search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant Day"

    • மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர்.
    • செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5 வணிகர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று ஈரோட்டில் வணிகர் சங்கம் சார்பில் 40-வது வணிகர் தின மாநாடு நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி செங்கல்பட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் செங்கல்பட்டில் இருந்து ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர். கடை தொழிலாளர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

    குறிப்பாக செங்கல்பட்டு நகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய ஜி.எஸ்.டி. சாலை, மணிகூண்டு, காய்கறி மார்கெட், சின்ன மணிக்கார தெரு, பெரிய மணிக்கார தெரு, ராஜாஜி தெரு, உள்ளிட்ட தெருக்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் வணிகர் தினத்தை கொண்டாடும் விதமாக மூடப்பட் டுள்ளது. இதனால் செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.

    • மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    மே 5 வணிகர் தினத்தையொட்டி வணிகர் சங்கங்கள் நாளை மாநாடுகள் நடத்துகின்றன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாநாடு நடைபெறுகிறது. பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நடத்தும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, வெள்ளக் கோவில் சாமிநாதன், பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி விருதுகள் வழங்குகிறார்கள்.

    பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாட்டு தீர்மானங்களை பிரகடனபடுத்தி முன் மொழிந்து பேசுகிறார். வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமையை வென்றெடுக்க பேரமைப்பின் கள நிகழ்வினை முன்னிறுத்தும் மாநாடாக இது நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு தொழில் முனைவோர்களும் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் பாராட்டுரை வழங்குகிறார்கள்.

    மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி நாளை (5-ந்தேதி) தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதையொட்டி இன்று (4-ந்தேதி) மாநாட்டு திடலில் சிறு-குறு நிறுவனங்கள் தங்களது நிறுவன பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் (கண் காட்சி) அமைத்துள்ளன. இதை இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைக்கிறார்.

    ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன் வணிக கொடியை ஏற்றி வைக்கிறார். சங்க தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கே.ஜோதிலிங்கம், ஆம்பூர் கிருஷ்ணன் அமல்ராஜ் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்பட பலர் மாநாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

    ×