என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகர் தினம்"

    • விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள்.
    • வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.

    மறைமலைநகர்:

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டு மறைமலைநகரில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:-

    சிறு-குறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய முதலீடு மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கவில்லை என்றால் சிறு வணிகமே இல்லாமல் போகும்.

    எனது தலைமையிலான ஆட்சியில் 24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    காரணம் இன்றி உள்நோக்கத்துடன் அரசு அலுவலர்கள் வணிக நேரத்தில் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்தி வருகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள். காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுகிறார்கள். வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.

    நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு வணிகர்கள். உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே அச்சாணியாக திகழ்வது நமது வணிகர்களே. அவர்கள் நலனை பாதுகாப்பதில் அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    சிறிய தேனீர் விடுதி, அடகு கடைகள், சிற்றுண்டி சாலைகள், பழ வியாபாரிகள் தொழில் செய்வதற்கு முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று வியாபாரிகள் என்னிடம் தெரிவித்தனர். எங்கள் ஆட்சியில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. செவி சாய்க்கும். நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.
    • கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மொத்தம் 6 இடங்களில் நாளை வணிகர் சங்கத்தினர் மாநாடு நடத்துகின்றனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.

    42-வது வணிகர் தினம் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடாக நடத்தப்படுவதால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கிறார்கள். இதற்காக மதுராந்தகத்தில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் 29 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்பு நிகழ்த்த உள்ளார். மாநாட்டு பிரகடனத் தீர்மானங்களை மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானங்களை முன்மொழிகிறார்.

    காஞ்சி மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் பிரபாகர், வடக்கு மாவட்ட தலைவர் உத்திரகுமார் மாநாட்டு பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5 மணியளவில் மதுராந்தகம் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

    போகும் வழியில் கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்று வணிகர்களுக்கு விருதுகள் வழங்கி நலத்திட்ட உதவிகளும் கொடுக்கிறார்.

    அதன் பிறகு விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

    இதே போல் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொளத்தூர் த.ரவி தலைமையில் வணிகர் பாதுகாப்பு மாநாடாக மறைமலை நகரில் நாளை நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் படப்பை கரசங்சாலில் நாளை வணிகர் தின மாநாடு நடைபெறுகிறது. பேரவை தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் திருவண்ணாமலையில் நாளை வணிகர் தின விழா நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் அ.முத்துக்குமார் தலைமை தாங்குகிறார்.

    இந்த மாநாட்டில் மு.அருண்குமார் மாநாட்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் வணிகர் தினம் நடத்துகிறார். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் த.வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜா நடத்தும் மாநாடு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    6 இடங்களில் வணிகர்கள் மாநாடு நடத்துவதால் நாளை கடைகள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    • வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்று வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு பல்வேறு இடங்களில் நடக்கும் வணிகர் தின மாநாடுகளில் பங்கேற்பது வழக்கம்.

    வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக வணிகர் சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் கூறுகையில், 'வணிகர் தினத்தையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகளின் வரத்து அதிக அளவில் இருக்காது. எனவே வணிகர் தினத்தையொட்டி வருகிற 5-ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் சில கடைகள் திறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    மே 5 வணிகர் தினத்தையொட்டி வணிகர் சங்கங்கள் நாளை மாநாடுகள் நடத்துகின்றன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாநாடு நடைபெறுகிறது. பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நடத்தும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, வெள்ளக் கோவில் சாமிநாதன், பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி விருதுகள் வழங்குகிறார்கள்.

    பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாட்டு தீர்மானங்களை பிரகடனபடுத்தி முன் மொழிந்து பேசுகிறார். வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமையை வென்றெடுக்க பேரமைப்பின் கள நிகழ்வினை முன்னிறுத்தும் மாநாடாக இது நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு தொழில் முனைவோர்களும் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் பாராட்டுரை வழங்குகிறார்கள்.

    மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி நாளை (5-ந்தேதி) தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதையொட்டி இன்று (4-ந்தேதி) மாநாட்டு திடலில் சிறு-குறு நிறுவனங்கள் தங்களது நிறுவன பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் (கண் காட்சி) அமைத்துள்ளன. இதை இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைக்கிறார்.

    ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன் வணிக கொடியை ஏற்றி வைக்கிறார். சங்க தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கே.ஜோதிலிங்கம், ஆம்பூர் கிருஷ்ணன் அமல்ராஜ் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்பட பலர் மாநாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர்.
    • மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு சித்தோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று 40-வது வணிகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர். மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட் வணிகர் மாநாட்டையொட்டி இன்று அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஈரோட்டில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) இன்று அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    இதேப்போல் கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகர் பகுதி முழுவதும் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், மால்கள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.எம்.கே.ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேப்போல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை என மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் அனைத்தும் வணிகர் மாநாட்டையொட்டி அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நேரம் பால் பூத்துகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

    • 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
    • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார்.

    மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வணிகக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.

    மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் வணிகக்கொடியை ஏற்றி வைத்தனர்.

    அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 39-வது வணிகர் தினம் மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    இதனைத்தொடர்ந்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டு திடலில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை நேற்று மாலை திறந்து வைத்தார். தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 115-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன. அந்த ஸ்டால்களை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

    • மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர்.
    • செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5 வணிகர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று ஈரோட்டில் வணிகர் சங்கம் சார்பில் 40-வது வணிகர் தின மாநாடு நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி செங்கல்பட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் செங்கல்பட்டில் இருந்து ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர். கடை தொழிலாளர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

    குறிப்பாக செங்கல்பட்டு நகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய ஜி.எஸ்.டி. சாலை, மணிகூண்டு, காய்கறி மார்கெட், சின்ன மணிக்கார தெரு, பெரிய மணிக்கார தெரு, ராஜாஜி தெரு, உள்ளிட்ட தெருக்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் வணிகர் தினத்தை கொண்டாடும் விதமாக மூடப்பட் டுள்ளது. இதனால் செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.

    • வணிகர் தினத்தை முன் னிட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது
    • 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்

    ஆம்பூர்:

    வணிகர் தினத்தை முன் னிட்டு ஆம்பூரில் கடைக ளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடை, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன. பஜார் பகுதி யில் உள்ள காய்கறி மார்க் கெட் முழுவதுமாக மூடப் பட்டு இருந்தது.

    மேலும் பஜாரில் அனைத்து ஜவுளிக்கடைகளும், மளிகைக்கடைகளும் அடைக்கப் பட்டு இருந்தன.

    சுமார் 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரி கள் தெரிவித்தனர்

    ×