search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 4 வயது குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தற்கொலை
    X

    கோவையில் 4 வயது குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தற்கொலை

    • தந்தை தொழில் தொடங்க பணம் தராததால் விரத்தியில் இந்த முடிவை எடுத்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 26). தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (23).

    இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபுவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது.

    அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி கவுதமி ஒரு பெட்டிக்கடை தொடங்கி நடத்த முடிவு செய்தார்.

    அதற்காக அவர் தனது தந்தையிடம் ரூ. 50 ஆயிரத்தை கேட்டார். அவரால் அந்த பணத்தை உடனடியாக தர முடியவில்லை. இதனால் கவுதமி மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை ெதாழில் ெதாடங்க பணம் தராததால், காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், 4 வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×