search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே 5-ந்தேதி ஈரோட்டில் விக்கிரமராஜா தலைமையில் வணிகர் உரிமை முழக்க மாநாடு- 5 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்
    X

    மே 5-ந்தேதி ஈரோட்டில் விக்கிரமராஜா தலைமையில் வணிகர் உரிமை முழக்க மாநாடு- 5 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி ஈரோட்டில் 40-வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படுகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சம் வணிகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி ஈரோட்டில் 40-வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படுகிறது.

    மாநாட்டுக்கு பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் வி.கோவிந்த ராஜுலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாடு தீர்மானங்களை பிரகடனப்படுத்துகிறார்.

    இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சம் வணிகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகிய 5 அமைச்சர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

    மாநாட்டில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. வ.உ.சி. விருதை அமைச்சர் முத்துசாமி வழங்குகிறார். வணிக செம்மல் விருதினை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழங்குகிறார். கல்வி ஊக்கத் தொகையை அமைச்சர் பி.மூர்த்தியும், நலிந்த வணிகர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலத் திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர்.

    வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் முதன் முறையாக இப்போது குறு-சிறு உற்பத்தியாளர்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக மாநாட்டு பந்தல் வளாகத்தில் 'எக்ஸ்போ' கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை 4-ந்தேதி அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திறந்து வைக்கிறார்.

    மாநாட்டை அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் ஓட்டல்கள், சங்க தலைவர் வெங்கடசுப்பு, மருந்து வணிகர் சங்க பொருளாளர் செல்வம், பாண்டிச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் சிவசங்கர், ஜெயந்திலால் ஜெலானி உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    மாநாட்டில் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சங்கத்தின் தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மண்டல தலைவவர் கே.ஜோதிலிங்கம் உள்ளிட்ட அனைத்து மண்டல, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டையொட்டி ஈரோட்டில் மிகப் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் மாநாட்டுக்கு வருவதால் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×