search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Merchant's Day"

    • வணிகர் தினத்தை முன் னிட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது
    • 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்

    ஆம்பூர்:

    வணிகர் தினத்தை முன் னிட்டு ஆம்பூரில் கடைக ளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடை, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன. பஜார் பகுதி யில் உள்ள காய்கறி மார்க் கெட் முழுவதுமாக மூடப் பட்டு இருந்தது.

    மேலும் பஜாரில் அனைத்து ஜவுளிக்கடைகளும், மளிகைக்கடைகளும் அடைக்கப் பட்டு இருந்தன.

    சுமார் 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரி கள் தெரிவித்தனர்

    • மாநாட்டில் பங்கேற்க வியாபாரிகள் வேன், கார்களில் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
    • டவுன் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    வணிகர் தினத்தை யொட்டி இன்று ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர்.

    இதனையொட்டி இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைக்கும்படியும், மாநாட்டில் கலந்து கொள்ளும்படியும் வணிகர்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் இருந்து மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் வேன், கார்களில் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை டவுன் ரதவீதியை சுற்றிலும் அமைந்துள்ள கடைகளில் பெரும்பா லானவை அடைக்கப்பட்டு இருந்தது. டவுன் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பாளை மார்க்கெட் பகுதிகளிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியா பாரிகள் பெரும்பாலானோர் கடை களை அடைத்திருந்த னர். இதனால் மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    மாநகரில் பேக்கரி, பலசரக்கு, ஹார்டுவேர்ஸ் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மருந்து கடைகள் வழக்கம்போல் இயங்கின. பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம்போல் இயங்கியது.

    களக்காட்டில் புதிய பஸ் நிலையம், அண்ணாசாலை, பழைய பஸ் நிலையம், சேரன்மகாதேவி சாலை, கோவில்பத்து பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் அம்பை, வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, மானூர், முக்கூடல் உள்ளிட்ட பகுதி களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    ×