search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்  ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
    X

    தருமபுரியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

    • சங்கத்தின் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.

    இதில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022-க்கான அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் செலவுகளை முழுமையாக ஏற்று திரும்ப வழங்க வேண்டும். இருதய அறுவை சிகிச்சை போன்ற செலவுகளுக்கு ஆகும் மொத்த செலவுகளை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் ஜெயபால், துணை தலைவர்கள் சதாசிவம், தங்கவேல், கந்தசாமி, குணசேகரன், சி.எம்.ெஜயபால், தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×