search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கான கால்கோள் விழா- விக்கிரமராஜா தலைமையில் நாளை நடைபெறுகிறது
    X

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கான கால்கோள் விழா- விக்கிரமராஜா தலைமையில் நாளை நடைபெறுகிறது

    • வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.
    • மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ந்தேதி, 40வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோடு, டெக்ஸ்வேலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதற்காக லட்சக்கணக்கான வணிகர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

    மாநாட்டு கால்கோள் விழா என்பது மகிழ்ச்சிக்குரியது. அதுவும் 40-வது வணிகர் தின வணிகர் உரிமை முழக்க மாநாடு என்பது அதன் பின்னனியில் மறைந்துள்ள 40 ஆண்டுகால பேரமைப்பின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வியத்தகு மாநாடு ஆகும்.

    40 ஆண்டுகால வேதனையை துடைத்தெறிந்து வணிகர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி முழக்கமிடும் மாநாடாக ஈரோடு மாநாடு நடைபெற இருப்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தமிழகத்தின் அனைத்து வணிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் எனும் பேருண்மையை எடுத்துக்காட்டும் மாநாடாக வணிகர் உரிமை முழக்க மாநாடு நடக்கும்.

    வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.

    மாநாட்டு பந்தல் கால்கோள்விழா நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாநாட்டுத்திடலில் நடைபெற உள்ளது. விழாவிற்கு பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்று பேச மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா நன்றி கூறுகிறார்.

    மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    கால்கோள் விழாவைத் தொடர்ந்து, மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கி ணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனையும் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×