search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.6.67 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    புதிய சாலைகள் அமைக்கும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்பட பலர் உள்ளனர்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.6.67 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    புதிய சாலை, ரூ.6.67 கோடி திட்டம், பயன்பாட்டிற்கு

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திக்குப்பட்ட பகுதிகளில் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், ரூ.6.67 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்த ஒரு திட்டமானாலும் உடனடியாக மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதில் முழு கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம்,மடவிளாகம் பகுதியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில் ரூ.90.84 லட்சத்தில் ரங்காம்பாளையம் முதல் நாமக்காரன்பாளையம் வரையிலும், சிவன்மலை ஊராட்சியில் ரூ.1.06 கோடியில் அரசம்பாளையம் முதல் சிவகிரிகோவில்பாளையம் வரையிலும், ரூ.40.97 லட்சத்தில் சிவன்மலை- வேலாயுதம்பாளையம் சாலை முதல் கோவில் பாளையம் சாலை வரையிலும், பாப்பினி ஊராட்சியில் ரூ.57.47 லட்சத்தில் ஈரோடு-தாராபுரம் சாலை முதல் மடவிளாகம் வழியாக நாட்டார்பாளையம் கரியகாட்டுவலசு வரையிலும், வீரணம்பாளையம் ஊராட்சியில் ரூ.88.25 லட்சத்தில் ஈரோடு-தாராபுரம் சாலை முதல் படியாண்டிபாளையம் வழியாகசத்திரவலசு படியாண்டிபாளையம் ஆதி திராவிடர் காலனி வரையிலும்உள்ளிட்ட காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.67 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசு, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி வரதராஜ், காங்கயம் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணைபிரகாஷ், காங்கயம் நகர செயலாளர் வசந்தம் நா.சோமலையப்பன், காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி, காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×