search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுநிலைப்பள்ளி"

    • விஜய்வசந்த் எம்.பி.யிடம் பள்ளி நிர்வாகிகள் மனு
    • எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 360 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்தை குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சமீனுதீன் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குளச்சல் அரசு நடுநி லைப்பள்ளி சுமார் 121 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 360 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் அங்கன்வாடி மையம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பகல் நேர பாதுகாப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    ஆனால் பள்ளி குழந்தை களின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகள் மழைக்காலங்களில் ஒழுகி காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மைய பல்நோக்கு மைய கட்டிடத்தில் தற்காலிகமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அங்கு நிரந்தரமாக வகுப்புகள் நடத்த முடியாது.

    இந்த பள்ளியில் தான் குருந்தன்கோடு வட்டார வள மையம் சார்பில் குளச்சல் வட்டார மாணவ, மாணவிகளுக்கு அரசு நடத்தும் பல்வேறு போட்டிகள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. குளச்சல் சரகத்தில் விசாலமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    கொரோனா தாக்குதலுக்குப்பின் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட நடுத்தர, ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அரசு பள்ளிக் கூடங்களைத்தான் நம்பி உள்ளனர். தமிழக அரசின் சிறப்பு திட்டமான ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் செயல்பட அனைத்து வகையிலும் இந்த பள்ளி தகுதியானது. ஆனால் கட்டிடம் ஒழுகுவதால் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டால் ஏழை பெற்றோர்கள் பிள்ளைகளை இங்கு சேர்ப்பர். பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும். எனவே தாங்கள் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து பள்ளிக்கு 12 வகுப்பறை கட்டிடம் கட்டி தருமாறு ஏழை பெற்றோர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலமேடு அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பூமிபூஜை நடந்தது.
    • அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலையபட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.82 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வள்ளி, பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், வாட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெஷிந்தா, தலைமை ஆசிரியர் ஞானசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜா, இல்லம் தேவி கல்வி ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர், ஒப்பந்ததாரர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலைய பட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    • நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை இடத்தில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலையில் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    12-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில் வகுப்பறையில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் நெருக்கடியாக அமர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளியின் சமையல் அறை அருகே சேதமான ஓட்டு மேற்கூரை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7ம் வகுப்பறை களை இடித்து அப்புறபடுத்தி காலி இடமாக இருந்து வந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் யூனியன் பொறியாளர் மேற்பார்வையில் பள்ளி விடுமுறை நாளில் கழிப்பறை கட்ட குழி தோண்டி உள்ளனர்

    இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மேலாண்மை குழு தலைவர் கலா கூறுகையில், இப்பள்ளி யில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் வேளையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 6 மற்றும் 7-ம் வகுப்பு கட்டிடம் அனுமதி பெற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வகுப்பறை பற்றாக்குறை உள்ளது.

    இதனால் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை மற்ற வகுப்பறை கட்டிடத்தில் அமர வைத்து பாடம் நடந்து வரும்நிலையில் சமையல் அறை அருகிலே விடுமுறை நாளில் கழிப்பிடம் கட்ட யூனியன் அதிகாரிகள் குழி தோண்டி உள்ளனர். காலியான பள்ளி இடத்தில் கான்கிரீட் கட்டிட வகுப்பறை கட்டி மாணவர்களில் இடநெருக்கடியை போக்க மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×