search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road construction work"

    • மண்சாலையும் மழை நீரில் அடித்து சென்றது
    • வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 14 வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து இறந்தனர்.

    அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

    தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் அல்லேரியில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர்.

    அப்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்திற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

    இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறை யினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்து. அதன்படி வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அளவிடும் பணிகள் முடிந்து வனத்துறைக்கு இடத்தினை வழங்கினர். இதன்பின் வனத்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் கடந்த மாதம் நடந்தே மலைப்பகுதிக்கு சென்று சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்.

    கடந்த 4 மாதங்களாக நடந்துவரும் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது மண் சாலைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

    பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து, காயங்களுடன் செல்வது தொடர்கதையாக நடக்கிறது. எனவே மலை கிராம மக்களின் நலன் கருதி மண் சாலையையாவது சீரமைத்து தர வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • திருச்சுழி அருகே நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி-மானூர் இடையே யான 3 கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இங்கு புதிய சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சரின் 2022-23 கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    அதனடிப்படையில் தற்போது நரிக்குடி - மானூர் இடையிலான சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடைய உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறி யாளர் கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தார் சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் பிரபா, சாலை ஆய்வாளர் சுரேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்ணன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதிய சாலை அமைக்கும் பணிகள் 20 நாட்களில் தொடங்கப்படும்
    • சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம், சாத்தமங்க லம், சருகுவலையப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆற்று ஓரத்தில் மண் சாலை உள்ளது. இங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயி கள் சில நாட்க ளுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியிடமும், மதுரை மாவட்ட கலெக்ட ரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகி யோர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய சாலைகளை அமைப்பதற்கு ஏதுவாக பாதை உள்ளதா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கூறுகையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்னும் 20 நாட்களில் தொடங்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது மேலூர் நகர் தலைவர் முகமது யாசின், ஒன்றிய செயலா ளர்கள் பாலு, ராஜராஜன், மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, வேலாயுதம், பொது குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதாஅப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மங்காவரம் முதல் அப்பாவரம் வரையிலான சாலை, ரூ.34 லட்சம் மதிப்பில் பன்பாக்கம் காலனி சாலை அமைக்கப்படுகிறது.
    • தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் கவரப்பேட்டை தெலுங்கு காலனி சாலை, ரூ.37 லட்சத்தில் கவரப்பேட்டை ரெயில்வே நிலைய சாலை, ரூ.43 லட்சத்தில் பெருவாயல் ஊராட்சி நயினாங்குப்பம் சாலையும்,ரூ.1கோடியே 8 லட்சத்தில் மங்காவரம் முதல் அப்பாவரம் வரையிலான சாலை, ரூ.34 லட்சம் மதிப்பில் பன்பாக்கம் காலனி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செய லாளர் கே.இ. திருமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், ஜெயந்தி கெஜா, தி. மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுமரன், வட்டார வளர்ச்சி அலுவலக ஒன்றிய பொறியாளர்கள் மணிமேகலை, செல்வராஜ் கலந்து கொண்டனர்.

    • 10 ஆண்டுகளாக தென்புறம் உள்ள இணைப்பு சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.
    • அப்பணிகள் விரைவாக நடைபெற்று போக்கு வரத்து நெரிசல் குறைக்க ப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி :

    தூத்துக்குடி 3-ம் கேட் ெரயில்வே மேம்பாலம் தென்புறம் உள்ள இணைப்பு சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வில்லை. அப்பகுயில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ரெயில்வே மேம்பாலம்

    தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலமானது கடந்த 2010-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் அன்றைய துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்றைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், அன்றைய தி.மு.க மாவட்ட செயலாளர் என். பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

    ஆனால் 10 ஆண்டுகளாக தென்புறம் உள்ள இணைப்பு சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆன பின்னர் நான், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரு டன் கலந்து ஆலோசித்து இணைப்பு சாலைகள் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டேன்.

    போக்குவரத்து நெரிசல்

    மாவட்ட நிர்வாகமும் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து, தற்போது தென் பகுதியில், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு தமிழக அரசின் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு தற்போது சாலை அமைக்கும் பணிகளும், மேலும் அப்பகுதி யில் உள்ள மின் கம்ப ங்கள் மாற்றி யமைக்கப் பட்டு, புதிய தார் சாலைகள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. அப்பணிகள் விரைவாக நடைபெற்று போக்கு வரத்து நெரிசல் குறைக்க ப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரூராட்சி தலைவர் ஆய்வு
    • பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட் பட்ட குந்தாணிமேடு பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சாலை அமைக்கும் பணிகளை உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் ரேவதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    புதிய சாலை, ரூ.6.67 கோடி திட்டம், பயன்பாட்டிற்கு

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திக்குப்பட்ட பகுதிகளில் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், ரூ.6.67 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்த ஒரு திட்டமானாலும் உடனடியாக மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதில் முழு கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம்,மடவிளாகம் பகுதியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில் ரூ.90.84 லட்சத்தில் ரங்காம்பாளையம் முதல் நாமக்காரன்பாளையம் வரையிலும், சிவன்மலை ஊராட்சியில் ரூ.1.06 கோடியில் அரசம்பாளையம் முதல் சிவகிரிகோவில்பாளையம் வரையிலும், ரூ.40.97 லட்சத்தில் சிவன்மலை- வேலாயுதம்பாளையம் சாலை முதல் கோவில் பாளையம் சாலை வரையிலும், பாப்பினி ஊராட்சியில் ரூ.57.47 லட்சத்தில் ஈரோடு-தாராபுரம் சாலை முதல் மடவிளாகம் வழியாக நாட்டார்பாளையம் கரியகாட்டுவலசு வரையிலும், வீரணம்பாளையம் ஊராட்சியில் ரூ.88.25 லட்சத்தில் ஈரோடு-தாராபுரம் சாலை முதல் படியாண்டிபாளையம் வழியாகசத்திரவலசு படியாண்டிபாளையம் ஆதி திராவிடர் காலனி வரையிலும்உள்ளிட்ட காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.67 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசு, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி வரதராஜ், காங்கயம் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணைபிரகாஷ், காங்கயம் நகர செயலாளர் வசந்தம் நா.சோமலையப்பன், காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி, காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 12.60 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

    செய்யாறு:

    செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மலைவையாவூர்- திருப்பதி தாங்கள் இடையே ரூ.1 கோடியே 11 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் வழக்கறிஞர் புரிசை எஸ்.சிவகுமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து சின்ன செங்காடு மற்றும் செங்காடு ஆகிய கிராமங்களில் 12.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார், திராவிட முருகன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தார்சாலையினை சீரமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
    • விழாவில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் மாணிக்கராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சுரண்டை ரோடு வாய்க்கால் பாலம் முதல் பெரியகுளம் கரை, வடக்கு சிவகாமிபுரம் நாடார் தெரு, வணிகர் கீழத்தெரு மற்றும் 2-நம்பர் ரோடு ஆகிய பகுதிகளில் பழுதடைந்த தார்சாலையினை சீரமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் மாணிக்கராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் முன்னிலையில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோடிஸ்வரன், மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், இசக்கிராஜ், விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்வி ஜெகதீசன், சாமுவேல்துரைராஜ், பொன்செல்வன் மற்றும் ஜெகதீசன், செல்வன், ராஜாமணி, தெய்வேந்திரன், அறிவழகன், கணேசன், சுப்பிரமணியன், பால்துரை, ராமரத்தினசாமி, குத்தாலிங்கம், மாடசாமி, வெற்றி, மாரியப்பன், மதியழகன், தமிழ்செல்வன், மாரியப்பன் சாமிராஜ், இசக்கிமணி, கல்யாணசுந்தரம், மாரிச்செல்வம், சிவன், மாரிச்செல்வன், முருகன், பெரியசாமி, தங்கபழம், ராமசாமி, ராமகிருஷ்ணன், காலசாமி, துரை, ராம்குமார், பூங்குன்றன், மாயாண்டி, திருவம்பலம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கதிர்ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 2000 ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது அப்போது குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா வரை சுமார் 8கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டது.

    மோர்தானா சாலை

    மோர்தானா சாலை பல இடங்களில் பழுதாகி இருந்ததனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் மோர்தானா சாலையை சீரமைக்க வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா கிராமம் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மோர்தானா சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    பூமி பூைஜ

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் தலைமை தாங்கினார்.ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கவுரப்பன், மனோகரன், ரஞ்சித்குமார், அமுதாலிங்கம், தீபிகா பரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீதாராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபத்மநாபன், தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கே.தயாள மூர்த்தி, எம்.சத்தியமூர்த்தி வனச்சரக அலுவலர் வினோபா உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார்.
    • 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் கட்டும்பணி மற்றும் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து பாண்டிச்சேரி வரை 29 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பணி ரூ.1,013 கோடி மதிப்பீட்டில் புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. ஜானகிபுரம் சந்திப்பில் புதியதாகபூஜ்ஜியம் கி.மீட்டராக நிலையாக வைத்து 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி - சென்னை நெடுஞ்சா லையில், அதிக ப்படியான வாகன ங்கள் சென்று வருவதால் பாதுகா ப்பான பயணத்தை உறுதிசெய்தி டும் பொருட்டு, பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் கூடுதலாக வைத்திடவும், எதிர்வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவை குறைத்து குறைந்த உயரத்தில் தடுப்புகள் அமைத்திடவும், வாகனங்கள் அதிகப்ப டியான வேகத்தில் செல்வ தனை கட்டுப்படுத்திடும் பொருட்டு தற்காலிக சிறிய அளவிலான வேகத்தடைகள் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றிட தலைக்கவசங்கள் வழங்கிடவும், பிரதிபலிக்கும் பட்டை உடைய ஆடைகளை அணிந்து பணியாற்றிடவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்வதோடு, வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இரவு நேரங்களில் பணிகள் நடைபெறும் சமயத்தில் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் பதாகைகள் ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவவாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • பொதுமக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்.

    சேலம்:

    மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவரும், அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் மேற்பார்வையில் சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மேட்டூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட அலுவலர்கள் கடந்த 11-ந் தேதி சம்பந்தப்பட்ட வண்டிக்காரன்காடு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பொதுமக்களின் வசதிக்காக ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரி வித்துள்ளார்.

    முன்னதாக, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மண் சாலை அமைத்து கொடுக்கும் பணியை தொடங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ×