search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரமராஜா"

    • மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
    • சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41-வது வணிகர் தினத்தையொட்டி, வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை விமான நிலையம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான கால் கோள் விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார். நிகழ்ச்சியில் மதுரை மண்டல மாவட்ட தலைவர் செல்லமுத்துத்து, மாநில தலைமைச் செயலாளர் பேராசியர் ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், கூடுதல் மாநில செயலாளர் வி.பி.மணி உள்பட பல முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாவட்டச் செயலாளர் அழகேசன், பொருளாளர் லட்சுமி காந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மே மாதம் 5-ந்தேதி 41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் விடுதலை முழக்க மாநாட்டிற்கு லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டுக்கு பின்பு அமையக்கூடிய புதிய மத்திய அரசு எந்த அரசாக இருந்தாலும் வணிகர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். மேலும் இந்த மாநாட்டில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    சாமானிய வணிகர்கள் கடைகளை சிங்கிள் விண்டோ மூலமாக அகற்றக் கூடிய சூழ்நிலை உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், மும்பை, கேரளாவை சேர்ந்த முதலாளிகள் தமிழகத்தின் வணிகத்தை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் வணிகர் மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு வணிகர்களின் பாதுகாக்கும் முயற்சியாக வணிகர் பாதுகாப்பு சட்டம் என்னும் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு முயற்சி எடுக்கும்.

    வணிகர் சங்க மாநாட்டில் அமைச்சர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு வேண்டிய பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட உள்ளது. அதற்காக தனிக்குழுவும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த கால்கோள் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு மாநாடு சிறப்பு பெற தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சி நிறைவில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    • அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
    • வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தேர்தல் நடைமுறை, அமலாக்கத்திற்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாகவே இன்றளவும் இருக்கின்றது. பறக்கும் படை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

    உண்மையாகவே தேர்தலில் கையூட்டு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித தகவலும் செய்திகளும் இல்லை.

    முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது. இது சம்பந்தமாக இன்னும் இரண்டு தினங்களில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகுவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தேர்தல் தேதியான ஏப்ரல் 19-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு அங்கேயே வெளியிடப்படும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவிப்பதாக மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    • மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல கூட்டம், கோவில்பட்டி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெறுவதை 3 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி தருவதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இருக்கிறோம்.

    வணிக உரிமை பெறுவதற்கு கட்டிட உரிமையாளரும் வரி கட்ட வேண்டும், அதனை இணைக்க வேண்டும் என்பதனை தவிர்த்து உரிமத்தினை தனியாக வழங்க வேண்டும் என்பதனையும் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்க்க இருக்கிறோம். ஆகவே தான் மே 5-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    உற்பத்தியாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் அனைத்து கடைகளுக்கு ஒரே விலையில் பொருட்களை தர வேண்டும். அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைனில் புகுந்து கொண்டு வணிகத்தினை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரபட்சம் இல்லமால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் இல்லமால் செயல்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதனை அதிகளவு பயன்படுத்துவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    சிறு வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்து அதிகளவு அபராதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக்குக்கு பதில் மாற்று எது என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும். அதனை முறைப்படுத்த வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள், மாநாட்டு தீர்மானங்கைள நிறைவேற்றி தருகிறோம் என்று யார் உறுதி அளிக்கிறார்களோ, அது குறித்து ஆலோசனை நடத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம்

    பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வணிகர்களை மிரட்டும் ரவுடிகள் மீது புகார் அளித்தால் கைது செய்யப்பட்ட சில நாள்களில் வெளியே வந்து மிரட்டும் சூழ்நிலை உள்ளது.

    தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் ரவுடியிசம் ஒழியும். வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தவறு செய்யும் வணிகர்களுக்கு அவர்களின் பொருளாதரத்தினை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து தவறும் செய்யும் வியாபாரிகளை நீக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
    • ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும் நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை என்ற பெயரில், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சினையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.

    ஊட்டி மார்க்கெட்டில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் இங்கு பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாயமா என்று தெரியவில்லை. ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், மண்டலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

    ஊட்டி மார்க்கெட்டில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்பிக்கு நன்றி. அதேபோல், மார்க்கெட் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்-வேண்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் குமார். இவரது மகன் விக்னேஷ்குமார்-உமா மகேஸ்வரி திருமணம் பொன்னேரியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

    மணமக்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகராட்சிகளில் கடைகளுக்கு உரிமம் பெற கட்டிட உரிமையாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடைகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி உரிமம் தர வேண்டும். கடையை காலி செய்ய வேண்டுமென்றால் கட்டிட உரிமையாளர் வேண்டுமென்றே வரியை கட்டாமல் கடைக்கு சீல் வைக்கும் ஆபத்து உள்ளது.

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம். மே மாதம் புதிய அரசு அமைந்தவுடன் மீண்டும் சென்று வலியுறுத்த உள்ளோம். ஒட்டு மொத்தமாக 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை கடுமையாக ஏறியுள்ளது. பூண்டு விலை தற்போது சரிந்து வருகிறது.

    வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து பாராளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும். கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு குறித்து மே மாதம் நடைபெற்ற உள்ள வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 24 மணி நேரம் கடையை திறக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் போலீசார் கடைகளை மூட நிர்பந்திப்பது அபத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பேரமைப்பு தலைவர் வில்லியம்ஸ், நந்தன், எஸ்.வி, முருகன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் பால்ராஜ், கேசவன், ரமேஷ் கண்ணன், செங்குன்றம் வியாபாரிகள் சங்கதலைவர் செல்வகுமார், செல்லதுரை, அப்துல், காதர், வேலு, ஆச்சாரி, பால் பாண்டி, பாலகிருஷ்ணன், அஜிஸ், யுவராஜ், திராஜிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது.
    • தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை.

    ஈரோடு:

    வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடங்கி இருக்கும் இந்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பேரணிகள் நடத்தி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மீதும் தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம். 60 சதவீதம் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என வணிகர்களிடம் கூறி உள்ளோம்.

    இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது. வணிகர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கேட்டிருந்தோம். அது குறித்து எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி வரி விலக்கில் மாற்றங்கள் கேட்டிருந்தோம், ஒரே முறை வரியாக கேட்டிருந்தோம், வரியை குறைத்தால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் வலியுறுத்தி இருந்தோம்.

    ஜி.எஸ்.டி சட்ட ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து ஜி.எஸ்.டி சட்டத்தை தெரிந்து கொள்வதாக இருக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாத காலத்தில் அகற்றுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக துறையின் அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

    ஆனால் இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று எதுவும் செய்யாத பட்ஜெட்டாக இருக்கிறது.

    சோலார் பயன்படுத்து பவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால் அது யாருக்கு தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

    இந்தியாவில் வணிகவரி அதிகம் கட்டுவது தமிழ்நாட்டில் தான். இதில் சிறு சிறு குறைபாடுகளை கூட அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். ஏற்கனவே நசிந்து வரும் தொழிலை மேலும் நசுக்க வேண்டாம்.

    தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை. விரைவில் அதன் உண்மை தன்மையை அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வணிகர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானத்தை வெளியிட இருக்கின்றோம். இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மேயர் நாகரத்தினம் தமிழ் பெயர் பலகையை திறந்து வைத்தார். பேட்டியின் போது அமைச்சர் முத்துசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ராஜா, பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வன், இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும்.
    • வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா நடந்தது. நகரத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் கனகராஜ், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கடைவீதி பகுதிக்கு மேள தாளங்கள் முழங்க நடை பயணமாக சென்று பேசினார்.

    ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களை பெரிதும் பாதிக்கிறது. உணவு பாதுகாப்பு துறை வியாபாரிகளை மிரட்டினால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும். காய்கறிகளின் விலைகள் ஏறாமல் தடுக்க குளிர் பதனக்கிடங்குகளை அரசு அமைத்து, காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அரசே விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிகர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
    • ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு ஏ.எம்.விக்கிரமராஜா பரிசு பொருட்கள் வழங்கினார்.

    மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ராஜ்குமார் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆதி குருசாமி, என்.ஜெயபால், எட்வர்டு, யு.நடராஜன், ஆர்.எம்.பழனியப்பன், ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
    • அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்னை கே.கே.நகரில் 2 கிரவுண்ட் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    5 மாடிகள் கொண்டதாக அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கடைகள் அமைந்துள்ளது. முதல் மாடியில் பேரமைப்பு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது மாடியில் கருத்த ரங்கம், கூட்டம் நடைபெறுவதற்காக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    3-வது மாடியில் 'சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. 4-வது மாடியில் ஆலோசனை அரங்கமும், 5-வது மாடியில் வெளியூர்களில் இருந்து வரும் வணிகர்கள் தங்குவதற்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 அறைகள் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    பேரமைப்பு தலைமை அலுவலக திறப்பு விழா இன்று காலையில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு வரவேற்க பொருளாளர் ஹாஜி ஏ.எம். சதக்கத்துல்லா கொடி ஏற்றினார்.

    பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டிடத்தை லெஜண்ட் குழும தலைவர் லெஜன்ட் சரவணன் திறந்து வைத்தார்.

    யோக ரத்தினம் லெஜண்ட் சரவணன் அரங்கத்தை ஸ்ரீ கோகுலம் குழுமம் நிறுவனர் கோகுலம் கோபாலன் திறந்து வைத்தார்.

    சிட்டி யூனியன் பெயரிலான அரங்கத்தை வங்கியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் காமகோடி, பேரமைப்பு அலுவலகத்தை போத்தீஸ் ரமேஷ் திறந்து வைத்தனர். பேரமைப்பு அரங்கத்தை ஹட்சன் அக்ரோ நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் திறந்து வைத்தார்.

    நலிந்த வணிகர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், கரு.நாகராஜன், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், ஜெயமுருகன், பத்மஸ்ரீ ஐசக், மெடிமிக்ஸ் அனுப், ஜமாலுதீன், கிருஷ்ண மூர்த்தி.


    புதுச்சேரி சிவசங்கர் எம்.எல்.ஏ., பிரபாகரராஜா எம்.எல்.ஏ. மற்றும் சிவ அருள் துரை, அருள் முருகன், மண்டலத் தலைவர்கள் சண்முகம், சூலூர் சந்திர சேகரன், ஆம்பூர் கிருஷ்ணன், கிருபாகரன், ஜோதிலிங்கம், ஆற்காடு சவுகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், பேரமைப்பு துணைத் தலைவர்கள் கொரட்டூர் த.ராமச்சந்திரன், ஆவடி அய்யார் பவன் அய்யாத் துரை, பேரமைப்பு மாநில துணைத் தலைவரும், செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்க தலைவருமான எஸ்.உத்திரகுமார், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், அயனாவரம் எஸ்.சாமுவேல், கிழக்கு மாவட்ட தலைவர் திருவொற்றியூர் ஆதி குருசாமி,

    ஆவடி மாநகராட்சி அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர்கள் ஆர்.கே.எம்.துரைராஜ், ஆர்.வேலுச்சாமி, கூட்டமைப்பு தலைவர் அய்யார்பவன் வி.அய்யாத் துரை, சட்ட ஆலோசகர் இரா. அந்திரிதாஜ், செயலாளர் சத்யா கோ.ரவி, பொருளாளர் கே.ஆனந்தன், துணைத் தலைவர் கே.தாமோதரன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இப்ரா கிம்பாஷா, ராஜேந்திர பிரசாத், வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் என்.ஜெயபால், மாவட்ட செயலாளர் ஹாஜி கே.முகமது, பொருளாளர் சி.மகேஷ்,

    முத்தமிழ்நகர் வியாபாரிகள் சங்க தலைவர் என்.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ராஜா, வி.பி.வில்லியம்ஸ், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.தேசிகன், பொருளாளர் ஜெ. சின்னவன், திருவான்மியூர் செந்தில்குமார், கந்தன் சாவடி வில்சன், மாவட்ட துணைத் தலைவர் சி.எம்.சாமி, அடையாறு பாஸ்கர், அண்ணாநகர் ஆர்.பாலாஜி, வி.ராஜேந்திரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்ட செயலாளர் ஷேக் முகைதீன், பொருளாளர் சத்திய ரீகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, வணிகர் சங்கப் பேரமைப்பு புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.

    • வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது.
    • ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும்.

    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் வணிகர்கள் பொது மக்களுக்கு எந்த அளவில் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை அறிவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும். அன்னிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கு 4 இலவசம், 2-க்கு 2 இலவசம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    பொதுமக்கள் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முன் வர வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை புறக்கணியுங்கள். தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ளது. அனைத்து கடைகளுக்கும் சென்று பொது மக்கள் பொருட்கள் வாங்க முன் வர வேண்டும். இந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், கடைகளுக்குள் நுழைந்து வணிகர்களிடையே அச்சுறுத்த கூடாது.

    தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்படும். இந்த நேரத்தில் பட்டாசு கடைக்காரர்களுக்கு அரசு துறை அதிகாரிகள் அச்சுறுத்தலை தந்து வருகிறார்கள். சில்லறை பட்டாசு விற்பனை கடைகளில் எங்காவது விற்பனை நடந்துள்ளதா? உற்பத்தி செய்யும் இடங்களில் விபத்துக்கள் நடந்திருக்கலாம். எனவே பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் உடனே உரிய அனுமதி வழங்க வேண்டும்.

    இது தொடர்பாக நாங்கள் சென்னையில் அதிகாரிகளை சந்தித்துள்ளோம். இதே நிலை நீடித்தால் ஒரிரு நாட்களில் பிரச்சினை தீராவிட்டால் முதலமைச்சரை ஒரிரு நாட்களில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகளை திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    பக்கத்து மாநிலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் நமது மாநிலத்தில் அப்படி இல்லை. சாமானிய வணிகர்களை காக்க முதலமைச்சர் முன் வர வேண்டும்.

    உள்நாட்டு வணிகர்களை காக்க வேண்டும். அதற்காக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும். ஜி.எஸ்.டி. அதிகமாக கட்ட கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் நமது மாநிலத்திற்கு வரக்கூடிய தொகை குறைவாகும். ஜி.எஸ்.டி.யில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

    கவுன்சிலிங் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். வியாபாரிகளை, வணிகர்களை காக்க பிரதமர் முன் வர வேண்டும். பட்டாசு கடைகளை பொது இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கான வழிமுறைகள் தற்போது இயலாது. சட்டத்தை உடனடியாக மக்களிடம் கொண்டு வந்தால் தொழில் நடத்த முடியாது. ஆகவே தகுந்த பாதுகாப்புடன் பட்டாசு கடைகளை வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது.
    • நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகள், சிறு-குறு தொழில்களுக்காக உச்சபட்ச மின்பயன்பாடு நேர கட்டண உயர்வு ஏற்கனவே காலை 6 முதல் 9 மணி வரை, மாலை 6 முதல் 9 மணி வரை என 6 மணிநேர மின்கட்டண உயர்வு வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 8 மணிநேரமாக உயர்த்தி மறுவரையரை செய்யப்பட்டிருக்கிறது. வரையரை செய்யப்பட்டதோடு அல்லாமல் கட்டண உயர்வும் அமலாக்கத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, தொழில் துறையினர் தங்களது உற்பத்தியில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தங்களது தயாரிப்புப் பொருட்களின் உற்பத்தியை குறைத்திருப்பதாக தெரியவருகின்றது.

    இதனால் இத்தொழில் சார்ந்த துறையினர் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதோடு, தங்களது தொழில் நசிவு காரணத்தினால், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. எனவே தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்கள், தொழில்துறையினர், சிறு வியாபாரிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். இதேபோல் நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.
    • தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்திய மூர்த்தி நகரில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

    வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.

    கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கின்றோம்.

    இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.

    தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.

    ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்கமாட்டோம்.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது. தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அருண் சின்னப்பா, சாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×