search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman commits suicide"

    • ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசெல்வன் (40). இவரது மனைவி ரதி (34). மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர்களின் மகளுக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் ஏற்பட்ட இதயக்கோளாருக்கு சிகிச்சை பெறுவதற்காக கடன் பெற்று ள்ளனர். அந்த கடனை கட்ட முடியாத அளவில் தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் ரதி காணப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று உணவு வாங்கி வர சண்முகசெல்வனும், அவரது மகனும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடைக்கு சென்று உணவை வாங்கிக்கொண்டு திரும்பிய சண்முகசெல்வன் இதனை அறிந்து அதிர்ந்து போனார். பின்னர் சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் அங்கு சென்ற அரச்சலூர் போலீசார் ரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்த உடலை பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு மேற்கொண்டு விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதி சாலைத் தெருவை சேர்ந்தவர் பெரு மாள் மனைவி கிருஷ்ண வேணி (வயது 48). இவர் தற்போது ஈரோடு ரங்க ம்பாளையம் ஜீவா நகரில் தனது மகன் பாலமுருகன் (27) என்பவருடன் வசித்து வந்தார்.

    கிருஷ்ணவேணி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயன்றார்.
    • காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த காஞ்சிக்கோவில் தண்ணீர் பந்தல் பாளையத்தை சோ்ந்தவர் பழனிச்சாமி (38). மில் தொழிலாளி. இவரது மனைவி செல்வி என்கிற ராதா (35). மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்.

    ராதா அவரது குழுவில் கடன் பெற சிலருக்கு ஜாமீன் கையெழுத் திட்டுள்ளார். அவர்கள் கடன் பெற்று முறையாக செலுத்தவில்லை. இதனால் ஜாமீன் கையெழுத்திட்ட அவர் பெற்ற கடன் தொகையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதில் மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு தற்கொலை முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொப்னாவின் தந்தை இறந்து விட்டார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் திருநகர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சொப்னா (39). இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொப்னாவின் தந்தை இறந்து விட்டார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ராதா ஆடுகளை சொந்தமாக வைத்து மேய்த்து வந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பாரதி நகரை சேர்ந்தவர் செட்டியப்பன் (வயது 52). இவரது மனைவி ராதா (48). இவர் ஆடுகளை சொந்தமாக வைத்து மேய்த்து வந்தார்.

    இவர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பவித்ராவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பவித்ரா கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு செல்லாமல் ராதாவின் வீட்டில் 8 மாதங்களாக இருந்து வந்தார். மகள் கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் இருந்து வந்ததை நினைத்து ராதா மனவேதனை அடைந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரியா டாமா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
    • அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பிரியா டாமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    கோவை,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரியா டாமா (வயது 49). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து பிரியா டாமா தனது கணவரை பிரிந்து கோவைக்கு வந்தார். பின்னர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த 1 மாதங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பிரியா டாமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. பின்னர் பிரியா டாமா அந்த வாலிபரை தனது கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    பின்னர் தனது தம்பியிடம் பேசிய பிரியா டாமா தான் வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இனிமேல் முதல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி உள்ளார். திருமணம் செய்து கொண்ட தகவலை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.இந்தநிலையில் பிரியா டாமா தான் 2-வது திருமணம் செய்ததை அவரது தம்பி தனது குடும்பத்தினரிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரியா டாமா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது 2-வது கணவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பிரியா டாமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • திருமணமான 5 ஆண்டுகளில் ஸ்மேரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    • இருவரும் மன வருத்தத்துடன் குழந்தை இல்லாதது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

    கோவை,

    கோவை விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் ஹென்றி. இவரது மனைவி ஸ்மேரா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.

    குழந்தைக்காக ஸ்மேரா கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குழந்தை உருவாக வில்லை. சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மன வருத்தத்துடன் குழந்தை இல்லாதது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் கடந்த 2 நாட்களாக ஸ்மேரா சாப்பிடாமல் இருந்தார்.ஹென்றி வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி தனது சகோதரிக்கு வாழ்க்கையில் ேதாற்று போனதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ மூலம் மெசேஜ் அனுப்பினார். பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய ஹென்றி தனது மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஸ்மராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறர்கள். திருமணமான 5 ஆண்டுகளில் ஸ்மேரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.  

    • நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (49). கூலி தொழிலாளி. இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. இதனிடையே நாகராஜை பிரிந்து மணி 15 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை பாதிப்பால் அவதி அடைந்து வருகிறார். அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கினார். இதை பார்த்த அவரது தந்தை கண்ணையன், மணியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணையன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாழ்குளி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தகுமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 34). விவசாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது. இ தனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக் காக கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியசுந்தரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தை இல்லாத மன வேதனையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார்.
    • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வேலாங்குட்டை, துய்யம் பூந்துறை, கே.கே. வலசை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கவிதா (வயது 36).

    இவருக்கு கடந்த 9 வருட ங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமண–மானது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடுமலைப்பேட்டை குடும்ப நல நீதிமன்றத்தில் விவா கரத்து பெற்றனர்.

    இதைதொடர்ந்து கவிதா மோகன்ராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் கவிதா மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவ ரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திண்டுக்கல்லில் கொடுத்த பணம் வராததால் பெண் தற்கொலை செய்துகொண்டார்
    • பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது, அதனை இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

    திண்டுக்கல்:

    தாடிக்கொம்பு அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி பவானி (வயது 43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் உள்ளனர்.

    கணவர் இறந்து விட்டதால் பவனி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தனது சகோதரி மகள் சரண்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.50000 கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட போது, அதனை இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

    நேற்று காளிமுத்து பிள்ளை சந்தில் உள்ள சரண்யா வீட்டுக்கு பணத்தை கேட்க பவானி சென்றார். அங்கு அவர் இல்லாததால் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தந்தை தொழில் தொடங்க பணம் தராததால் விரத்தியில் இந்த முடிவை எடுத்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 26). தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (23).

    இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபுவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது.

    அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி கவுதமி ஒரு பெட்டிக்கடை தொடங்கி நடத்த முடிவு செய்தார்.

    அதற்காக அவர் தனது தந்தையிடம் ரூ. 50 ஆயிரத்தை கேட்டார். அவரால் அந்த பணத்தை உடனடியாக தர முடியவில்லை. இதனால் கவுதமி மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை ெதாழில் ெதாடங்க பணம் தராததால், காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், 4 வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×