search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maduranthakam"

    மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    மதுராந்தகம்:

    திண்டிவனத்தை சேர்ந்தவர் குமரன். இவர் தனது நண்பருடன் காரில் இன்று காலை சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று கார் மீது திடீரென மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இதில் குமரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் காரில் இருந்த குமரன் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்து 2 பேர் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    குமரன் எதற்காக சென்னை வந்தார் என்பதும் அவருடன் பயணித்த நண்பரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா. இவர் அடகு கடையில் வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1 லட்சத்தை பையில் வைத்துக் கொண்டு அரசு பஸ்சில் (டி 7) மதுராந்தகம் நோக்கி சென்றார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் பஸ் நிலையத்தில் இறங்கிய போது வைத்திருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பஸ் நிலையத்தில் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மதுரையை சேர்ந்த உஷா, கல்யாணி, அனிதா, அபிராமி ஆகியோர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுபாவிடம் இருந்த ரூ.1 லட்ச பணப்பையை திருடிச் சென்றது தெரிந்தது.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.

    மதுராந்தகம் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னையில் வசிப்பவர்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக, சொந்த ஊர் செல்கிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார் (25), அஜித்குமார் (23). இவர்கள் சென்னையில் வேலை பார்த்து வந்தனர்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர்.

    சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள அத்திமனம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே உள்ள சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார், ரோட்டின் தடுப்பு சுவரை தாண்டி வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சந்தோஷ்குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    படுகாயம் அடைந்த அஜித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம் அருகே 20 நாய்கள் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு ஆண்டாக வீடுகளில் கட்டப்பட்டு இருந்த ஆடு, மாடு மற்றும் கோழிகள் தொடர்ந்து திருடு போய் வந்தன. மேலும் கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி நடந்து வந்தது.

    இதையடுத்து திருட்டு- கொள்ளை சம்பவங்களை தடுக்க கரசங்கால் கிராமத்தில் உள்ளவர்கள் ஏராளமானோர் வீடுகளில் நாய்களை வளர்க்க தொடங்கினர்.

    மர்ம நபர்கள் கிராமத்துக்குள் நுழையும் போது நாய்கள் குரைத்ததால் அவர்கள் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் கரசங்கால் கிராமத்தில் கடந்த 6 மாதமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் வெகுவாக குறைந்தன.

    இந்த நிலையில் கரசங்கால் கிராமத்தில் உள்ள தெருக்களில் நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. அவை வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் இறைச்சியில் வி‌ஷத்தை கலந்து வீச்சி சென்று உள்ளனர். இதனை தின்ற 20 நாய்கள் இறந்துள்ளன.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒரத்தி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளை கும்பலுக்கு தடையாக நாய்கள் இருந்ததால் அவற்றை வி‌ஷம் வைத்து கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கால்நடைகள் திருட்டு அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து வீட்டிலும் நாய்கள் வளர்க்க தொடங்கினர். இதனால் கடந்த 6 மாத காலம் கால்நடைகள் திருட்டு போவது குறைந்து இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு இறைச்சியில் பூச்சி மருந்தை வைத்து தெரு முழுவதும் திருட்டு கும்பல் வீசி உள்ளனர். அதை சாப்பிட்ட நாய் மற்றும் நாய்குட்டிகள் 20-க்கும் மேற்பட்டவை பலியாகி உள்ளது.

    இறைச்சியில் வி‌ஷம் வைத்தது போல பிஸ்கெட் மற்றும் திண்பண்டத்தில் கலந்து போட்டு இருந்தால் ஆடு, மாடு மற்றும் குழந்தைகளும் பலியாகி இருக்கும். நாய்களை வி‌ஷம் வைத்து கொன்ற கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையை ஒட்டி புதிதாக அமைய உள்ள செய்யூர் விமான நிலையத்தால் புதுவை மாநிலம் பல்வேறு வகையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய போதிய இட வசதி அங்கு இல்லை.

    எனவே, சென்னையை ஒட்டி புதிதாக விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இடம் தேடினார்கள்.

    ஆனால், ஒரு சில இடங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அங்கு விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

    இப்போது மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் விமான நிலையம் அமைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அங்கு 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கைப்பற்றி பிரமாண்ட அளவில் விமான நிலையம் அமைக்க இருக்கிறார்கள். இது, சர்வதேச விமான நிலையமாக செயல்படும்.

    இந்த விமான நிலையம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், புதுவையில் இருந்து 60 கி.மீட்டர் தூரமே உள்ளது.

    புதுவையில் சிறிய அளவில் விமான நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது விமான போக்குவரத்து தொடங்குவதும், பின்னர் நிறுத்துவதுமாக இருக்கிறது.

    இந்த விமான நிலையத்தில் குட்டி விமானங்கள் தான் இறங்க முடியும். பெரிய விமானங்கள் இறங்குவதற்கான நீண்ட ஓடு தளம் இல்லை. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு போதுமான நிலமும் புதுவை மாநில எல்லைக்குள் இல்லை.

    அதற்கு விமான நிலையத்தை ஒட்டி உள்ள தமிழக பகுதியில் இருந்து நிலம் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை நிலம் வழங்க முன்வரவில்லை.

    இதன் காரணமாக விமான தள ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனால் புதுவையில் விமான நிலையம் இருந்தும் போதிய பயனற்றதாக உள்ளது. இதன் காரணமாகவே புதுவையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.

    ஆனால், இப்போது தமிழக அரசு சென்னையை ஒட்டி அமைக்க உள்ள செய்யூர் விமான நிலையம் சென்னையை விட புதுவைக்குதான் மிக அருகில் இருக்கிறது.

    புதுவையில் இருந்து மரக்காணம், எல்லையம்மன் கோவில் வழியாக செய்யூர் பகுதிக்கு சென்று விடலாம். இங்கிருந்து 60 கி.மீ. தூரமே அந்த பகுதி இருக்கிறது.

    புதுவையில் இருந்து காரில் சென்றால் 40 நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்து விடலாம். எனவே, இந்த விமான நிலையம் புதுவைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

    இதனால் புதுவை மாநிலம் பல்வேறு வகையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    சென்னை 2-வது விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மதுராந்தகம் அருகே அமைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கத்தில் வெளிநாட்டு பயணத்துக்கான விமான நிலையம் மற்றும் உள்நாட்டு பயணத்துக்கான விமான நிலையம் இரண்டும் அருகருகே அமைந்துள்ளன.

    இந்தியாவில் அதிக பயணிகள் வந்து செல்லும் சர்வதேச விமான நிலையங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் சென்னை விமான நிலையத்தில் நெருக்கடி அதிகரித்துள்ளது. மீனம்பாக்கத்தில் தற்போதைய நிலையில் விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

    இதையடுத்து சென்னை புறநகர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தை உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு ஒப்படைத்து விட்டு, புதிய 2-வது விமான நிலையத்தை வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் சர்வதேச விமான நிலையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனால் 2-வது விமான நிலையத்தை சர்வதேச தரத்துடன் மிகவும் நவீனமாக உருவாக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால் சென்னைக்கு அருகில் 2-வது விமான நிலையத்தை எந்த பகுதியில் உருவாக்குவது என்பதில் இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    முதலில் ஸ்ரீபெரும்புதூரில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அங்கு பசுமை விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஸ்ரீபெரும்புதூரில் 2-வது விமான நிலையம் அமைய திட்டமிடப்பட்டது கைவிடப்பட்டது.

    இதையடுத்து மதுராந்தகம்-உத்திரமேரூர் பகுதியில் உள்ள 1500 ஏக்கர் இடத்தில் விமான நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    அதன்பிறகு கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லை அருகே 1250 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தனர். அதிலும் அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை.


    இந்த நிலையில் புதிய விமான நிலையத்துக்கு தற்போது நான்காவதாக மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. மதுராந்தகம் அருகே செய்யூர் பகுதியில் அந்த புதிய விமான நிலையத்தை அமைக்கலாமா என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். முதல் கட்டமாக மதுராந்தகம் தாலுகாவில் உள்ள தொழுபேடு, செய்யூர் தாலுகாவில் உள்ள அரப்பேடு, அயன்குன்னம் ஆகிய கிராமங்கள் உள்ள பகுதிகளை கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நிலப்பகுதியை அங்கு கையகப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள். ஜி.எஸ்.டி. சாலைக்கும், இ.சி.ஆர். சாலைக்கும் நடுவில் இந்த இடம் உள்ளதால் சென்னைக்கு விரைந்து செல்லும் வகையில் புதிய விமான நிலையத்தை அமைக்க முடியும் என்று அதிகாரிகளில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    செய்யூர் தாலுகாவில் 3 கிராமங்களையும், மதுராந்தகம் தாலுகாவில் 2 கிராமங்களையும் காலி செய்தால் மிக நவீன விமான நிலையத்தை உருவாக்க முடியும் என்று சர்வதேச நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் புதிய விமான நிலையத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள செய்யூருக்கும், சென்னைக்கும் உள்ள சுமார் 100 கி.மீ. தொலைவு மட்டும்தான் அதிகாரிகளை மலைக்க வைத்துள்ளது.

    சென்னை-செய்யூர் இடையே சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லாததால் வெளிநாட்டு பயணிகள் நகருக்குள் வந்து செல்ல சுமார் 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும். அது போல வெளிநாடுகளுக்கு செல்லும் போது சென்னையில் இருந்து குறைந்தது 5 மணி நேரத்துக்கு முன்பே புறப்பட வேண்டியதிருக்கும்.

    இது வெளிநாட்டு பயணிகளுக்கு இடையூறாக அமைந்து விடும் என்று கருதப்படுகிறது. இதனால் சென்னை-செய்யூர் இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் சாலையின் தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தற்போது அதிகாரிகளின் ஆய்வு பட்டியலில் மதுராந்தகம் அருகே செய்யூர், உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி மூன்று இடங்களும் உள்ளன. இந்த 3 இடங்களில் எங்கு புதிய விமான நிலையம் அமையும் என்பது விரைவில் தெரிந்து விடும். #ChennaiAirport
    மதுராந்தகம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 52) விவசாயி. இன்று காலை அவர் அருகில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ரத்தக் காயத்துடன் பரமேஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படாளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று பரமேஷ் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரமேசை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சமீபத்தில் பரமேஷ் யாருடனும் மோதலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விவரங்களை போலீசார் சேகரத்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். #SterliteProtest #DMKBandh #MKStalinArrested
    காஞ்சிபுரம்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் உருவானது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



    தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. இதையொட்டி அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    ஸ்டாலினை போலீசார் வேனில் ஏற்றியதும், வேனை அங்கிருந்து நகர விடாமல் தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  #SterliteProtest #DMKBandh #MKStalinArrested
    ×