என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுராந்தகம் அருகே விவசாயி அடித்து கொலை
Byமாலை மலர்27 May 2018 11:19 AM GMT (Updated: 27 May 2018 11:19 AM GMT)
மதுராந்தகம் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 52) விவசாயி. இன்று காலை அவர் அருகில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ரத்தக் காயத்துடன் பரமேஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படாளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று பரமேஷ் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரமேசை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சமீபத்தில் பரமேஷ் யாருடனும் மோதலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விவரங்களை போலீசார் சேகரத்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X