search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheyyur"

    வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls
    மதுராந்தகம்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்ல தேர்தல் கமி‌ஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.3 கோடியே 20 லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய ஆவணங்கள் அதில் இருந்த ஊழியர்களிடம் இல்லை.

    இதையடுத்து ரூ.3 கோடியே 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை செய்யூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    சென்னையில் இருந்து பாண்டிச்சேரி ஏ.டி.எம். பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஏ.டி.எம்.க்கு பணம் நிரப்பும் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். #LSPolls
    சென்னையை ஒட்டி புதிதாக அமைய உள்ள செய்யூர் விமான நிலையத்தால் புதுவை மாநிலம் பல்வேறு வகையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய போதிய இட வசதி அங்கு இல்லை.

    எனவே, சென்னையை ஒட்டி புதிதாக விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இடம் தேடினார்கள்.

    ஆனால், ஒரு சில இடங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அங்கு விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

    இப்போது மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் விமான நிலையம் அமைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அங்கு 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கைப்பற்றி பிரமாண்ட அளவில் விமான நிலையம் அமைக்க இருக்கிறார்கள். இது, சர்வதேச விமான நிலையமாக செயல்படும்.

    இந்த விமான நிலையம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், புதுவையில் இருந்து 60 கி.மீட்டர் தூரமே உள்ளது.

    புதுவையில் சிறிய அளவில் விமான நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது விமான போக்குவரத்து தொடங்குவதும், பின்னர் நிறுத்துவதுமாக இருக்கிறது.

    இந்த விமான நிலையத்தில் குட்டி விமானங்கள் தான் இறங்க முடியும். பெரிய விமானங்கள் இறங்குவதற்கான நீண்ட ஓடு தளம் இல்லை. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு போதுமான நிலமும் புதுவை மாநில எல்லைக்குள் இல்லை.

    அதற்கு விமான நிலையத்தை ஒட்டி உள்ள தமிழக பகுதியில் இருந்து நிலம் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை நிலம் வழங்க முன்வரவில்லை.

    இதன் காரணமாக விமான தள ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனால் புதுவையில் விமான நிலையம் இருந்தும் போதிய பயனற்றதாக உள்ளது. இதன் காரணமாகவே புதுவையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.

    ஆனால், இப்போது தமிழக அரசு சென்னையை ஒட்டி அமைக்க உள்ள செய்யூர் விமான நிலையம் சென்னையை விட புதுவைக்குதான் மிக அருகில் இருக்கிறது.

    புதுவையில் இருந்து மரக்காணம், எல்லையம்மன் கோவில் வழியாக செய்யூர் பகுதிக்கு சென்று விடலாம். இங்கிருந்து 60 கி.மீ. தூரமே அந்த பகுதி இருக்கிறது.

    புதுவையில் இருந்து காரில் சென்றால் 40 நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்து விடலாம். எனவே, இந்த விமான நிலையம் புதுவைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

    இதனால் புதுவை மாநிலம் பல்வேறு வகையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    ×