search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dissatisfaction"

    • திருப்புல்லாணி யூனியன் கூட்டம் பெயரளவில் நடந்தது.
    • பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் சிவலிங்கம் பங்கேற்ற மறுப்பு தெரி வித்து பார்வையாளர் அமரும் இடத்தில் உட்கார்ந்தார்.

    கூட்டம் தொடங்கிய வுடன் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் பேசுகையில், 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தற்போ தைய திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையாவின் மனைவி கமலா தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

    இதற்கு முழு ஆதாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பதிவேட்டில் உள்ளது. அவர் கடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக போலியாக கையொப்பம் பெற்றுள்ளீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

    அவருக்கு ஆதரவாக துணை சேர்மன் சிவலிங்கம், காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆகியோர் போலி கையொப்பம் தவறா னது என்று தெரிவித்தனர்.அப்போது வெளியே நின்றிருந்த சிலர் கோஷ மிட்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆவேசமாக சேரை எடுத்து வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

    அவரை தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் வெளி நடப்பு செய்தனர். பின்னர் 5 கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் மட்டுமே பங்ேகற்ற கூட்டரங்கில் சிறிது நேரம் விவாதம் நடந்தது. இதையடுத்து பெயரளவில் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் முடிந்தது.

    மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டிய யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்களின் நடவடிக்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்காமல் தேவையில்லாத விவாதங்களை கூட்டத்தில் எழுப்பி பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ×