என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "student protest"
- பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக கூறி போராட்டம்.
- கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை- ஆளுநர் குற்றச்சாட்டு
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திருவனந்தபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த ஆளுநர் ஆரிஃப் முகமது கான் காரில் இருந்து கீழே இறங்கி ஆவேசமாக பேசினார். அப்போது கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், "இது முதல்வரின் சதி. எனக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புகிறார். அரசியலமைப்பு சீர்குலைவது போல் தெரிகிறது. அரசியலமைப்பு இயந்திரத்தின் சீர்குலைவை அனுமதிக்க முடியாது" என்றார்.
பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது போலீசில் புகார் செய்தனர்.
- டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை காதலித்து வந்தார்.
வாலிபர் மாணவியை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் வாலிபரை கண்டித்தனர்.
இருப்பினும் வாலிபர் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்ததால் வாலிபர் மீது நேற்று மாலை வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாணவி தனது பெற்றோருடன் தெற்கு போலீஸ் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த டி.ஐ.ஜி முத்துசாமி மாணவி பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டதை கண்டு தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். மாணவியை சமாதானம் செய்தனர். பின்னர் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
- மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மணிப்பூர்:
மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர் களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் மணிப்பூரில் உள்ள கவுபால் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதில் பா.ஜனதா கட்சி அலுவலகம் எரிந்தது. மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும், வாகனங்களையும் சிலர் அடித்து நொறுக்கினார்கள். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பிரேன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 2 மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. "குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவர் தற்போது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மூத்த போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். அவர் மணிப்பூரில் வன்முறையை தடுக்க அந்த மாநிலத்தில் பணியாற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
- வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்குச் சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டிய பிறகு, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. அதை கேள்விப்பட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியதும், அதை அந்த வாலிபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அந்த வாலிபரின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஒரு மாணவியை தவிர, பிற மாணவிகள் ஆபாசமாக வீடியோ எடுக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் நல இயக்குனர் அரவிந்த் சிங் காங் மறுத்தார்.
பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவி மனிஷா குலாதி, பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
மேலும், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
- மாணவர்கள் போராட்டத்தால் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் பூட்டினார்
- சாலை மறியலில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள இச்சடி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கும்முப்பட்டி, இச்சடி, முள்ளுர், முக்காணிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இச்சடி முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் துணை வட்டாட்சியர் கவியரசு, ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, ஆலங் குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் செம்பட்டிவிடுதி போலீசா ர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த கடையை மூடுவதாக கூறி தாசில்தார் மற்றும் அதிகாரிகள முன்னிலையில் கடைக்கு பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பள்ளியில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் பாடம் கற்பித்து வருகிறார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தால் இந்த பள்ளிக்கு ஒருசில ஆசிரிய-ஆசிரியைகள் மட்டுமே வந்து சென்றனர்.
இன்று அந்த பள்ளியில் மாதிரி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது வகுப்பறைகளுக்கு செல்லாமல் பள்ளிவாசல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. எங்கள் பள்ளிக்கு புதிதாக ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களே வரவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரிய- ஆசிரியைகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
இதனால் மாணவிகள் அனைவரும் இன்று நடக்க இருந்த மாதிரி தேர்வை புறக்கணித்தனர்.
போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மாணவிகள் போராட்டம் நடத்துவது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினசெல்வி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் வகுப்பை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று பல்வேறு கோரிக்கைகளை வலுயுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள், கல்லூரியில் கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும்.
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். இலவச பஸ் பயண அட்டை மற்றும் தரமான கல்வியை வழங்கிட வேண்டும். அரசாணை 92-யை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி உள்ளது. இங்கு 125 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 2012-13-ம்ஆண்டு தரம் உயர்த்துவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு பணமும் கட்டப்பட்டது. ஆனால் அப்பள்ளி இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. இந்தாண்டு 2018-19ம் கல்வியாண்டிலாவது தரம் உயர்த்தப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான அரசாணையில் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுவாவில் 2 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டது.
இதனால் மணப்பாறை பகுதியில் தரம் உயர்த்தப்படாத பள்ளிகளை தரம் உயர்த்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பண்ணப்பட்டி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை தரம் உயர்த்தப்படாததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இது குறித்த தகவல் அறிந்ததும் புத்தாநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தி.முக. மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். பெற்றோர்கள் மற்றும் கிராமமக்கள் கல்வி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்று போலீசார் தெரிவித்தும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
மேச்சேரி:
சேலம் மாவட்டம், மேச்சேரியில் காவேரி பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு பல வழித்தடங்களில் பேருந்துகள் இயங்குகின்றனர்.
இதல் ஒரு பேருந்து காடையாம்பட்டியை அடுத்த கணவாய் புதூர் பகுதியில் இருந்து தீவட்டிபட்டி, பூசாரிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, காருவள்ளி, மரகோட்டை, காமனேரி வழியாக கல்லூரிக்கு செல்கிறது.
இந்த வழியாக ஒரு பேருந்து மட்டும் செல்கிறது. ஆகவே இந்த பேருந்தில் 98 மாணவர்கள் கஞ்சநாயக்கன்பட்டி வரை பேருந்தில் நிற்க வழி இல்லாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கூடுதலாக பஸ் விட கோரி கல்லூரி பேருந்தை சிறை பிடித்தனர்.
பஸ் கட்டணம் இந்த மாதத்திற்குள் கட்டவில்லை என்றால் ரூ.10 அபராதம் போடுவதாக மிரட்டல் விடுவதாக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். இதே போல் கடந்த 1 மாதம் முன்பு நடந்தது. அதற்கு நிர்வாகம் உடனே கூடுதல் பஸ்கள் விடப்படும் என்று கூறியது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினர். தகவல் தீவட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்