search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளை - 4 பெண்கள் கைது
    X

    மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளை - 4 பெண்கள் கைது

    மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா. இவர் அடகு கடையில் வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1 லட்சத்தை பையில் வைத்துக் கொண்டு அரசு பஸ்சில் (டி 7) மதுராந்தகம் நோக்கி சென்றார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் பஸ் நிலையத்தில் இறங்கிய போது வைத்திருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பஸ் நிலையத்தில் நின்றவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மதுரையை சேர்ந்த உஷா, கல்யாணி, அனிதா, அபிராமி ஆகியோர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுபாவிடம் இருந்த ரூ.1 லட்ச பணப்பையை திருடிச் சென்றது தெரிந்தது.

    அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.

    Next Story
    ×