search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union meeting"

    • வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் செல்வராஜா தலைமையில் வள்ளியூர் யூனியன் கூட்டம் வள்ளியூர் யூனியன்அலுவ லகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மக்கள் நல பணிகளின் நிலை குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் நல பணிகள் குறித்தும் பேசப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் செல்வராஜா தலைமையில் வள்ளியூர் யூனியன் கூட்டம் வள்ளியூர் யூனியன்அலுவ லகத்தில் நடைபெற்றது. துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, பொறியாளர்கள் கணபதி ராமன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பிலிப்ஸ், பொன்குமார், டெல்சி ஒபிலியா, தாய்செல்வி, ஜெயா, மகாலெட்சுமி, மல்லிகாஅருள், பாண்டித்துரை, ஜெயலெட்சுமி, அனிதா, அஜந்தா மற்றும் யூனியன் பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மக்கள் நல பணிகளின் நிலை குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் நல பணிகள் குறித்தும் பேசப்பட்டது.

    • விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி தலைமையில் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத் தில் ஆமத்தூர், குந்தலப்பட்டி, வள்ளியூர், பட்டம்புதூர், தம்ம நாயக்கன்பட்டி, சின்னவாடி, வி.முத்துலிங்காபுரம், தாதம்பட்டி, வச்சக்காரப்பட்டி, கன்னிசேரி புதூர், ஒண்டிப் புலிநாயக்கனூர், கட்டனார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள யூனியன் தொடக் கப்பள்ளியில் உள்ள சமையலறைகளை தலா ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் மன்னார்குடி, சத்திரரெட்டியபட்டி, மற்றும் பட்டம்புதூர் கிராமங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களை ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் அமைப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.
    • குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சேர்மன் இசக்கி பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆரோக்கிய எட்வின், ஸ்டீபன் ஜோசப் ராஜா, சங்கரலிங்கம், மீனா சுப்பையா, செந்தூர் பாண்டியன், முத்துலட்சுமி, லட்சுமி, கிறிஸ்டி, முருகேசன், ஜெபக்கனி செந்தில்ராஜ், செல்வ பிரேமா, செல்வி இலக்கண், அகஸ்டின் கீதாராஜ், பிரேமா எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பகுதிகளுக்கு தேவைப்படும் கோரிக்கைகளை குறித்து பேசினர்.

    இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒரு பெரிய வாரச்சந்தை இலங்குளம், தளபதி சமுத்திரம், சங்கனாங்குளம், இறைப்புவாரி, ராஜாக்கள்மங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அமை ப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள் வாங்குவதற்கும், மழைக்கால வேலையாக தேவைப்படும் குளங்களில் புதியமடை, மறுகால் கட்டுவது, மதகுகளை சீரமைப்பது, தண்ணீர் செல்லும் கால்வாய்களை அகலப்படுத்துவது என்றும், 27 ஊராட்சிகளிலும் குடிநீர் தேவைக்காக அவசரகால ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய பொறியாளர்கள் சபரிகாந்த், பாக்யராஜ், மீனாட்சி, ஒன்றிய மேலாளர் மலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
    • கவுன்சிலர்கள் கூறிய பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது

    தென்காசி:

    கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் கவுன்சி லர்கள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். முடிவில் ரூ. 1.22 கோடி மதிப்பீட்டில் கவுன்சிலர்கள் கூறிய பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி யூனியன் கூட்டம் பெயரளவில் நடந்தது.
    • பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் சிவலிங்கம் பங்கேற்ற மறுப்பு தெரி வித்து பார்வையாளர் அமரும் இடத்தில் உட்கார்ந்தார்.

    கூட்டம் தொடங்கிய வுடன் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் பேசுகையில், 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தற்போ தைய திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையாவின் மனைவி கமலா தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

    இதற்கு முழு ஆதாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பதிவேட்டில் உள்ளது. அவர் கடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக போலியாக கையொப்பம் பெற்றுள்ளீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

    அவருக்கு ஆதரவாக துணை சேர்மன் சிவலிங்கம், காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆகியோர் போலி கையொப்பம் தவறா னது என்று தெரிவித்தனர்.அப்போது வெளியே நின்றிருந்த சிலர் கோஷ மிட்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆவேசமாக சேரை எடுத்து வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

    அவரை தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் வெளி நடப்பு செய்தனர். பின்னர் 5 கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் மட்டுமே பங்ேகற்ற கூட்டரங்கில் சிறிது நேரம் விவாதம் நடந்தது. இதையடுத்து பெயரளவில் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் முடிந்தது.

    மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டிய யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்களின் நடவடிக்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்காமல் தேவையில்லாத விவாதங்களை கூட்டத்தில் எழுப்பி பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும் வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணாதேவி பாலசுப்பிரமணியன், விஜயபாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லிபுஷ்பம், உதவி பொறியாளர் மார்கோனி, மேலாளர் முனியப்பன், ஓவர்சீஸ் முத்துமாரி மற்றும் அலுவலர்கள் முத்துகுமார், சுரேஷ், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிங்கிலிப்பட்டி மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் ராதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிங்கிலிப்பட்டி மணிகண்டன், கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், சத்தியகலா தீபக் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், 2023-24-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து போகநல்லூரில் ரூ.4.50 லட்சத்தில் மயான நன்மை கூடம் அமைத்தல், புன்னையாபுரம் ஊராட்சி சிங்கிலிபட்டி தெற்கு தெரு, நாயக்கர் தெரு, முத்தாலம்மன் கோவில் மற்றும் புதுக்காலனியில் ரூ.17.50 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், புன்னையாபுரம் முந்தல் சாலையில் ரூ.8.75 லட்சத்தில் வாறுகால் அமைத்தல், திரிகூடபுரம் ஊராட்சி ராமகிருஷ்ணர் தெருவில் ரூ.4.23 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், பாத்திமா நகர் வடக்கு தெருவில் ரூ.6.86 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், காசிதர்மம் சுடுகாட்டில் எரிமேடை அமைத்தல், குலையனேரி தேவர் வடக்கு தெருவில் ரூ.10.31லட்சத்தில் சிமெண்டு தளம் அமைத்தல், சங்குபுரம் அப்துல் கலாம் நகரில் ரூ.4.32 லட்சத்தில் வாறுகால் அமைத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.
    • கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.

    களக்காடு:

    களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.

    ஆணையாளர்கள் அப்துல்லா, மணி, துணை தலைவர் விசுவாசம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கவுன்சிலர்கள் ஜார்ஜ் கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, சங்கீதா, விஜய லெட்சுமி, வனிதா, தளவாய் பாண்டியன், மேலாளர் சங்கரன் மற்றும் யூனியன் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    யூனியன் ஊழியர் முத்தரசன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் செங்களாகுறிச்சி, கோவிலம்மாள்புரம், புலியூர்குறிச்சி, வடுகச்சி மதில், படலையார்குளம், தேவநல்லூர், செங்களா குறிச்சி, சிங்கிகுளம் பஞ்சாயத்துகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கல்லடிசிதம்பரபுரத்தில் தடுப்பு சுவர் கட்டுவது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதனைதொடர்ந்து கவுன்சிலர் தமிழ்செல்வன் பேசுகையில், டெங்கு பணியாளர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அவர்களை கண்காணிப்பது யார்? ஜெ.ஜெ.நகர், படலையார்குளம் மக்களுக்கு பட்டா வழங்கவும், சத்திரம் கள்ளிகுளத்தில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை திறக்கவும், 16 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் களக்காடு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் புதிய அணை கட்டவும், சில் ஓடை, பெரிய ஓடைகளை அளவீடு செய்து, பாதை அமைக்கவும், சிதம்பராபுரம் வழியாக அரசு பஸ்கள் இயக்கவும், தலையணையில் உள்ள தென்வீதிக்காலை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.

    இதற்கு பதிலளித்த ஆணையாளர் மணி, அவர்கள் பணி செய்ததற்கு ஏற்றாற் போல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கவுன்சிலர் கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்-வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் வரவேற்றார்.

    இதில் பா.ஜ.க. கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், மக்கள் திட்ட பணிகள் எதுவும் இந்த கூட்டத்தில் இடம் பெறவில்லை. செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பணிகள் நடந்தால் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றார்.

    பா.ஜ.க. கவுன்சிலர் கதிரவன் பேசுகையில், போகலூர் யூனியனில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். நிதி ஆதாரத்தை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளித்து பணிகள் வழங்க வேண்டும் என்றார். அதற்கு துணைத்தலைவர் பூமிநாதன் பதில் அளிக்கையில், இது குறித்து அனைவரும் பேசி முடிவு எடுப்போம் என்றார்.

    பின்பு பா.ஜ.க. கவுன் சிலர்கள் 3 பேரும் இந்த அஜெண்டாவில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் இடம் பெறவில்லை.

    ஆகை யால் இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி வெளி நடப்பு செய்தனர். பின்பு மற்ற கவுன்சிலர்களில் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது:-

    பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் சாலை வசதிகள், பள்ளிகளில் சுத்திகரிப்பு குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சுகாதார வளாகங்கள் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    சரிவர மழை பெய்யாததால் போகலூர் ஒன்றியத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்றுஎம். எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோரது பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். யூனியன் மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் யூனியன் கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்தார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா. கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர் பார்வதி பேசுகையில், மேலக் கிடாரம் கிராமத்தில் கண்மாய் கரையை சேதப் படுத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையாளர் கண்மாய் கரையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

    கவுன்சிலர் மாய கிருஷ்ணன் பேசுகையில், ஓரிவயலுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை சரி செய்ய நிதி ஒதுக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஜெயச்ச ந்திரன் பேசுகையில், மீனங்குடி, கருங்குளம் கடுகு சந்தை ஆகிய ஊராட்சிகளில் உள்ள தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனங்குடி கிராமத்தில் இருந்து அம்மன் கோவில் செல்லும் சாலையை மெட்டல் சாலையாக அமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் அம்மாவாசி:- சிக்கல் பாண்டியன் ஊரணியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி:- வாலிநோக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் பிச்சை:- ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலில்:- ஒப்பிலான் கிராமத்தில் இருந்து செல்லும் கடற்கரை சாலை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையூர் கிராம பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் வசந்தா கதிரேசன்:- மாரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் ராஜே ந்திரன்:- வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உசவன் குளம் கிராமத்தில் இருந்து வாலிநோக்கம் செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர்புரம் சாலை முதல் ராஜாக்கள் பாளையம் வரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.

    • பரமக்குடி யூனியன் கூட்டம் நடந்தது.
    • பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா முன்னிலை வகித்தனர். மேலாளர் லட்சுமி வரவேற்றார். கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் கேட்கப்பட்டுள்ளது. யூனியன் அலுவலகத்தில் அதற்கான இடமில்லை.

    அறிவு சார் மையத்தை பரமக்குடி நகரின் மையப் பகுதியான பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், எமனேசுவரம் பகுதி, சந்தை கடை பகுதிகளில் அமைத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் மையப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். உடனே அனைத்து கவுன்சிலர்களும் அறிவுசார் மையத்திற்கு இடம் வழங்க முடியாது என்று ஏக மனதாக அந்த தீர்மானத்தை நீக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நீக்கப்பட்டது.

    துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால் நிதி ஒவ்வொரு மாதமும் குறைவாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யூனியனில் இருக்கும் நிதியையும் எங்கள் அனுமதி இல்லாமலேயே மாவட்ட நிர்வாகம் வங்கி கணக்கில் எடுத்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கினால்தான் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆகவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

    • பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    • தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, துணை தலைவர்கள் ராமசாமி, மூர்த்தி, சுப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார்.

    பேரூராட்சி பணியாளர்கள் சங்க தலைவர் பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார். இதில் 15 பேரை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது, அரசாணை எண் 115, 139, 152-ல் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தல பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும், வருகிற 9-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகள் உட்பட 3 அரசாணையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

    ×