் கொண்டு வரச் சென்ற ரேணுகாதேவி, மண்குடத்தில் தண்ணீர் எடுக்கும் போது, வானத்தில் பவனிசென்ற ஒரு கந்தர்வனின் உருவ நிழலை நீரில் கண்டாள். அவனது பேரழகைக் கண்டு சிறிது நேரம் ரசித்தாள். அவ்வளவுதான். மண்குடம் கரைந்து போனது இதனால் செய்வதறியாது தவித்தாள்.

    இதை அறிந்த ஜமத்கனி முனிவர் வெகுண்டெழுந்தார். தன் மகன்களை அழைத்தார் உம் தந்தையின் தவ வலிமையே அழிவுறும் வண்ணம் செய்ய முனைந்த உங்கள் தாயை தலை வேறு உடல் வேறாக வெட்டி எறியுங்கள் என்று கட்டளையிட்டார்.

    மூத்த மகன்கள் 3 பேரும் முடியாது என்று ஒதுங்கினார்கள். அதைக் கண்ட முனிவர் மேலும் கோபம் கொண்டு அவர்களை போதராஜன், காட்டண்ணன், கருப்பண்ணசாமி என்ற தேவதைகளாக உருமாற்றி சாபமிட்டார்.

    பிறகு பரசுராமனை அழைத்தார். நான் சொல்வதை செய்! உன் வாளால் உன் தாயின் கழுத்தை வெட்டிச் சாய்க்க வேண்டும்' என்றார் முனிவர்.

    நிலைதடுமாறிய பரசுராமர், தந்தையின் கட்டளையை ஏற்று தாயின் தலையை துண்டித்தார்! மகிழ்வுற்றார் முனிவர். பரசுராமரை பாராட்டியதோடு இரண்டு வரங்களையும் அவனுக்கு அளிப்பதாக கூறினார்.

    பரசுராமர் அந்த வரத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

    முதலாவதாக எனது தாயை கண்டு வணங்கி அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதற்கு என் தாய் வேண்டும்'' என்றார்.

    உடனே ஜமதக்கினி முனிவர் மகனிடம் கமண்டல நீரைக் கொடுத்து, வெட்டுண்ட உன் தாயின் தலையையும், உடலையும் ஒன்றாக இணைத்து, அத்தீர்த்தத்தை தெளித்தால் அவள் உயிர் பெறுவாள் என்று கூறினார்.

    ஆவலுடன் அக்கமண்டலத்தைப் பெற்ற பரசுராமர், அவசரத்தில் அவ்விடத்தில் கிடந்த மற்றொரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலும், தலையும் கிடந்ததை சரியாக கவனிக்காமல், அப்பெண்ணின் உடலோடு தன் தாயின் தலையை சேர்த்து கமண்டல நீரைத் தெளித்துவிட்டார்.

    ரேணுகாதேவி உயிர் பெற்றெழுந்ததும் முன்போன்ற உடல் இல்லாமல் போய் விட்டதே என்பதை உணர்ந்தாள். பரசுராமரும் அப்போது தான் அந்த தவறை அறிந்து வருந்தினார்.

    இந்நிலையில் ஒருநாள் நாகலோகத்து அரச குமாரன் கார்த்த வீரியார்ச்சுனன் என்பவன் தம் குமாரர்கள் நூறு பேர்களுடன் புறப்பட்டு வந்து ஜமத்கினி முனிவரிடம் உள்ள காமதேனு பசுவை கொடுக்குமாறு வேண்டினார்கள். முனிவர் மறுத்ததால் அவரைக் கொன்று விட்டு அப்பசுவை இழுத்துச் சென்றார்கள்.

    கணவனுக்கு நேர்ந்த கதியை பார்த்த ரேணுகாதேவி கணவனுக்காக மூட்டிய சிதையில் தானும் குதித்தாள். அப்போது பலத்த மழை பெய்தது.

    இதனால் தீ அணைந்தது மழைநீர் வெள்ளமாகப் பெருகி ஆற்று நீருடன் கலந்து சென்றதால் ரேணுகாதேவியின் தீப்புண் பட்ட உடலும் மிதந்து சென்று ஒரு இடத்தில் கரை ஒதுங்கியது.

    மயக்கம் தெளிந்து பார்த்தாள் ரேணுகாதேவி தீயில் எரிந்து போய், வெற்றுடலில் வெந்த புண்களுடன் தனியே தவித்திருக்கும் அவளது நிலைமையை அளவிட்டுக் கூறிட இயலாது.

    அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளைப் பறித்து ஆடையாக கட்டிக் கொண்டு அந்த வழியே வந்த வயதான முதாட்டியின் தயவால் அவளிடம் அடைக்கலம் புகுந்தாள் தேவி.

    மூதாட்டி தேனும், தினைமாவும் அளித்து, வெந்த புண்களுக்கு, மஞ்சள், வேப்பிலையை அரைத்து வைத்து கட்டி குணப்படுத்தினாள். படிப்படியாக புண்கள் எல்லாம் மறைந்தன.

    பரமனிடமும் பார்வதியிடத்திலும் மாறாத பக்தி கொண்டிருந்த ரேணுகாதேவி சக்தி அம்சங்களைப் படிப்படியாகப் பெற்று விளங்கத் தொடங்கினாள். அத்தேவியே தெய்வமாக மாறி பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மனாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகின்றாள்.

    இத்திருத்தலத்தில் அன்னை கிழக்கு பார்த்த நிலையில் கழுத்தளவு வடிவமாக விளங்குகின்றாள். ஐந்து தலைநாகம் தலைக்குமேல் குடை விரிக்க அகிலம் வியக்கும் வண்ணம் அருளாட்சி புரிந்து வருகின்ற இத்தேவியின் திருக்கோவிலில் அருட்பிரசாதமாக மஞ்சள், குங்குமம். தீருநீறு ஆகியவை வழங்கப்படுகிறது.

    உலகச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் நாம் கொஞ்சமாவது அமைதியும் மகிழ்ச்சியும் பெற வேண்டுமானால், பவானி அம்மன் அன்னை வழிபாட்டை செய்தல் வேண்டும்.

    • பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
    • அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள்.

    தேங்காய் உருட்டும் பிரார்த்தனை

    அங்க பிரதட்சணம் செய்வதை நீங்கள் எல்லா கோவில் களிலும் பார்த்து இருப்பீர்கள். அந்த பிரார்த்தனையை பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலில் சற்று மாறுபட்டு செய்கிறார்கள்.

    அதாவது தாங்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பதில் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள். இந்த பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள் ஈரத்துணியுடன் பவானி அம்மனை வணங்கி விட்டு தேங்காயை உருட்டி விடுவார்கள். அந்த தேங்காய் உருண்டு செல்லும்.

    எந்த இடத்தில் அந்த தேங்காய் நிற்கிறதோ, அந்த இடத்தில் பவானி அம்மனை நோக்கி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார்கள். இப்படி தேங்காயை உருட்டியபடி கோவிலைச் சுற்றி வருவார்கள். இந்த பிரார்த்தனையை `அடிதண்டம்' என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

    கரகம் பிரார்த்தனை

    நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் பவானி அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகன் கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.

    கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து, தலையில் ஏந்தி கோவிலை சுற்றி வருவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பெரியபாளையத்தம்மனை குல தெய்வமாக கருதுபவர்களும் இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள்.

    திருமணத்துக்காக இந்த பிரார்த்தனை செய்யப்படுவதால், இதை `குடை கல்யாணம்' என்றும் அழைக்கிறார்கள்.

    மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து

    பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவது போல பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

    இந்த மஞ்சள் தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. பவானி அம்மனின் அருள்பட்ட இந்த மஞ்சள் தீர்த்தம் பிணி தீர்க்கும் மாமருந்து என்றே சொல்லலாம். கோவிலில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

    அம்மை போட்டவர்கள் இந்த மஞ்சள் தீர்த்தத்தை குடித்தால் மூன்றே நாளில் அம்மை இறங்கி விடும் என்பது கண்கூடு.

    தற்போது பெரியபாளையத்தம்மன் கோவில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில்தான் பெரியபுற்று இருந்தது என்பதையும், அந்த புற்றை அகற்றும்போது கம்பி பட்டு சுயம்பு காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு வந்ததையும் ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள்.

    அப்படி ரத்தம் வந்தபோது மஞ்சள்தான் வைத்தனர். அதை பக்தர்களுக்கு உணர்த்தவே மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

    சுயம்பில் வைத்து எடுத்துத் தரப்படும் மஞ்சளை நாள்பட்ட காயம், புண்களில் வைத்தால், விரைவில் அவை ஆறி குணமாகி விடும். எனவே இந்த மஞ்சள் தீர்த்தத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வதை காணலாம். சென்னையில் இருப்பவருக்கு அம்மை போட்டிருந்தால், இந்த தலத்துக்கு வந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி சென்று பயன்பெறுவது மரபாக உள்ளது.

    தாலி தரும் பிரார்த்தனை

    பெரியபாளையத்தம்மன் ஏழைகளின் வீட்டு தெய்வமாவாள். குறிப்பாக மீனவ சமுதாய மக்களின் குலதெய்வமாக திகழ்ந்து, அம்மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருகிறாள்.

    பொதுவாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் அலை, சூறைக்காற்று போன்றவைகளை எதிர்கொண்டு சமாளித்து மீன்பிடித்து வரவேண்டும். மீன்வளம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் சில நாட்கள் கழித்தே கரை திரும்புவார்கள்.

    இப்படி கடலுக்குள் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று மீனவப் பெண்கள் பவானி அம்மனை நினைத்து மனதார வேண்டிக் கொள்வார்கள். அதற்கு நன்றி காணிக்கையாக தங்களது தாலிக்கொடியையே அப்படியே பெரியபாளையத்தம்மன் கோவில் உண்டியலில் போட்டு விடுவார்கள்.

    ஆடி மாத விழா காலத்தில்தான் மீனவப் பெண்கள், இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக 3-வது வாரம், 5-வது வாரம், 7-வது வாரம் அல்லது 9-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை மீனவப் பெண்கள் இந்த பிரார்த்தனையை செய்வதுண்டு.

    இதன் காரணமாக ஆடி மாதம் முழுவதும் உண்டியலில் தாலி காணிக்கை மிகுதியாக இருக்கும். வேப்பஞ்சேலை பிரார்த்தனை போலவே இந்த பிரார்த்தனையும் இந்த ஆலயத்துக்குரிய ஒன்றாக தனித்துவத்துடன் உள்ளது.

    சென்னையில் காசிமேடு பகுதி மீனவர்கள் ஏராளமானோர் பெரியபாளையத்துக்கு வந்து இந்த பிரார்த்தனையை செய்கிறார்கள். வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பெரியபாளையத்தம்மனை குலதெய்வமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    • தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும்
    • பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.

    1. பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.

    2. ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருப்பதால் கோவிலில் எப்போதும் நன்கு காற்றோட்டமாக உள்ளது.

    3. பாவனி அம்மன் இத்தலத்தில் அகண்ட பரிபூரண ஆனந்த ஜோதியாய், வழிபடும் அடியார்களின் வல்வினை போக்கும் வண்டார் குழலியாய், 7 அவதாரங்களில் ஒன்றாகிய சங்கு, சக்கர பேருருவாய் கோவில் கொண்டு எழுந்துருளியுள்ளாள்.

    4. ஆடி திரவிழா அம்மன் தலங்களில் 4 அல்லது 5 வாரம்தான் நடைபெறும். ஆனால் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் மட்டும் 14 வாரங்கள் ஆடிப்பெருவிழா நடைபெறும்.

    5. பெரியபாளையம் தலத்தில் பவானி அம்மன் சுயம்புவாக தோன்றியுள்ளாள்.

    6. அபிஷேக நேரம் தவிர மற்ற நேரங்களில் சுயம்பு உருவை அம்மன் தலை கவசத்தால் மூடி விடுவார்க்ள.

    7. பஸ்சில் வரும் பக்தர்கள்தான் கோவில் நுழைவாயிலுக்கு எளிதாக வர முடியும். கார், பைக்கில் செல்பவர்கள் ஆலயத்தின் பின் பகுதி வழியாகத்தான் உள்ளே வர முடியும்.

    8. ஆலயத்தின் இடது பக்கத்தில் சித்புத் விநாயகர் மற்றும் மாதங்கி சன்னதிகள் உள்ளன. அந்த இரு சன்னதிகளிலும் வழிபட்ட பிறகே பவானி அம்மனை சென்று வணங்க வேண்டும்.

    9. மூலவரை சுற்றியுள்ள பிரகாரத்தில் உற்சவரைத் தவிர வேறு எந்த சன்னதியும் இல்லை.

    10. இத்தலம் அருகிலேயே மிகப்பெரிய புற்றுக்கோவில் உள்ளது. தகர கூரை வரை உயர்ந்து அந்த புற்று வளர்ந்துள்ளது.

    11. இத்தலத்தில் ஆங்காங்கே பாம்பு நடமாடுவது சகஜமான ஒன்று. ஆனால் அந்த சர்ப்பங்கள் யாரையும் தீண்டியதே இல்லை.

    12. புற்று கோவிலில் இருந்து தினமும் இரவு பவானியம்மன் கருவறைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு வந்து செல்வதாக சொல்கிறார்கள்.

    13. தினமும் காலை பூஜைக்காக கருவறை கதவை திறக்கும் முன்பு 4, 5 தடவை கதவை தட்டி விட்டு சிறிது நேரம் கழித்தே அர்ச்சகர்கள் நடையைத் திறப்பார்கள். சர்ப்பம் உள்ளே இருந்தால் சென்று விடும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.

    14. பவானி ஆலய நாகவழிபாட்டை வலியுறுத்தும் வகையில் கோவில் பிரகாரங்களில் சர்ப்பம் சிலைகளும் நாகதேவதை சிலைகளும் செதுக்கப்பட் டுள்ளன.

    15. பெரியபாளையம் ஆலய வழிபாடுகளில் மிக முக்கியமானது வேப்பஞ்சேலை பிரார்த்தனை வழிபாடுதான். நூற்றுக்கு 50 பக்தர்கள் வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்கிறார்கள்.

    16. செவ்வாய், வெள்ளி என்ற கணக்கு இல்லாமல் தினமும் இங்கு வேப்பஞ்சேலை வழிபாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.

    17. பெரியபாளையம் தலத்தின் விருட்சம் வேப்பமரமாகும். கோவில் உட்பிரகாரத்தில் இத்தல விருட்சம் உள்ளது.

    18. பெரியபாளையம் கோவிலில் கொடி மரம் கிடையாது. அதற்கு பதில் சக்தி மண்டபம் உள்ளது.

    19. மற்ற கோவில்களில் விழா தொடங்கி விட்டால் அதன் அடையாளமாக கொடியேற்றம் நடைபெறும். இந்த தலத்தில் சக்தி மண்டபத்தில் பந்தகால் நாட்டுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    20. பவானி அம்மன் நேர் பார்வையில் நுழைவாயில் அருகே சக்தி மண்டபம் உள்ளது.

    21. சக்தி மண்டபம் அருகில்தான் திருஷ்டி பரிகார பூஜைகள் அனைத்தும் நடைபெறுகின்றன.

    22. சக்தி மண்டபம் அருகில் உள்ள மரத்தில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கை கூடும். தொட்டில் வாங்கி கட்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    23. இத்தலத்தில் சுயம்புக்கு காலை 8 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணி ஆகிய 3 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது.

    24. கோவில் கருவறை முகப்பில் சங்கு, சக்கரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் தங்கையே இங்கு தெய்வம்சமாக இருப்பதால் அப்படி செதுக்கப்பட்டுள்ளது.

    25. இத்தலத்தில் சுயம்பு மீது பூசப்பட்டு எடுத்துத் தரப்படும் மஞ்சளுக்கு அதிக மகிமை உண்டு.

    26. அந்த மஞ்சளை தண்ணீரில் கலந்து தீர்த்தமாக அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகி விடும்.

    27. அந்த மஞ்சளை கொஞ்சம் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு, வெளியில் செல்லும் போது பூசிச் சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

    28. பெரியபாளையம் அம்மனுக்கு நிறைய மஞ்சள் பூசி பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது என்றால் பிரியம் அதிகம். எனவே அர்ச்சகர் தினமும் அன்னைக்கு நிறைய சந்தனம் பயன்படுத்தி அலங்காரம் செய்கிறார்.

    29. பவானி அம்மன் சுயம்பு மஞ்சளை இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களும் வந்து பெற்று சென்று பயன் அடைகிறார்கள்.

    30. பவானி அம்மனுக்கு தினமும் 3 தடவை அபிஷேகம் முடிந்ததும் மஞ்சள் பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

    31. ஆடி விழாவில் 10-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை சுயம்பு மீது சூரிய ஒளிபடும். அந்த சமயத்தில் மின் விளக்குகளை அனைத்து விட்டு சூரிய ஒளி வழிபாட்டை பக்தர்களை காண செய்கிறார்கள்.

    32. கோவில் வளாகத்தில் துலாபாரம் கொடுக்கும் வசதி உள்ளது.

    33. ஆடி விழாவின் 6-வது, 7-வது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடலோரப் பகுதி மீனவர்கள் திரண்டு வந்து பவானி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

    34. பெரியபாளையம் கோவிலுக்கு தினமும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.

    35. விழா நாட்களில் பவானி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும்.

    36. உண்டியலில் பணம் மட்டுமின்றி தாலியையும் பெண்கள் கழற்றி போடுகிறார்கள். கை, கால் போன்ற வெள்ளி உறுப்புகளையும் வாங்கி செலுத்து கிறார்கள்.

    37. முகூர்த்த நாட்களில் இத்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. அதற்கு வசதியாக கோவில் வளாகத்துக்குள்ளேயே திருமண மண்டபம் உள்ளது.

    38. இத்தல தீர்த்தம் சக்தி வாய்ந்தது. எனவே வர முடியாத நோயாளிகளுக்காக இத்தல தீர்த்தத்தை பாட்டில்களில் வாங்கி செல்கிறார்கள்.

    39. இத்தல தீர்த்தத்தை 3 நாள் குடித்தால் அம்மை உடனே இறங்கி விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    40. இத்தலம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.

    41. ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். அன்று எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்.

    42. ஆடி மாதம் விழாவின் 14-வது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்து இருக்கும்.

    43.பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் மிகச் சிறந்த பிரார்த்தனை தலம் மட்டுமின்றி பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

    44. ஆடி விழாவில் பங்கேற்க மாட்டு வண்டி கட்டி, தொலை தூரங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வரும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது.

    45. பவானி அம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்கள் பெரியபாளையத்தில் குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்கி இருந்து வழிபாடு செய்கிறார்கள்.

    46. ஆரணியாற்றில் குடில் அமைத்து தங்கும் பக்தர்கள் ஆடு, கோழிகளை படையலிட்டு சாப்பிட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    47. ஒரு குடும்பத்தில் உள்ள சகோதர- சகோதரிகள் அனைவரும் ஒன்றாக பெரியபாளையத்தம்மனை வணங்க வருவதால் இங்கு குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    48. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழிபாதை தலங்களில் ஒன்றாக பெரியபாளையம் இருந்துள்ளது.

    49. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    50. தைப்பூசம் தினத்தன்று ஆரணியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

    • ஆடித்திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.
    • பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சி கொடுப்பதாக ஐதீகம்.

    தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் இல்லாத வகையில், பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித் திருவிழா மொத்தம் 14 வாரங்கள் நடைபெறுகிறது.

    இந்த 3 மாத காலக்கட்டத்தில் 15 ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இந்த கிழமைகளில் ஒவ்வொரு வகை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

    இது தவிர பெரியபாளையம் கோவிலில் 15 ஞாயிற்றுக்கிழமையும் அம்மனின் ஜோதி தரிசனம் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இது பெரியபாளையம் கோவிலில் மட்டுமே நடைபெறும் பிரத்தியேக ஆடி சிறப்பு வழிபாடாகும்.

    பாளையத்தம்மனை ஜோதி ஒளியில் வழிபடுவதே இதன் முக்கிய அம்சமாகும். அந்த சமயங்களில் பவானிதாய், நமக்கு ஜோதி வடிவில் காட்சிக் கொடுப்பதாக ஐதீகம்.

    ஆடித் திருவிழாவின் சனிக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு இந்த ஜோதி தரிசன நிகழ்ச்சித் தொடங்கும். முதலில் பாளையத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.

    அதன்பிறகு திரையிடப்பட்டு அம்மனை அலங்கரிப்பார்கள். வித, விதமான பூக்களால் புஷ்ப அலங்காரம் செய்வார்கள்.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு நைவேத்தியம் படைக்கப்படும். இவை அனைத்தும் முடிந்ததும் ஜோதி தரிசனம் தொடங்கும்.

    அம்மனுக்கு மொத்தம் 16 வகை தீபாரதனைகள் காட்டப்படும். ஒவ்வொரு தீபராதனையின் போதும் பாளையத்தம்மன் ஒவ்வொரு விதமாக ஜொலித்து நமக்குக் காட்சி கொடுப்பாள். அந்த திருக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

    16 வகை தீபாரதனை முடிந்ததும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மீண்டும் நைவேத்தியம் படைக்கப்படும்.

    அத்துடன் ஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். இறுதியில் வந்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை இவை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஜோதி தரிசனத்தின் சிறப்பு என்னவென்றால் இது பெரியபாளையம் கோவிலில் ஆடி பெருவிழா நடக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும். மற்ற மாதங்களில் இத்தகைய தரிசனம் கிடையாது.

    எனவே இந்த ஆண்டு ஜோதி தரிசனத்தை தவற விட்டு விட்டால், இனி அடுத்த ஆண்டு வரும் ஆடிப் பெருவிழாவில்தான் பாளையத்தம்மனை ஜோதியாக தரிசனம் செய்ய முடியும்.

    சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கியமை அதிகாலை 3 மணி வரை ஜோதி தரிசன பூஜைகள் நடக்கும் என்பதால் வெளியூர்களில் இருந்து பெரியபாளையத்துக்கு வரும் பக்தர்கள் அதற்கு ஏற்ப வசதிகளை செய்து கொண்டு வருவது நல்லது.

    கோவில் நிர்வாகம் சார்பில் இந்த ஜோதி தரிசன வழிபாட்டுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இது தொடர்பான மேலும் தகவல்களை கோவில் அலுவலகத்தை 044-27927177 மற்றும் 9444487487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    ×