search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர் புகார்"

    • ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கவுன்சிலர் கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்-வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் வரவேற்றார்.

    இதில் பா.ஜ.க. கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், மக்கள் திட்ட பணிகள் எதுவும் இந்த கூட்டத்தில் இடம் பெறவில்லை. செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பணிகள் நடந்தால் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றார்.

    பா.ஜ.க. கவுன்சிலர் கதிரவன் பேசுகையில், போகலூர் யூனியனில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். நிதி ஆதாரத்தை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளித்து பணிகள் வழங்க வேண்டும் என்றார். அதற்கு துணைத்தலைவர் பூமிநாதன் பதில் அளிக்கையில், இது குறித்து அனைவரும் பேசி முடிவு எடுப்போம் என்றார்.

    பின்பு பா.ஜ.க. கவுன் சிலர்கள் 3 பேரும் இந்த அஜெண்டாவில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் இடம் பெறவில்லை.

    ஆகை யால் இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி வெளி நடப்பு செய்தனர். பின்பு மற்ற கவுன்சிலர்களில் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது:-

    பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் சாலை வசதிகள், பள்ளிகளில் சுத்திகரிப்பு குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சுகாதார வளாகங்கள் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    சரிவர மழை பெய்யாததால் போகலூர் ஒன்றியத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்றுஎம். எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோரது பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். யூனியன் மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    ×