என் மலர்
இந்தியா

பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன சிஇஓ சந்திப்பு
- வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் இந்தியா வந்துள்ளார்.
- தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை டக் மெக்மில்லன் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டக் மெக்மில்லனுடனான சந்திப்பு பலனளிக்கும் ஒன்றாக இருந்தது. வெவ்வேறு விஷயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம். முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவெடுத்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Next Story






