search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Walmart"

    • வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் இந்தியா வந்துள்ளார்.
    • தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை டக் மெக்மில்லன் சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டக் மெக்மில்லனுடனான சந்திப்பு பலனளிக்கும் ஒன்றாக இருந்தது. வெவ்வேறு விஷயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம். முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவெடுத்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • விமானத்தை திருடிய நபரிடம் பைலட் உரிமம் இல்லை.
    • பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்குப் பதிவு.

    டுபேலா:

    அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். விமானத்தில் சுற்றியபடி இருந்த அந்த 29 வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அந்த நபர் விமானத்தை டுபெலோவிற்கு வடகிழக்கே 60 மைல் தொலைவில் உள்ள ஆஷ்லாந்து வயல் வெளியில் தரையிறக்கினார். விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் காவலில் வைக்கப்பட்ட அந்த நபர் கோரி பேட்டர்சன் என அடையாளம் காணப்பட்டார். அவரிடம் பைலட் உரிமம் இல்லை என்பதும், 10 ஆண்டுகளாக டுபெலோ நகர விமான நிலையத்தில் அவர் லைன்மேனாக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    விமானங்களுக்கு எரிபொருள் நிரம்பும் பணியிலும் ஈடுபட்டு வந்த பேட்டர்சன், 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடி அதை வைத்து மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து திருட்டு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    ஆரம்ப அச்சுறுத்தலுக்குப் பிறகு, அவர் தன்னையோ அல்லது வேறு யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் டுபேலா நகர போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் மிசிசிப்பி மாகாண ஆளுநர் ரீவ்ஸ் தமது ட்விட்டர் பதிவில் நிலைமை சீரடைந்து விட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவின் மிசிசிபியில் வால்மார்ட் அங்காடி செயல்பட்டு வருகிறது.
    • வால்மார்ட்டை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தின் டுபேலா நகரில் பிரபல வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் விடுத்த மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுற்றி வரும் 29 வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னெச்சரிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    முதல் கட்ட விசாரணையில், விமானத்தில் பறந்தபடி சுற்றி வரும் இளைஞர் விமானத்தை திருடிச்சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதையடுத்து, நிலைமை சீராகும் வரை வால்மார்ட் அங்காடியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    சில்லரை வணிகத்தை பாதிக்கும் வால்மார்ட்டை தடை செய்யக்கோரி செப்டம்பர் 28-ந்தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். #Walmart
    கரூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில்லரை வணிகத்தை பாதிக்கும் வால்மார்ட்டை தடை செய்யக்கோரி செப்டம்பர் 28-ந்தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்டம் தொடர்பாக வருகிற 4-ந்தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வால்மார்ட்டை விட்டு விட்டால் 2 வருடத்தில் சில்லரை வர்த்தகமே இல்லாத நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இப்போதே பல மாவட்டங்களில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து கடைகளுக்குள் புகுந்து சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. இது தொடர்பாக நாளை மறுநாள் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் வால்மார்ட்டுக்கு தடை விதித்ததோடு, அந்நிறுவனத்தின் கட்டிடத்திற்கு சீல் வைத்தார். அது போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி.யினால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர். வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு, அதன்பின்னர் வந்த ஜி.எஸ்.டி.யால் 40 சதவீத வியாபாரம் சரிந்துள்ளது. வரியை குறைத்தால்தான் வரி ஏய்ப்பு குறையும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்ததில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் துணி, பேப்பர் பைகள் ஆகியவற்றிற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வால்மார்ட் போன்ற பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனமான பிலிப்கார்ட்டின் 77 சதவீதம் பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ரூ. 1.10 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளது. வியக்க வைக்கும் வணிகமாக இது தோன்றினாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்திய வணிகர்களை பாதிக்கும் இந்த வணிக ஒப்பந்தத்தை மத்திய அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    பிலிப்கார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமாக இருந்தாலும் கூட அது தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை லாபம் ஈட்ட முடியவில்லை. மாறாக, இதுவரை ரூ.24,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

    இதற்கு காரணம் வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக பெருமளவில் தள்ளுபடி கொடுத்தது தான். இப்படிப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை, அந்த நிறுவனமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருப்பதை அறியாமையின் அடையாளமாகவோ, முட்டாள் தனமாகவோ பார்க்க முடியாது.

    மாறாக, 125 கோடி நுகர்வோரைக் கொண்ட இந்திய சந்தையை வளைப்பதற்காக செய்யப்படும் முதற்கட்ட முதலீடாகத் தான் பார்க்க வேண்டும். பிலிப்கார்ட் நிறுவனத்தை தளமாக பயன்படுத்திக் கொண்டு, நுகர்வோருக்கு கூடுதலான தள்ளுபடிகளை வழங்கி தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும்; அதன்பிறகு ஒட்டுமொத்த சந்தையையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது தான் வால்மார்ட்டின் திட்டம்.

    வால்மார்ட்டின் வணிக அணுகுமுறை இந்திய நலனுக்கு எதிரானது என்பது தான் கவலையளிக்கும் வி‌ஷயமாகும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியுள்ள வால்மார்ட் சீனத் தயாரிப்புகளை அதிக அளவில் கொள்முதல் செய்து குறைந்தவிலையில் விற்பனை செய்வதை அதன் வணிகத் தந்திரமாகக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் ஆன்லைன் வணிகத்திலும் அதே உத்தியையைத் தான் வால்மார்ட் நிறுவனம் கடைபிடிக்கும் என்பதால், இந்தியா முழுவதும் சீனாவின் மலிவு விலைத் தயாரிப்புகள் குவிக்கப்படும் ஆபத்து உள்ளது.

    ஏற்கனவே சீனத் தயாரிப்புகளின் வரவால் இந்திய சந்தை குப்பையாகிக் கிடக்கிறது. வால்மார்ட் நிறுவனத்தின் வரவு இந்தியாவை சீனக் கழிவுகளின் கிடங்காக்கி விடும். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஏற்கனவே, அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் இந்தியாவில் நுழைந்து ஆன்லைன் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீன நிறுவனமான அலிபாபாவும் பிக் பேஸ்கட் என்ற வணிகப் பெயரில் இந்திய சந்தைக்குள் நுழைந்து வாடிக்கையாளர்களை வளைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூன்றுமே வெளிநாடுகளை சேர்ந்தவையாக இருப்பதும், அவற்றின் முக்கிய கொள்முதல் சந்தையாக சீனா இருப்பதும் இந்தியாவுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல.

    இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, ஒரு நிறுவனத்தின் ஒட்டு மொத்த கொள்முதலில் 30 சதவீதம் பொருட்கள் இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், ஆன்லைன் வணிகத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் பன்னாட்டு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் சீனப் பொருட்களை விருப்பம் போல வாங்கி விற்பனை செய்யும். இதனால் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் நலிவடையும். அதைத் தொடர்ந்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.

    இந்தியாவின் ஒட்டு மொத்த சில்லரை வணிகத்தில் 3 சதவீதம் மட்டும் தான் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இதை அமெரிக்காவுக்கு இணையாக 20 சதவீதம் ஆக அதிகரிக்க இந்நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன. இந்த அளவுக்கு ஆன்லைன் வணிகம் அதிகரித்தால், தமிழகத்திலுள்ள 21 லட்சம் சில்லரை வணிகர்கள் உட்பட கோடிக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். இது நாட்டின் கிராமப் பொருளாதாரத்தை முற்றிலுமாக சிதைத்து விடும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

    எனவே, வால்மார்ட் போன்ற பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கொல்லைப்புற வழியாக இந்தியாவில் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும். அது சட்டப்படி சாத்தியமில்லை என்றால் அந்நிறுவனங்களுக்கு கடுமையான வணிக மற்றும் கொள்முதல் கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றால் இந்திய வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #Ramadoss
    1½ கோடி வியாபாரிகள் குடும்பங்களை பாதிக்கும் வால்மார்ட்டை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். #Vikramaraja

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும்.

    ஆனால் இப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியதன் மூலம் அதில் உள்ள 1 கோடி வாடிக்கையாளர்களுக்கும் வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்ய வழி வகை ஏற்பட்டுள்ளது. இது சிறுகடைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தமிழகத்தில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஒட்டு மொத்தமாக சிறு வணிகர்களை அழித்து விடும்.

    காவிரி வறண்டதால் விவசாயிகள் தற்கொலை செய்வது போல் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை உருவாகும். மத்திய அரசின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழகத்தில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும்.

    வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதால் இந்தியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட், மால்கள், காய்கறி மார்க்கெட், மளிகை கடை, மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    ஆனால் இதை மறைப்பதற்காக ஆன்லைன் வியாபாரம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

    தமிழ்நாட்டில் 21 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அவர்களை சார்ந்து 1½ கோடி குடும்பத்தினர் உள்ளனர். இவர்களை காப்பது அரசின் கடமையாகும்.

    எனவே வால்மார்ட் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதை அரசு தடை செய்ய வேண்டும்.

    இந்திய வணிகர்களை காப்பாற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இதுவரை கண்டிராத அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

    சென்னை திருவல்லிக்கேணியில் வி.பி.எம். ஸ்டோர்ஸ் நடத்தும் மொத்த வியாபாரியான வி.பி.மணி கூறியதாவது:-

    எங்கள் கடையில் அழகு சாதன பொருட்கள், குளிர் பானங்கள், பேன்சி பொருட்கள், எழுது பொருட்கள், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மொத்த விற்பனையில் கொடுக்கிறோம்.

    பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வியாபாரத்தில் உள்ளதால் எங்கள் கடைகளில் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது.

    இப்போது வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. இது உள்ளூர் கடை விற்பனையை வெகுவாக பாதிக்கும்.

    இந்திய பொருளாதார சந்தையை கைப்பற்ற நேரடியாக சில்லறை விற்பனைக்குள் வால்மார்ட் நிறுவனம் நுழைந்துவிட்டது. இதை நாங்கள் உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

    இந்தியாவில் ஒரு பொருள் உற்பத்தியானால், அது மாநில வினியோகஸ்தர், மண்டல விநியோகஸ்தர், ஏரியா விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, ஆகியோர் கைமாறி, சில்லரை கடைகளுக்கு வரும். அங்கிருந்து பொது மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும்.

    ஆனால் வால்மார்ட் நிறுவனம், உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பொருட்களை வாங்கி ஆன்லைன் மூலம் பொது மக்களுக்கு பொருட்களை விற்க உள்ளனர்.

    ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை இழுப்பார்கள். இதன் பாதிப்பால் கடைகளில் வியாபாரம் குறைந்து விடும். நாளடைவில் கடைகளை இழுத்து மூடும் நிலை உருவாகும்.

    சில்லறை வியாபாரிகளை நசுக்கிய பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது பொருட்களுக்கான விலையை அதிகமாக்கி விடுவார்கள். அதனால்தான் எதிர்க்கிறோம். எனவே ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு வி.பி. மணி கூறினார்.

    பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி கூறினார். #Flipkart #Walmart
    புதுடெல்லி:

    பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி கூறினார்.

    நமது நாட்டில் ஆன்லைன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிற இணையவழி வர்த்தகம், சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இங்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக தொடங்கப்பட்ட ‘பிளிப் கார்ட்’ இதில் நல்லதொரு பங்களிப்பை செய்து வந்தது.

    இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க ஆன்லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற நிறுவனங்களில் ஒன்றான ‘வால்மார்ட்‘ நிறுவனம் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி) கொடுத்து வாங்கி, தன் வசப்படுத்துகிறது. இதற்கான பேரம் முடிந்து உள்ளது. இது, உலக அளவில் ஆன்லைன் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதே நேரத்தில் இந்தப் பேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பேரம் பற்றிய தகவல் நேற்று முன்தினம் வெளியான சிறிது நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜக்ரான் மஞ்ச், கடுமையாக சாடியது.

    பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சுதேசி ஜக்ரான் மஞ்ச் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    “இந்தியாவுக்குள் புறவாசல் வழியாக நுழைவதற்கு வால்மார்ட் விதிமுறைகளை சுற்றி வளைத்து இருக்கிறது, நாட்டு நலன் கருதி இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்” என்று அது கூறியது.

    இது தொடர்பாக அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பிரதமர் மோடிக்கு ஒரு அவசர கடிதம் எழுதினார்.

    அதில் அவர், “இந்த நடவடிக்கை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களையும், சிறிய கடைகளையும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதற்கான வாய்ப்புகளையும் ஒழித்துக்கட்டி விடும். ஏற்கனவே பெரும்பாலான சிறிய தொழில் நிறுவனங்கள் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு போராடி வருகின்றன. வால்மார்ட் நிறுவனத்தின் பிரவேசம், அவற்றுக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன், டெல்லியில் நேற்று குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவரிடம் இந்த பேரம் தொடர்பாக பிரதமர் மோடியையோ, மூத்த மந்திரிகள் யாரையுமோ சந்தித்து பேச முடியாமல் போனது பற்றி கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர், “கடந்த காலத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசி இருக்கிறோம். எதிர்காலத்திலும் சந்தித்து பேசுவோம். பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை நாங்கள் வாங்குவதற்கு போட்டி ஆணையத்தில் இருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதில் எந்த கஷ்டமும் இருப்பதாக கருதவில்லை. இந்த பேரம் வாடிக்கையாளர்களுக்கு நல்லது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சமூகத்துக்கு உதவியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

    “பிரதமர் மோடியையோ, வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபுவையோ சந்திக்க முடியாமல் போனது, வால்மார்ட்டுக்கு சரியான வரவேற்பு இல்லை என்று உணர்த்துவது போல அமைந்து விடாதா?” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “நான் உண்மையிலேயே அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் அரசின் அனைத்து மட்டங்களிலும் எல்லா நேரமும் தொடர்பில் உள்ளோம். இதற்கு முன்பும் சந்தித்து பேசி இருக்கிறோம். இனியும் சந்திப்போம்” என பதில் அளித்தார்.

    “பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பியபோது அவர், “வால்மார்ட் புதிய நிறுவனம் அல்ல. அந்த சந்திப்பு மிக முக்கியமான நிகழ்வு அல்ல. புகைப்படத்துக்காக ‘போஸ்’ கொடுப்பது எங்களுக்கு தேவை இல்லை” என பதில் அளித்தார்.

    வால்மார்ட் வேலை வாய்ப்பை பெருக்கும் என்று கூறுவது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர், “இணையவழி வர்த்தக வெளியில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என துல்லியமாக கணித்து கூறுவது கடினம். ஆனாலும் பல லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என மூன்றாம் தரப்பு ஆய்வு தெரிவிக்கிறது” என்று கூறினார்.

    மேலும், “இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இவ்வளவு காலத்துக்குள் இந்த வாய்ப்பு உருவாகும் என காலநிர்ணயம் செய்து கூற முடியாது. அதற்கான ஆய்வு எங்களிடம் உள்ளது. வேலை வாய்ப்பு என்பது கம்பெனியில் மட்டுமல்லாது, பிளிப்கார்ட் தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிற வினியோகஸ்தர்களிடமும் பெருகும். வால்மார்ட் 90 சதவீதத்துக்கும் மேலான பொருட்களை உள்நாட்டில், உள்ளூரில் வாங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

    பிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தை தன்வசப்படுத்துவதின் மூலம் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் அமெரிக்க நிறுவனமான அமேசான் நிறுவனத்துக்கு பலத்த போட்டியை ஏற்படுத்த முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   #Flipkart #Walmart #tamilnews 
    பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது.
    புதுடெல்லி:

    அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் 77% பங்குகளை சுமார் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. இது அந்நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது இருக்கிறது.

    இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மொத்தம் 20.8 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட்  பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்குவதாக வால்மார்ட் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    பிளிப்கார்ட் தளத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், ஒப்பந்தம் கையெழுத்தானதும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். பிளிப்கார்ட் தளத்தை துவங்கும் போது சச்சின் மற்றும் பின்னி இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றினர். பிளிப்கார்ட் நிறுவன இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தில் தனது 5.5% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறார். 

    ஒப்பந்தம் கையெழுத்தானதும் பின்னி பன்சால் நிறுவன பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனமும் பிளிப்கார்ட் தளத்தில் தனது 20% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.
    ×