search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க கூட்டம்"

    • எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும்.
    • அவுட் சோர்சிங் முறையில் பணிபுரியும் ஊழியர்களை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களாக மாற்றம் செய்திட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் சேரலநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும்.

    தமிழகத்தில் 186 நம்பிக்கை மையங்களை, முதற்கட்ட பரிசோதனை மையங்களாக மாற்ற மாட்டோம் என தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும். அவுட் சோர்சிங் முறையில் பணிபுரியும் ஊழியர்களை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களாக மாற்றம் செய்திட வேண்டும்.

    நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்றுகொண்டப்படி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதை போல், ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இறுதியில் மாவட்ட பொருளாளர் சிவசண்முகம் நன்றி கூறினார்.

    • 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வுதியம் வழங்க வேண்டும்.
    • ஓய்வூ தியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டம் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் 4 சதவீத அகவிலைபடியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அறிவித்து வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தல், 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்குறுதியாக 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வுதியம் வழங்க வேண்டும்.

    பங்களிப்பு ஓய்வூ தியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவித்த கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டு தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    முன்னதாக ஒடிசா மாநிலத்தில் ெரயில் விபத்து காரணமாக உயிரிழந்த 258 பேருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்து கொண்டது.

    இந்த கூட்டத்திற்கு தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார்.

    மேலும் சதாசிவம், துணை தலைவர் ஆறுமுகம், தணிக்கையாளர் மகளிர் அணி செயலாளர் ராசம்மாள், ரங்கநாதன், நாகசேகரன், குமரவேல், ராஜேந்திரன், வேணு கோபால், சையத் பிரதோஷ், மகாலிங்கம், முருகேசன், ராஜன், கிருஷ்ணன், நாராயணராவ், தேவி, சிந்தாமணி, மணி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பொருளாளர் ஜெயபால் நன்றி கூறினார். 

    • அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
    • ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்.

     பல்லடம் :

    தமிழக நான்கு சக்கர மற்றும் கனரக வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. பல்லடம் பகுதி சங்கத் தலைவர் சக்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் முனியப்பன், செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வாகனம் பழுது பார்ப்போருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். பல்லடத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜா, துணைச்செயலாளர்கள் முருகன், சுபாகர், மாவட்ட பிரதிநிதி மாரிராஜா, மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலாடி அருகே ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஐசக் நியூட்டன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன், பொருளாளர் செந்தில் பொன் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நிர்வாகி ஜெயபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல பொறுப்பாளர் சக்தி முருகன் நன்றி கூறினார்.

    • ஓய்வு பெற்ற வருவாய் துறை அலுவலர்கள் சங்க கூட்டம் அரூரில் நடைபெற்றது.
    • மாநில நல்லாசிரியர் விருது இந்த ஆண்டு சிறந்த நடுநிலைப்பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியர் முருகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    அரூர்,

    தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய் துறை அலுவலர்கள் சங்க கூட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகேஉள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதற்கு தலைவர் தங்கராஜி தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமானுஜம் வரவேற்புரை ஆற்றினார். ஏடிஎஸ்பி ராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், மாணிக்கம், நடராஜன், அரூர் வட்டாட்சியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் சென்ற ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது இந்த ஆண்டு சிறந்த நடுநிலைப்பள்ளிக்கான விருது பெற்ற ராயப்பன் கொட்டாய் நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட பொருளாளர் பிரேமா, நிர்வாகிகள் ராதா, லட்சுமி, பிரபா, வசந்தாபாய், ஜீனத், விஏஓ மூர்த்தி, பதிவறை எழுத்தர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகி கோபால், சேஷாத்திரி, வேடியப்பன், ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜெயமணி, குமரேசன், முடிமன்னன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.
    • அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமாநல்லூரில் நடந்தது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர்வடக்கு ஒன்றியம்அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமா நல்லூரில்நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.இதில் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் பந்தல் அமைப்பது மற்றும் மே 5ந்தேதி வணிகர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.

    இதில் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் சரவணன், ஒருங்கிணை ப்பாளர் பாலா, ஆலோசகர் மூர்த்தி, துணைத் தலைவர் வேலுச்சாமி, துணைப் பொருளாளர் சண்முகம் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் கொண்டப்பன், கோபால், ஜெயக்குமார், சங்கமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மசாஜ் தொழிலாளர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஏ.ஐ.டி.யூ.சி .மசாஜ் தொழிலாளர்கள் சங்க ஆண்டு பேரவை கூட்டம் மாதேஷ் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மசாஜ் தொழிலாளர்கள் சங்கம் ஆண்டு பேரவை கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர்மணி கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

    சங்கத்தின் கவுரவ தலைவர்,வழக்கறிஞர் மாதையன்,முன்னாள் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத்தலைவர் மாதேஸ்வரன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

    ஆண்டு பேரவை கூட்டத்தில் ஒகேனக்கல் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்க தலைவராக மாதேஷ்,துணைத் தலைவர்களாக விஜயகாந்த், மாது ,செயலாளராக கோ.சந்திரசேகர்,துணை செயலாளராக பாரதிராஜா, பொருளாளராக பாபு மற்றும் சங்கத்தின் கௌரவத் தலைவராகவும், சட்ட ஆலோசகராகவும் வழக்கறிஞர் மாதையன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் மசாஜ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்க வேண்டும்,மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்,மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜெயபால் வரவேற்று பேசினார். துணைத் தலைவர்கள் சதாசிவம், கந்தசாமி முன்னிலை ஏற்று பேசினர்.

    புதிய மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை தாமதமின்றி காத்திருக்க வைக்காமல் உடனடியாக வழங்கிடவேண்டும். ஓய்வூதியர்,குடும்ப ஓய்வூதியர் வாங்கும் ஓய்வூதிய விவரங்களை ஓய்வூதிய புத்தகத்தில் பதிவு செய்து வழங்க மாவட்ட கருவூல அலுவலர் ஆவண செய்ய வேண்டும்.

    ஓய்வூதியர்,குடும்ப ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியை பெற்றுக் கொள்ள நாமினேட் செய்து சமர்ப்பிக்கும் படிவங்களை தாமதமின்றி ஏற்று ஒப்புதல் வழங்கிட வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். மருத்துவப் படி ரூ.1000-மாக உயர்த்தி வழங்கவேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு ஆகும் செலவினங்களை முழுமையாக ஏற்கவேண்டும்.

    ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் இறந்தால் ஈமச்சடங்கிற்கு முன்பணமாக ரூ.25000 வழங்கவேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்ட முடிவில் ஜெயபால் நன்றி கூறினார்.

    • பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    • தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, துணை தலைவர்கள் ராமசாமி, மூர்த்தி, சுப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார்.

    பேரூராட்சி பணியாளர்கள் சங்க தலைவர் பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார். இதில் 15 பேரை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது, அரசாணை எண் 115, 139, 152-ல் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தல பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும், வருகிற 9-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகள் உட்பட 3 அரசாணையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

    • சங்கத்தின் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.

    இதில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022-க்கான அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் செலவுகளை முழுமையாக ஏற்று திரும்ப வழங்க வேண்டும். இருதய அறுவை சிகிச்சை போன்ற செலவுகளுக்கு ஆகும் மொத்த செலவுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் ஜெயபால், துணை தலைவர்கள் சதாசிவம், தங்கவேல், கந்தசாமி, குணசேகரன், சி.எம்.ெஜயபால், தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக விவசாயிகளை காப்பாற்ற நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்
    • விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருச்சி,

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகரில் நடந்தது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள் திருச்சி மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, புதுக்கோட்டை சேகர், பரமசிவம், மாநில செயலாளர்கள் மகேந்திரன், மனோகரன், ஜான் மில்க்யூ ராஜ், தியாகு, பாண்டியன், பொருளாளர் கார்த்திகேயன், சட்ட ஆலோசகர்கள் முத்துகிருஷ்ணன், முத்துச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக விவசாயிகளை காப்பாற்ற நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நாட்டிலுள்ள 29 மாநிலங்களைச் சேர்ந்த 85 விவசாயிகளை ஐதராபாத்துக்கு வரவழைத்து பேசினார்.

    இதில் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திய தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தெலுங்கானாவில் 18 வயது முதல் 59 வயதுக்குள் விவசாயி இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதே போன்று தமிழகத்திலும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விவசாயிகளின் உரிமையையும், நன்மையையும், காப்பாற்ற டெல்லி சென்று போராட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பார்த்திபன் பொருளாளர் குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    விசைத்தறி தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை 16-ந்தேதி, கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி வளாகத்தில், நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×