search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில் 2-வது திருமணம் செய்த பெண் தற்கொலை
    X

    சூலூரில் 2-வது திருமணம் செய்த பெண் தற்கொலை

    • பிரியா டாமா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
    • அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பிரியா டாமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    கோவை,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரியா டாமா (வயது 49). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து பிரியா டாமா தனது கணவரை பிரிந்து கோவைக்கு வந்தார். பின்னர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த 1 மாதங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பிரியா டாமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. பின்னர் பிரியா டாமா அந்த வாலிபரை தனது கணவருக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    பின்னர் தனது தம்பியிடம் பேசிய பிரியா டாமா தான் வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இனிமேல் முதல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி உள்ளார். திருமணம் செய்து கொண்ட தகவலை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.இந்தநிலையில் பிரியா டாமா தான் 2-வது திருமணம் செய்ததை அவரது தம்பி தனது குடும்பத்தினரிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரியா டாமா திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது 2-வது கணவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பிரியா டாமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×