search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife arrested"

    • தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
    • தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) லாரி மெக்கானிகான இவர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஒரு மகள், மகன் உள்ளனர்.

    இந்நிலையில் தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். 2 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார். அங்கும் தேவராஜ் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சின்ன தகரகுப்பத்திற்கு சென்ற தேவராஜ் அங்கு மனைவி பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் மனைவியை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பானுமதி கீழே கிடந்த கட்டையை எடுத்து தேவராஜை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவராஜின் மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • கொலையை மறைக்க உத்தராவே உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகனும் தந்தையை பல இடங்களில் தேடினார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஜூடான் மகாதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஜூடான் மகாதோவின் மனைவி உத்தரா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சேத்திரபால் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க அவர் உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, உத்தராவுக்கும் சேத்திரபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதனை அறிந்த ஜூடான் மகாதோ மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உத்தரா, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சலாக இருந்த கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் துணையுடன் கணவர் ஜூடான் மகாதோவை கொலை செய்து பிணத்தை வெளியே வீசியுள்ளார். அதன்பின்பு ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ளக்காதலனுடன் வாழ்க்கை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் சிக்கி கொண்டார்.

    இதையடுத்து போலீசார் உத்தராவை கைது செய்தனர். மேலும் ஜார்கண்டில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சேத்திரபாலுவும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவரது மனைவி டயானா மேரி (வயது 22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

    ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர் வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார்.

    இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார்.
    • ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார்.

    சென்னை:

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தர் வேல்முருகன். கட்டிட தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்தக்கு அடிமையானார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்து மனைவி வினோதினியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வேல்முருகனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    வயிற்றில் இடது புறத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனின் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறியது.

    ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய நிலையில் அதன் பின்னர் போலீசுக்கு பயந்து சிகிச்சைக்காக வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை.

    இதனால் 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வினோதினியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவர் குடித்து விட்டு வந்து தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை வினோதினி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் வேல்முருகன், குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்வார். தற்போதும் அது போன்று குடித்து விட்டு வந்தவர் என்னைப் பற்றி தவறாக பேசி அடித்து உதைத்தார். அப்போது அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். ஏன் இப்படி குடித்து விட்டு வந்து பேசுகிறீர்கள் என்று நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. என்னை தாக்குவதையும் நிறுத்தவில்லை.

    இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.

    இதனால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி வந்து சிகிச்சை அளித்தேன். ஆனால் கணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இதனால் பயந்து போய் அவரே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகம் ஆடினேன்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது போலீசில் சிக்கி கொண் டேன். ஆஸ்பத்திரியில் எனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதேன். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு வினோதினி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர் கே.கே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40) கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி, வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

    வேல்முருகன் தினசரி பணி முடிந்து இரவு மது குடித்துவிட்டு வந்து வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மதுபோதையில் வீடு திரும்பிய வேல்முருகனை வினோதினி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோதினி அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வேல்முருகனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார். மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றும் வினோதினி கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் வினோதினியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அப்போது வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து வினோதினி போலீசாரிடம் கூறியதாவது:- கணவர் வேல்முருகன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டை அசுத்தம் செய்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த நான் கணவரை கத்தியால் குத்தினேன். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

    மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றால் விஷயம் வெளியே தெரிந்து சிக்கிவிடுவோம் என்பதால் வீட்டிலேயே வைத்து நானே சிகிச்சை அளித்தேன். ஆனால் அதிக ரத்தம் வெளியேறி வந்ததால் கணவர் வேல்முருகன் உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார்.
    • கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி வினோதினியுடன் கடற்கரைக்கு சென்றிருந்த என்ஜினீயர் கதிரவன் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நானும், கணவர் கதிரவனும் கண்ணை கட்டிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.

    கணவரின் கண்ணை கட்டி விளையாடியபோது வழிப்பறி கொள்ளையர்கள் அவரை தாக்கியதுடன் எனது தாலி செயினையும் பறித்துச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.

    வினோதினியின் செயல்பாடுகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கதிரவனை, வினோதினிக்கு தெரிந்த நபரே வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    அந்த நபர் வினோதினியின் காதலனான அந்தோனி ஜெகன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு வினோதினி வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலமானது.

    இதுதொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் வினோதினியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்பது தெரியவந்தது. வினோதினியும், அந்தோனி ஜெகனும் காதலித்து வந்த நிலையில் கதிரவன், வினோதினியை திருமணம் செய்துள்ளார். இவரது ஊர் தூத்துக்குடி ஆகும். காதலன் அந்தோனி ஜெகன் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர்.

    திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார். அப்போதுதான் கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வினோதினி, அந்தோனி ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கொலை வழக்கில் திருவான்மியூர் போலீசார் கேமரா காட்சி ஆவணங்களை முறையாக தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.

    இதற்கிடையே சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக கண் பார்வை குறைபாட்டாலும் கை,கால் செயல்படாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சந்தனமாரியப்பன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தேன், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறினார்.

    இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார்.
    • சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42). முன்னாள் ராணுவ வீரர். ஆரணி வி.ஏ.கே நகர் அருகில் உள்ள தேனருவி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி ரேவதி, பிரியதர்ஷினி என்ற மகள் லிங்கேஸ்வரன், நிதின் ஆகிய மகன்கள் உள்ளனர்.

    கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி அவரது மகன் மகளுடன் ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார். அன்று இரவு ரேவதி அங்கேயே தங்கினார்.

    இந்த நிலையில் வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேவதி அவரது கள்ளக்காதலன் நாகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து ரேவதி நாகராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கணவனை கொடூரமாக கொலை செய்தது குறித்து ரேவதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜிடன் (41) கடந்த 3 ஆண்டுக்கு முன்பு எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.

    இதனையறிந்த எனது கணவர் கள்ளத்தொடர்பை கைவிடும் படி கூறினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் எனது மகள் மகன்களை அழைத்துக்கொண்டு ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன்.

    இதுகுறித்து நாகராஜுடம் தெரிவித்தேன். இருவரும் சேர்ந்து கூலிப்படை மூலம் வெற்றிவேலை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

    கடந்த மார்ச் மாதம் கூலிப்படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராஜேஷ் (32) என்பவரை அணுகினோம். ரூ. 10 லட்சம் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தோம். கடந்த 6 மாதங்களாக எனது கணவரை கொலை செய்வதற்காக சமயம் பார்த்து காத்திருந்தேன்.

    அப்போதுதான் எனது கணவர் வெற்றிவேலுக்கு பைக் விபத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அங்கு சிகிச்சை முடிந்து அவருடன் வீட்டிற்கு வந்தேன்.

    கணவன் தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரை தீர்த்து கட்ட இதுதான் நல்ல சமயம் என முடிவு செய்தேன்.

    இது குறித்து எனது கள்ளக்காதலன் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தேன். சம்பவத்தன்று அதிகாலை நாகராஜ் மற்றும் ஏற்கனவே பணம் கொடுத்து வைத்திருந்த கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது என்னுடைய கணவர் வெற்றிவேல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தினார். வலி தாங்காமல் கண் விழித்து அவர் சத்தம் போட முயன்றார். உடனே 3 பேரும் சேர்ந்து அவரை கட்டிலிலேயே அமுக்கி பிடித்தோம்.

    நான் எனது கணவரின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், வெற்றிவேலின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். அவர்களை யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்தேன். பின்னர் எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது உறவினர்களிடம் போன் மூலம் தெரிவித்தேன்.

    அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது இறந்தது தெரியவந்தது. என் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தனர் .

    அப்போது கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்து தாக்கியதாக கூறி நாடகமாடினேன். ஆனாலும் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மளிகை கடைக்காரர் எரித்துக்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
    • அவர்களிடம் தங்களது செல்போன் நம்பரை வாங்கிய முருகன் நல்லவன் போல பேசி வசந்தகுமார் இடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சந்தோஷ்குமார் வயது 34. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தோஷ் குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அருகே உள்ள நகர் கிராமத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் குமாரை காணவில்லை என புகார் அளித்தனர். அந்த புகாரைப் பெற்ற உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை தீவிரமாக தேடி வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றங்கரையோரம் சந்தோஷ் குமார் உடல் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் குமாரை கொலை செய்தது யார் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையில் இரண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

    இதற்கிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொறியியல் படித்துவிட்டு வாடகை கார் ஓட்டி வரும் முருகன் என்பவருக்கு சம்பந்தம் இருப்பதை அறிந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட சந்தோஷ்க்கு வசந்தகுமாரி (வயது 27) என்கிற மனைவியும் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு வசந்தகுமாரி மீண்டும் கருவுற்ற நிலையில் கருக்கலைப்பு செய்வதற்காக கணவன் மனைவி இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை முடித்துவிட்டு வாடகை கார் ஒன்றில் உளுந்தூர்பேட்டைக்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த முருகன் பொறியியல் பட்டதாரியான இவர் கணவன் மனைவி இருவரும் அன்பாக பேசி வந்துள்ளார். வீடு வந்து இறங்கும்போது அவர்களிடம் தங்களது செல்போன் நம்பரை வாங்கிய முருகன் நல்லவன் போல பேசி வசந்தகுமார் இடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    கணவன் மனைவி இருவரிடமும் நல்ல நட்பில் இருந்த சந்தோஷ் குமார் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்து செல்வதும் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும்போதெல்லாம் இவர்கள் பேசி பழகியும் உள்ளார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவர்களது நட்பு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது கள்ளக்காதல் விவகாரம் வசந்தகுமாரியின் கணவரான சந்தோஷ்குமாருக்கு தெரிய வந்தது. இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இதனால் சந்தோஷ் குமாரின் குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவியது. இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி தனது மகள்களுக்கு ஆதார் கார்டு திருத்த வேண்டும் எனவும் அதற்காக கணவரை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கிறேன் அவருக்கு ஒத்தாசையாக இருந்து உதவி செய்யுங்கள் என வசந்தகுமாரி முருகனிடம் செல்போனில் தெரிவித்தார். பின்னர் மகளின் எதிர்காலத்திற்காக கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்ற சந்தோஷ் குமார் அங்கு முருகனை சந்தித்து ஆதார் கார்டு திருத்த சென்றுள்ளார் பின்னர் இருவரும் சந்தோஷ் குமார் தற்காலிகமாக வாடகை எடுத்து தங்கி உள்ள கள்ளக்குறிச்சி அண்ணா நகர் வீட்டிற்கு சென்று மது அருந்த முடிவு செய்தனர். அங்கு இவர்களது கள்ளக்காதல் குறித்து மீண்டும் சந்தோஷ் குமார் மற்றும் முருகனுடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பியர் பாட்டிலால் முருகன் சந்தோஷ் குமாரின் கழுத்தில் குற்றி படுகொலை செய்தார். சந்தோஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து அதே இடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை தார்ப்பாயில் கட்டி தனது அக்காவிற்கு சொந்தமான மூன்று சக்கர வாகனம் ஒன்றில் எடுத்து போட்டுக்கொண்டு உளுந்தூர்பேட்டை பகுதிக்கு வந்துள்ளார்.

            அங்கிருந்த பெட்ரோல் பங்கில் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கிய அவர் கெடிலம் ஆற்றங்கரை ஓரம் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவரின் சடலத்தை போட்டு பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். பின்னர் அங்கு ஆள் நடமாட்டம் தெரிவதை பார்த்த முருகன் அங்கிருந்து தப்பிச்சென்று பின்னர் ஒன்றும் தெரியாது போல நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் வெளியில் சென்ற சந்தோஷ் குமார் காணவில்லை என அவரது குடும்பத்தார் புகார் அளிக்க சென்றபோது முருகனும் அவர்களுடன் புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையம் சென்றது கூடுதல் தகவல். இதனை தொடர்ந்து சந்தோஷ் குமாரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி வசந்தகுமாரி மற்றும் கள்ளக்காதலன் முருகன் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரியை கொலை செய்ததாக அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். #RohitShekharTiwari #TiwarisWife
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.



    இதற்கிடையே, ரோகித்தின் தாயார் உஜ்வாலா, காவல்துறையில் அளித்த தகவல் விசாரணையின் போக்கை மாற்றியது. தன் மருமகள் அபூர்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பணம்தான் குறிக்கோள் என்றும், ரோகித்தின் சொத்தை அபகரிக்க விரும்பியதாகவும் உஜ்வாலா குற்றம்சாட்டினார்.

    இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, ரோகித்தின் மனைவி மீது சந்தேகம் வலுத்தது. எனவே, அவரிடம் ஞாயிற்றுக்கிழமை போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது. எனவே, விசாரணையின் முடிவில் அபூர்வாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    ரோகித்-அபூர்வா தம்பதியரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்றும், இருவரும் அடிக்கடி சண்டை போட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.  #RohitShekharTiwari #TiwarisWife

    செந்துறை அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் உறவினர்களுடன் சேர்ந்து கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44), விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (40). இந்த தம்பதிக்கு மணிகண்டன் (19) என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான குணசேகரன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அத்துடன் மது போதையில் கிராம மக்களிடமும் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்த போதெல்லாம் அவரையும் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று மாலை செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற குணசேகரன் அங்கும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாமனாருக்கு சொந்தமான வைக்கோல் போருக்கு தீ வைத்துவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார்.

    இதுபற்றி அறிந்த மாமனார் தனது மகள் மஞ்சுளாவுக்கு போனில் தெரிவித்துள்ளார். அத்துடன் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள மஞ்சுளாவின் உறவினர்கள் மத்துமடக்கி கிராமத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் மஞ்சுளாவுடன் சேர்ந்து மது போதையில் இருந்த குணசேகரனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார்.

    பின்னர் மஞ்சுளாவின் உறவினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். தொடர்ந்து கணவர் அருகில் சென்ற மஞ்சுளா, அவர் அசைவற்று கிடந்ததால் இறந்துவிட்டதாக நினைத்தார். மேலும் இந்த சம்பவத்தில் தனக்கு தொடர் பில்லாதது போல் காட்டிக் கொள்ளவும் முயன்றுள்ளார். அதற்காக கணவரின் உடலில் இருந்த காயங்களின் மீது மஞ்சள் பொடியை தூவியுள்ளார்.

    பின்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்காக உயிருடன் இருந்த கணவர் குணசேகரன் உடல் மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். அலறித்துடித்த குணசேகரன் சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நடந்ததை மஞ்சுளா கூறினார். ஊர் மக்களிடமும் குணசேகரன் தகராறு செய்து தொல்லை கொடுத்து வந்ததால் அவர்களும் மஞ்சுளாவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையடுத்து இரவோடு இரவாக குணசேகரனின் உடலை அப்புறப்படுத்தி அங்குள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.


    கொலையுண்ட குணசேகரனின் உடலை போலீசுக்கு தெரியாமல் தகனம் செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள்

    அங்கு கட்டைகளை அடுக்கி தகனம் செய்ய முயன்றனர். இதுபற்றி தகவல் கிடைத்த குணசேகரனின் நெருங்கிய உறவினரான பழமலை என்பவர் இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா கொலையுண்ட குணசேகரனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    நெற்குன்றத்தில் மது குடித்து வந்த தகராறில் கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

    போரூர்:

    நெற்குன்றம் மந்தை வெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி டிரைவர். இவரது மனைவி விமலா. ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு விமலாவை அடித்து உதைத்து வந்தார். கடந்த 18ந் தேதி குடிபோதையில் வந்த ரமேஷ்-விமலா இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது விமலாவை கடுமையாக தாக்கினார். அப்போது விமலா அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த வெந்நீரை ரமேஷ் மீது ஊற்றினார்.

    இதில் உடல் வெந்து அலறி துடித்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வழக்குபதிவு செய்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் இன்று விமலாவை கைது செய்தனர்.

    ×